Translate

Friday, May 30, 2014

நல்ல மனசுக்கு நல்லது தான் நடக்கும்

     "மூன்று பறவைகள் அங்கொரு இங்கொரு மரமாக கூடு கட்டித் தனி தனியே வாழ்ந்து கொண்டு இருத்தன, அதில் இரண்டு பறவைகள் வஞ்சகம் கொண்டது மீதம் உள்ள ஒன்று அப்பாவி நல்ல மனசு கொண்டது. ஒரு நாள் மூன்று பறவையுமே இரை தேடி பயணப்பட்டது , வெகு தூரம் சென்றன , சூரியன் தண்ணீரில் மூழ்கும் காட்சி, தாகத்துக்கு இனிப்பான தண்ணீர் , இரைக்கு பஞ்சமில்லாமல் விதைகளும், ஆங்காங்கே ஆயிரகணக்கில் புழுக்களும் , பக்கத்தில்  பெரிய ஆலமரம் அங்கு இவர்களைப் போல் யாரும் இல்லை. மூவருக்கும் ஒரே சந்தோசம் , மகிழ்ச்சியின் கரையில் மனதை ஈரப்படுதினர்.
   வஞ்சக பறவையில் ஒன்று சொன்னது " இன்னைக்கு நம்ம கூட்டுக்கு போயிடலாம் , அங்க இருக்குற கொஞ்சம் வைக்கோல், குச்சி எல்லாம் எடுத்துகிட்டு வந்திடலாம் , அது நமக்கு ராசின்னு நினைகிறேன்" என்றதும் , சரி என்று மீதி இரண்டுமே சொன்னது. அனைவருமே இருட்டிய பின்னர் வந்து சேர்ந்தனர் , தங்களது கூட்டிற்கு சென்றனர். வஞ்சக பறவைகள் தனி தனியே திட்டம் தீட்டினர் , தனக்கு மட்டுமே அந்த இடத்திற்கு வழி தெரியும் என்று நினைத்தது , விடியலுக்கு முன்னரே கிளம்பிவிட வேண்டும் என யோசித்தனர். இரண்டுமே இரவு முழுக்க உறங்கவில்லை, விடியலுக்கு முன்னர் வஞ்சகத்தில் ஒன்று வெளியே வந்தது , மற்றொன்றும் அதே நேரத்தில் வெளியே வர, ஒரே வியப்பு . வஞ்சகத்தில் ஒன்று கேட்டது " இந்த நேரத்துல என்னா பா ??? " அதற்க்கு மற்றொன்று "சும்மானகாட்டியும் காத்து வர்ல அதான் !!!, சரி நீ என்னாத்துக்கு இந்த நேரத்துல அதுவும் குச்சி வைகொலோட" , " அதே காத்து இங்கையும் வர்ல , அப்பறம் எக்ஸ்சர்சைஸ் பண்லாம் ம்முனு " என்றது முதல் வஞ்சக பறவை.
     இரண்டிற்குமே தங்களது திட்டம் புலப் பட்டது, "நாம தனியா எஸ்கேப் ஆயிறலாம், இந்த டம்மிய (அப்பாவி பறவை) விட்டுட்டு போயிறலாம் , நாமளே அவளோதையும் அனுபவிக்கலாம்" என ஒன்று சொல்ல, இரண்டு வஞ்சகமுமே கிளம்பியது. சூரிய கதிர் மரங்களின் மீது ஊடுருவ அப்பாவி பறவை எழுந்தது, இரண்டு பறவைகளையும் அழைத்துக் கொண்டே இருந்தது, அண்டிய மரத்திலிருந்து யாருமே வரவில்லை, கிளையில் அமர்ந்து பார்த்தால் இரண்டு பறவையின் கூடுகள் களைந்து இருந்தது. அப்பாவி பறவைக்கு திக்கு தெரியவில்லை, முன் இரவில் வந்த வழியும் தெரியவில்லை, அவர்களைத்  தேடி சென்றது திசை தெரியாமல் புறப்பட்டது , சில மைல் கடந்தது, இதன் இறக்கைக்கு சக்தி இல்லை, தண்ணீர் தாகத்தின் உச்சியில், பக்கத்தில் உள்ள ஒரு மர   கிளையில் அமர்ந்தது , வெகு தூரத்தில் ஒரு  வேடன் தனது கூட்டாளிகளை வலையில் கட்டி சிறகுகள் சிதற குருதி சொட்ட நடந்தான். ஆப்பாவி பறவை கதறி கதறி அழுதது , அந்த வேடன் நடந்த பாதையில் , தனது கூட்டாளிகளின் குருதியில் தனது கண்ணீரைக் கலந்தது. மன முறிவுடன் தனது வெற்றிக்கு திரும்பியபோது , வழயில் ஒரு ஏறி , முழுக்க நவ தானியங்கள் கொட்டி கிடக்க , அப்பாவி பறவை தண்ணீரை குடித்து, தானியங்களை உண்ணும் போது " அவங்க ரெண்டு பேரும் இருந்த சந்தோசமா சாப்ட்டு இருப்பங்க ல" என்று தனது மனசு பேசியதை, செத்து போன வஞ்சக பறவையின் காதிற்கு கேட்டிருக்குமா ?? " 

 நம்மிடையே இந்த பெயரில்லா வஞ்சகங்கள் நிறைய பேர் உண்டு;
நல்ல மனசுக்கு நல்லது தான் நடக்கும்,
அவங்களுக்கு தீமை செய்தவர்களுக்கு கூட நல்லது தான் நினைப்பார்கள்,
அது தீமையாகவே நினைக்கமாட்டார்கள்,
நல்ல மனசுக்கு நல்லதே தான்  நடக்கும் !!

Saturday, May 17, 2014

முடிவு

   அவன் பெயர் இன்பம் , பழைய வாடகை வீட்டில் இருந்து புது வடகை வீட்டிற்கு குடி புகுந்தான், அவனது பழையவீடு மிகவும் மோசமானது எப்போது விழும் என்று தெரியாது, தனியாக வாழ்ந்தான் மகிழ்ச்சியோடு சுதந்திரமாக இருந்தான் வாடகை கம்மிதான், புது வீடு மிகவும் அழகானது, வலுவானது , அக்கம் பக்கத்தில் நிறைய மக்கள், வாடகை கொஞ்சம் அதிகம். இங்குள்ள பல மக்கள் வெகு காலமாக வசிக்கிறார்கள் , இவனை வாய் வழி நன்றாக உபசரித்து உள்ளத்தில் திட்டினார்கள் . "இவன் மட்டும் எப்படி கம்மி வாடகைக்கு வருவான் நாம் இவனை விட அதிகம் காசு கொடுக்கிறோம் அதே வீட்டிற்கு" ..
ஒரு நாள் இந்த மக்களின் குணம் அறிந்தான், துன்புற்றான், பழைய வீடே தேவலை என அவன் மனது சத்தமாக கூறியது ஆனால் காதிற்கு கேட்கவில்லை ஏனெனில் அவன் ஊனமுற்றவன் , திரும்பவும் வீடு பார்க்க முடியாது. காலத்தால் ரணம் ஆறினாலும் தழும்பைச் சொரியும் உலகம் இது.
பழய வீட்டில் தனியாக இருந்தாலும் நிறைய மக்கள் இருபதுபோல் ஒரு உணர்வு , புது வீட்டில் நிறைய மக்கள் இருந்தாலும் தன்னம் தனியே இருப்பது போல் ஒரு நிகழ்வு ! இந்த உலகம் அவனை பிளாட்போர்மிர்க்கோ , மரத்தடி நிழலையோ தேடவைக்கும் என்பதை நன்றாக உணர்ந்தான் அதற்காக அவன் பயப்பட வில்லை , ஒன்னுமே இல்லாத காந்தி சிரிக்கும் தாளுக்கு இப்படி அழுகிறார்களே என்று யோசித்தான் !!!
தப்பான முடிவு நம்மை எழச் செய்யும் என்று எண்ணினான்
இந்த இன்பம். துன்பமாக இருந்தாலும் இந்த நிலையில்லா வாழ்வில்
துன்பம் எவ்வளவு நாளைக்கு ? ஏதோ ஒரு நாளை இன்பமான விடியலாக இருக்கும்.
அவன் தப்பான முடிவையும் முழுமையாக ஏற்று அது காலத்தின் கூற்று தானே என எண்ணி !!
விசையோடு செல்கிறான் , எப்போதாவது ஒரு நல்ல மர நிழலோ , சுத்தமான பிளாட்போர்மோ கிடைக்கும் என்ற நல்ல முடிவுடன் .........

தப்பான முடிவு நம்மை எழச் செய்யும்; கலங்காதே !!!

December 6, 1992


   அது பலரக்கு மாலைப் போட்ட ஒரு மாலை , எல்லோரும் அங்கும் இங்கும் ஆகா உயிரைப் பிடித்துக்கொண்டு ஓடும் காட்சிகள்.
      
       எழிலுக்கு தங்கச்சி பாப்பா பிறந்திருக்கிறது அவன் அப்பா மருத்துவமனையில் இருக்கிறார், "டேய் சிவா  இங்க அண்ணி நல்ல இருக்கு பாப்பாக்கு தன் எதோ இன்பெக்ஷன்னு சொல்றாங்க , எழில கூட்டிகிட்டு ஹாச்பிதிரிக்கு வரியா ? " என எழிலின் அப்பா பீ.பீ நம்பருக்கு அழைக்க "கிளம்பி வறேன் ண்ணே " என்று சொன்னார் சிவா.  ஐந்து வயது சிறுவன் எழில் அவன் சித்தப்பா சிவா இருவரும் திருவல்லிக்கேணியில் உள்ள கோஷா மருத்துவமனைக்கு விரைந்து  கொண்டிருந்தார்கள். அது ஒரு மதியம், பெடல் வைத்த  டிவிஎஸ் 50யில் இருவரும் பயணித்தார்கள் , சிவா பெட்ரோல் போடா ஓரங்கட்டினர், "இந்தா தம்பி ஒரு லிட்டர் போடுப்பா" என்றார்,
"20 ரூபாயிக்கு சில்லரை இல்ல ணா " என்றான் பெட்ரோல் பங்க்கு பையன், "சரி 20 ரூபாய்க்கும் போடு.., ஆறு மாசத்துக்கு முன்னாடி தான் ஒரு ரூபா ஏத்திநீங்க, இப்போ 16 ரூபாயில இருக்கு இப்படியே போன 50 ரூப ஆயிடும் போல "  என்றார் சிவா சலிப்புடன். அமைதியாக கவனித்த எழில் "எப்போ ஹாஸ்பிட்டல் வரும் சித்தப்பா ?" என்று நச்சரித்தான் "தொ வந்துரும் டா " என்றார் சிவா.
       மருத்துவமனையில் நுழைந்தனர், சிவா எழிலைக் கூடிக்கொண்டு வார்டுக்கு நுழைய, அப்போது ஒரு நர்ஸ் ஒரு பிஞ்சு விரல் கொண்ட சிசுவை எடுத்துக்கொண்டு சென்றார், கண்கள் சிவக்க அழுது கொண்டே வந்தார் எழிலின் தந்தை, " என்னாச்சு ண்ணா .. ண்ணா " பதட்டத்துடன் சிவா. "போயிடுச்சு டா பாப்பா" என மெலிந்த குரலுடன் கண்ணீர் கன்னத்திலிருந்து தரையை முத்தமிட்டது. சிவாவும் அழ தொடங்கினார்,
"பத்து மாத கனவு வீட்டில்
 வாடகை இல்லாமல் இருந்து
 இருந்த வீட்டை பார்க்க விருப்பமில்லையோ"
      என்று  மனதின் அறையில் எதிரொலித்தது இதை பார்த்த எல்லோருக்கும். எழிலின் அப்பா சுதாரித்துக்கொண்டு "சிவா , எதோ கலவரமா நீ எழில் கூட்டிட்டு போ நான் இங்க இவள பாத்துக்குறேன், சீக்கிரமா போ டா " என்று சொல்லி எழிலை கட்டித் தழுவினார். ஒன்னும் புரியவில்லை எழிலுக்கு நம் மக்களைப் போல். " ண்ணா நான் இருக்கேன் இங்க" என்ற சிவா சொல்ல, முஸ்லிமுக்கும் ஹிந்துக்களுக்கும் எதோ சண்ட டா , நிலவரம் சரியில்ல நீ கிளம்பு டா" என்று சொன்னார் எழிலின் அப்பா. வருத்தப்பட்டு டிவிஎஸ் ஸ்டார்ட் செய்து எழிலை முன்னே உட்கார வைத்து கிளம்பினார் சிவா.
    தெருக்களில் யாரும் இல்லை , ஆங்காங்கே மக்கள் ஓடிக்கொண்டு இருக்க, வண்டி பாரதியார் சாலையை கடந்தது, 30 க்கும் மேற்ப்பட்ட இஸ்லாமிய சகோதரர்கள் வழி மறித்து சிவாவையும் எழிலையும்   அறுப்பு போட வண்டியை மடக்கினர். " உன் பேரு என்னடா " என்றார் ஒருவர், சிவா என்று சொன்னதும் , எழிலை தள்ளிவிட்டு சிவாவின் சட்டையை கிழித்து அடிக்க தொடங்கினர், எழில் " சித்தப்பா சித்தப்பா என அழ ஆரம்பிக்க" இதையும் போடணும் டா என ஒரு சகோதரர் கூற, சிவா எல்லோர் காலையும் தன் குருதி சிந்த பிடித்து " சார் சார் பச்சை குழந்த சார் விற்றுங்க சார் ...." என இரத்தமும் கண்ணீரும அபிஷேகமானது. தொலைவில் இருந்து மூச்ரைக்க ஓடி வந்த ஒரு சகோதரர் " ஹே .. யாரோ செஞ்சதுக்க இவங்க என்னடா பண்ணுவாங்க" என சிவாவையும் எழிலையும் பத்திரப்படுத்த முயற்சித்தார், அவருக்கு பயங்கரமான அரை விழுந்தது, " நம்ம எவ்ளோ குழந்த அனாதனு  தெரியுமா உனக்கு, நாடு முழுக்க பிண வாட எவ்வளோ அத்தர் போடுவ" என்றார் ஒருவர். " என்ன கொன்னுட்டு இவங்க ரெண்டு போரையும் எதாவது செய்ங்க டா " என்றார். போராடி சிவாவையும் எழிலையும் காப்பாற்றினார். "சார், இவன் தங்கச்சி செத்துபோச்சி சார், மனசுல புல்லா ரத்தம் இப்போ உடம்புலயும்,  இவன பத்திரமா கூட்டிட்டு போனும் சார் " என்று அழுதார் சிவா. அந்த நபர் " நீங்க வாங்க உங்கள நான் பத்திரமா உங்க ஏரியா வுல செகிரேன்" என்றார் சொன்னவாறு சேர்த்தார் அவர் பெயர் அப்துல்லா. சிவாவும் எழிலும் பத்திரமாக வீடு வந்தனர். இரத்தத்தோட வந்த சிவாவைப் பார்த்து அனைவரும் பதட்டமாயினர், சிவா எல்லோரிடம் இவர் தான் காப்பாற்றினார் என்று பெருமையாக கூறினார் குடிக்க அவருக்கு தண்ணீரும் குடுத்தார் .
     கிளம்பிய அப்துல்லா விடம் " சார் நான் அந்த முனை வரைக்கும் வறேன் எங்க மிருகங்க எதாவது உங்கள பண்ண போது " என்றார் சிவா.

    "ராமரும் அல்லா வும் வாழும் பிணங்களுக்கு எப்போ உயிர் ஊட்ட போறங்கன்னு தெரியல சிவா "  என்று சென்றார் அப்துல்லா .....
  "சிவாவும் அப்துல்லா தான் , அப்துல்லா வும் சிவா தான் மனிதநேயத்தில் "

" நானும் நீயும் பக்கத்து வீடுகரர்கள்
      வாடகை இல்லாமல் இருந்தோம்
      இருந்த வீட்டை யார் யாரோ
      சொந்தம் கொண்டடுகிறார்களே
       இது யாருக்கும் சொந்தமில்லை
        என்பதே உண்மை "

   







Thursday, May 15, 2014

தோல்வியின் வெற்றிகள்

    நாம் ஏதோ ஒரு செயலில் தோற்றுவிட்டோம் என்று அவ்வபோது நினைத்து கொண்டிருகிருக்கும் போது நம்மை புரிந்த இதயங்கள் நம் மனதின் உன்னதமான வெற்றியை இருளில் ஒளிரும் திரைஅரங்குப் போல பல வண்ணங்களில் கட்டுவர். தோல்வியின் தருணத்தில் நம் கண்களுக்கு யார் நம்மிடம் இருகிறார்கள் என்று சற்று கூட தெரியாது, இத்தருணம் தான் நாம் விழித்து சில உள்ளங்களின் மனதை வெற்றி பெற்றுள்ளோம் என்பதை உணர வேண்டும் !
    நான் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்பத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன், அங்குள்ளவர்களெல்லாம் விசித்திரமாகவே இருந்தார்கள் , தேநீர் அருந்தும்போது கூட ஆங்கிலம், போலி வேடம் என பல கேவலங்கள் அதில் ஒரு சில வைரங்களை நான் பார்த்தேன் அது ஒரே மாதிரி மின்னிக் கொண்டே இருக்கும். எனக்கு தெரிந்த நபர் பெயர் எழில் , அவர் ஒரு தலையாக காதலில் இருந்தார் , அந்த பெண்ணிடம் பேச கூட தைரியம் இல்லை அவருக்கு காலச் சூழல் அவரை தன் காதலை வெளிபடுத்த வைத்தது . அந்த பெண் பெயர் மதி , அவளும் எழிலை ஒரு தலையாக பார்த்து கொண்டிருந்தாள் , எழில் தன் காதலைச் சொல்லும்போது அவளும் செவி சைதாள். இருவரும் கண்ணியமாக காதலித்தனர், இதற்க்கு பெரிதும் உதவி செய்த நண்பர்கள் கோபி , வினோத் , சௌந்தர் , பிரேம் , தீனா மற்றும் பலர். எழிலை விட இவர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தனர்.இந்த ஐந்து பேர் மட்டும் தான் உள்ளத்திலும் வாயிலும் ஒரே மாதிரி பேசுவார்கள், அந்த அலுவலகதில் மதி எழில் காதலைப் பார்த்து பொறமை பட்டனர் , சபித்தவர்கள் ஏராளம் , அது தானே நியானம் இந்த உலகிற்கு.
    காதல் கண்ணிந்து பழமாகும் போது மதி வீட்டில் இவர்கள் காதலுக்கு ஒப்புக் கொள்ளவில்லை வழக்கம் போல் பிரிக்க முயற்சித்தனர் ஆனால் மதி பிடி கொடுக்கவில்லை. ஒரு நாள் "மாப்பிளை பார்க்க வராங்க நீ கிளம்பி ஊருக்கு வா" என மதியின் தாய் அழைக்க , மதி ஒரு முடிவோடு இருந்தாள் இதற்க்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று எண்ணி ஊருக்கு கிளம்பினாள். எழில் தான் ரயில் ஏற்றினான் நம்பி " பாத்து பேசு டி, சண்ட போடாத பத்துக்கோ" என ரயில் நகரும்போது கூவிக் கொண்டே இருந்தான். " இந்த பையன லாம் எவன் கல்யாணம் பண்ணுவ , அட போங்க நீங்க" என்று கூறினாள் மதி .
   இறுதியில் மதி சென்னை திரும்பவே இல்லை , பெட்ட்றோர் பார்த்த பையனோடு திருமணம் நடந்தது. எழில் எழிலற்று போனான் என்னாலும் எதுவும் செய்ய முடியவில்லை, கோபியின் தோளில் சாய்ந்து தேம்பி தேம்பி அவன் அழுதது என் கண் முன்னே இன்றும் நிற்கிறது. கோபி சமாதனம் படுத்தினார் " நாங்க இருக்கோம் டா , உன் நல்ல மனசுக்கு நல்லது தான் நடக்கும்" அவர் கண் கலங்கி சொன்னது கோபி ஒரு மாசற்ற தென்றலாக தெரிந்தார். எழில் வேலையே விட்டு செல்வதற்கு இருந்தான் , அப்போது சௌந்தர் தேம்பி அழுதது நட்பின் புனிதத்தை நான் வெளி இருந்து உணர்ந்தேன், தீனா எழிலை எப்படியாவது சோகத்தில் இருந்து மீட்ட வேண்டும் என்ற முயற்சியும், இறுதியில் அவனும் கண் கலங்கினான் எழில் வேலையை விட்டு செல்லும் போது . பிரேம் , வினோத் எப்படி எப்படியோ முயற்சி செய்து அவனை வேலை வீட்டு போக வேண்டாம் என்று தடுத்தனர்.
   எழில் குடி , தம் என் தீய பழக்கங்களின் கையில் விலங்கை மாட்டிக்கொண்டான், அவனுக்கு காதல் தோல்வி மட்டும் தான் கண்ணுக்கு தெரிந்தது , அவன் இதனை நண்பர்களின் மனதை வெற்றி பெற்றுள்ளான் என்பதை உணர வில்லை. நாம் இறந்த பிறகு தான் நம் முன்னே அழுவார்கள், அப்போது என்ன தெரியப்போது . எழில் எந்த ஜென்மத்தில் செய்த புண்ணியமோ இந்த மாதிரி உண்மையான மனிதர்கள் சம்பாரித்து வைத்திருக்கிறான், இப்போது எழில் எங்கே என்று தெரியவில்லை ஆனால் நன்றாக தான் இருக்கிறான்.
     கோபி , சௌந்தர், தீனா , பிரேம் , வினோத் என இந்த மாதிரியான நண்பர்கள் நம் ஒவ்வொரு வாழ்க்கையிலையும் இருகிறார்கள். பிரிவில் தான் நாம் இவர்களை தெளிவாக மனதில் பார்ப்போம். என்னை பொறுத்த வரை இவர்கள் ஹீரோக்கள் , இன்னொரு இதயத்துக்காக இவர்கள் துடித்தார்கள்.
     இந்த மாதிரியான ஹீரோக்கள் தான் நம் தோல்வியின் வெற்றிகள்.  

Tuesday, May 13, 2014

மொக்க ஆடு

      "ஞாயிறு காலை , ஒரு தெருவுல இரண்டு ஆடுகள் எதிர் எதிரே நடந்து அதில் வந்தது , ஒன்று மோசமான ரவுடி ஆடு  , இன்னொன்று மொக்க ஆடு பயந்த சுபாவம். ஒன்றேக்கொன்று நெருங்கி கொண்டு வந்தது , மொக்க ஆடு ரவுடி ஆட்டைப் பார்த்து பயந்து ஒதுங்கியது. ரவுடி ஆட்டுக்கு தன் ஹீரோயிசத்தை காண்பித்தே ஆகா வேண்டும் என்ற முடிவு, மொக்க ஆட்டை முறைத்து  தன் தலையை ஆட்டி , புழுதி பறக்க காலைத் தரையோடு சீறியது. மொக்க ஆடோ " நம்ப இன்னைக்கி கைமா தான்" என்று மைன்ட் வாய்சு ஓட இதுவும் ஓட ஆரம்பித்தது.
    ரவடி ஆடு , மொக்க ஆட்டை துரத்து துரதென விரட்டி கொண்டே இருந்தது , நாக்கு தள்ள வாயில் நுரை தப்ப மொக்க ஆடு ரத்த காவுக்கு பயந்து உசேன் போல்ட் ஐ விட வேகம் பிடித்தது, ரவுடி ஆடும் சலைத்த வாரு இல்லை. சாமர்த்தியமாக மொக்க ஆடு ஒரு வீட்டின் பின்புறம் மறைந்து கொண்டது, ரவுடி ஆடு பயங்கரமா கான்டாச்சு அங்கும் இங்கும் தேடிய பின்னர் தன் வழி பார்த்து சென்றது. மொக்க ஆடு     தப்பித்தது , அப்படி ஒரு நிம்மதி , அப்படி ஒரு சந்தோசம்  அதன் கண்களில்  "கடவுளே நன்றி நன்றி " என தன் மொழியில் "மே .. மே .. மே .."  கூறியது.
   சரி தப்பித்தோம் வெளியே செல்லலாம் என்று பார்த்து, வந்த வழி வந்தால் கதவு மூடிக்கிடந்தது . அதனால் முன் பக்கமாக நகர்ந்தால் பெரிய கடை, அன்வர் மட்டன் ஸ்டால் என்கிற  போர்டு இருக்க  . தன்னைப் போல ஒரு உடல் ஆணியில் தொங்கிக்கொண்டிருந்தது. மொக்க ஆடு பின் ஜகா வாங்க அன்வர் பார்த்தான் " யா அல்லா உன் கருணையே கருணை " என்றான்! .. .."
   மொக்க ஆடு , அந்த ரவுடி ஆட்டை அதிர்திருந்தால் ஒரு சிறு அடியோட தப்பித்து அடுத்த முறை பக்கா ஆடாக மாறி இருந்திருக்கும்...

    மோசமான ரவுடி ஆடு நம் சில பிரச்சனைகளும் , சூழ்சிகளும்; இதை கண்டு பயந்து ஓடி தப்பித்தோம் என்று எண்ணி கடவுளுக்கு உடனே நன்றி சொல்வோம் இறுதியில் பல  பிரச்சனைகளின் கூடாரத்தில் சிக்கி கொள்வோம். 
 ஓடாமல் எந்த பிரச்சனையானாலும் எதிர் நிற்போம், கால் உடைந்தாலும்  தவழுவோம் இறுதியில் வெற்றியும் காண்போம் நிச்சியமாக , கண்டிப்பாக !!! 
  நானும் அந்த மொக்க ஆடு தான்  :-( !

Sunday, May 4, 2014

எங்களை மன்னித்துவிடு தோழியே !!

அவள் குழந்தையாக, சகோதரியாக, பேத்தியாக, தோழியாக ,காதலியாக இப்படி ஒரு செய்தியாக நம் இதயம் நோக,
அவள் பசியோடு இருந்திருப்பாளோ ?
அன்று முன் இரவில் என்ன கனவு கண்டாளோ ?
தன் தாய் தந்தைக்கும் என்ன வாங்கி வந்தாளோ ?
நீ சென்னையில் வாங்க வந்ததை விட்டு உன் உயிர் வாங்கிவிட்டார்களே !
அவள் கனவு பிளக்க, குருதி சிதற, எங்கள் நெஞ்சு சிதறியது.
நெஞ்சு பொறுக்கவில்லை உன்னை உயிரில்லா மரம் போல் பார்க்க.
எங்களால் முடிந்தது எங்கள் கண்மணியை உப்பு தண்ணீர் துளியால் ஊறவைப்போம்.
எங்களை மன்னித்துவிடு தோழியே!

அரசியல் பசிக்கு இரையானாயோ ?
முன்னால் இந்தியர்களின் சதியா ?
சென்னையில் வெயில் அதிகமென்று உன்னை குளிர் சாதனத்தில் வைக்க நினைத்த அந்த கழிவு யார் ?
நாங்கள் இன்னும் கோழைகள் தான் !
தெரிந்து உயிர் நீத்த சகோதரி செங்கொடி, சகோதரன் முத்துக்குமரனையும் மறந்தோம் நீதியும் மறந்தோம் !!
நீ அப்பாவியாக சென்றாய் உனக்கு எப்படி ???

எங்களை மன்னித்துவிடு தோழியே !!

வாழக்கை வாழ்வதற்கே !!

தேடித் தேடிப் பள்ளியில் சேர்த்து ,
தினம் தினம் கல்வி பயின்று
பணம் பணம் என வேலையோடி
பொதிந்த நகையை, நங்கையுடன் பிடித்து ,
பொருளும் வம்சமும் குட்டிப் போட
தேடித் தேடி முதியொரில்லதைப் பார்த்து
மரியாதையிழந்து , மகிழ்ச்சியிழந்து 
பண்பிழந்து , ஈகையிழந்து
தினம் தினம் மனதில் செத்து,
பிணம் பிணம் என ஆகப்போகிறாயே !!
வாழக்கை வாழ்வதற்கே !!

செடிகள் வேரூன்றும் ..

வாழ்கையெனும் நடைபாதையில் வேரில்லா செடிகள்
     வறுமையும் வெறுமையும் படர்ந்த கொடிகள் ,
மழையை எதிர்பார்க்கும் இலைகளின் தவிப்பு
     மானுட கருணையில் குடையில்லாமல் நனையும் ,
இயற்கையின் சீற்றம், காலத்தின் மாற்றம்
     இன்றியமையாமல் வாழ மனதின் ஏற்றம் ,
எல்லாம் அவன் கொடுத்த ஈகை
   எண்ணற்றச் செடிகளுக்கு கைமாற்றுச் செய்க ,
நம் வாழ்வில் வானவில் படரும்
   நாடெங்கும் செடிகள் வேரூன்றி வளரும் !

Thursday, May 1, 2014

வெள்ளை காகிதம் பத்தரமாகலாம் !

    உப்புக் கற்று , நீளமான இரு நீலங்கள்; தங்கம் போல் மின்னும் சூரிய ஒளி; பதமான சூடு நம்மேல் ; மெல்லியே இசை போல் தென்றல் வந்து தீண்டும் ; கொண்டை வைத்த கார்கள் செல்ல ;  யாருமில்லாத அறையின் கடைசியில்  உடைந்த இரும்பு நாற்காலிகள் எங்கள்ளுக்காகக் காத்துக் கொண்டிருக்கும். 

       சென்னை மாநில கல்லூரியில் எம்.சி.ஏ படித்தக் காலம் , இல்லை இல்லை !!! சென்ற காலம். என் துறை நண்பர்கள் யார் என்று இரண்டு வருடங்கள் கழித்து கூட  தெரியாது  எனக்கு, கேவலமான பெருமை அதில். கம்ப்யூட்டர் , கோடிங் , ப்ரோக்ராம், அல்கோரிதம் இதை எல்லாம் கேள்வி கூட பட வில்லை , மூன்று ஆண்டுகள் கழித்தும் தெரியாது புரியாது எனக்கு. என் வகுப்பில் 25 பேர் , என்னக்கு மிகவும் நெருங்கிய நண்பர்கள் வினோத், விடுதலை. விடுதலை ஒரு தெளிந்த நீரோட்டம் , கள்ளம் கபடமில்லாத இதயம், உள்ளே வெளியே  அழகிய தோற்றமுடையவன் . வினோத் என்றல் இனிமை , அவன் கோவப்பட்டு நான் பார்த்ததில்லை, எனக்கும் விடுதலைக்கும் ப்ரோக்ராம் போட்டு ப்ரோக்ராம் சொல்லி குடுத்தான். வினோத் விடுதலை இருவருமே தன்னம்பிக்கையின் இரு கைகள்.
 
      விடுதலை, ஊர் நீடாமங்கலம்; 15 அரீயர்கள் கடைசி பெஞ்சு; ஆசிர்யர்களுக்குப் பிடிக்காத முகம் , எப்போதும் அவனை திட்டிக்க் கொண்டே இருப்பார்கள். ஒரு உண்மை யாருக்கும் சொல்லாதீர்கள்,விடுதலைக்கு தெரிந்தது கூட அவர்களுக்கு தெரியாது. பாவம் அவர்கள். செமினரீல் தூங்கிய மங்கை மடமின் கொறட்டை சத்தம் எனக்கு கேட்கிறது. இங்கிலிஷில் பேசி சப்ஜெக்ட்டைக் கோட்டை விடும் க்லடிசே மேடம். எதற்கு இவர்களை வேலைக்குச் சேர்த்தார்கள் என்று நினைக்கப்படும் வெண்ணிலா மற்றும் மலர்கொடி மேடம்;என்னக்கு டி.சி கொடுத்து அழகு பார்க்க எண்ணிய ரமா மேடம். இவர்கள் இன்று திருந்தி இருப்பார்கள்என்று நம்புகிறேன். ஒரு புத்தகத்தில் எல்லா பக்கங்களும் நல்ல இருக்குமா ? அப்படித்தான் எங்கள் அரசு கல்லூரியும். அதிக பட்சம் 2 மணி நேரம் கூட கிளாஸ் நடக்காது. மேடம்களுக்கு விருபியவர்கள் மட்டும் மார்க் அதிகம் எடுப்பார்கள், எனக்கும் விடுதலைக்கும் அதில் அக்கறையே இருக்காது. ஒரு நாள் நானும் அவனும் நயன்தார விஷாலை சத்யம் ஷூட்டிங்கில் பார்த்தோம் , "நயன்தார செம்ம ஒல்லி   , விஷால் கருப்பு டா மாப்ல " வழியெங்கும் நிற்கும் டிராபிக் போலீசிடம் மட்டும் தான் சொல்லவில்லை.

    15 அரியர்கள் இருந்தும் அவன் கலங்கவில்லை , ஆறாவது செமஸ்டரில் மொத்தமாக அரியர்கள் ஆப்பு வெய்தான்! பீ. எச். பீ கற்று கொண்டான், அவன் இளங்கலை இயற்பியலில் முடித்தவன் , நிறைய சிரமப் பட்டு எம்.சி. ஏ படித்தான். "மாப்ல , எப்படியாவது படிச்சி ஐ. டி ல வேலைக்கு போகணும் டா, நம்பள கேலி செஞ்சவங்களுக்கு நம்பளோட மௌனமான பதிலா இருக்கணும் டா " , என்னை நெகிழ வைத்தது. இன்று விடுதலை முக நூல் நிறுவனத்தின் வழி வரும் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் மென்பொருள் உருவக்கியளராக பணி புரிகிறான்.
வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்தவர்கள் கூட இவ்வளவு பெரிய இடத்தில் இல்லை, ஆனால் நண்பன்  நினைத்து பார்க்காத தூரத்தில் இருக்கிறான் இன்னும் அதே பழைய விடுதலையாக!

      வினோத் , பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை கணினி பயின்று இங்கு வந்தான் முதுகலைக்காக, ஊர் திருவண்ணாமலை ! இளங்கலை படிப்பு முதல் முதுகலை வரை அவனே வேலை செய்து படித்தான். வீட்டில் காசு எதிர் பார்க்கவே இல்லை ; நன்றாக படிப்பான் எல்லோருக்கும் சொல்லி கொடுப்பான். நானும் அவனும் ஒரு நாள் முழுக்க அரசியல் பேசுவோம் , கல்லூரி நூலகத்தில் எல்லா நாள் இதழையும் படித்து முடித்துவிட்டு , ஒரு டீ அருந்தி ஒரு மணி நேரத்துக்கும் மேல் பேசிக்கொண்டே இருப்போம் . PWD காண்டீனில் 15 ருபாய் மினி சாப்பாடு சாப்பிட்டு "மாமா பாமக ஏன் இப்படி பண்றானுங்க " என ஆரம்பித்து ஒபாமா வரை ஓடும் !
      வினோத் , வகுப்பில் எல்லோருக்கும் பிடித்தவன் , ஒரு செம்ல அக்கௌண்ட்ஸ் பரீட்சை , கோவில் அன்னதானம் செய்வதுபோல் எல்லோரையும் உட்ட்காரவெய்து சொல்லி கொடுத்தான் , அனைவரும் 80 மார்க்கும் மேலாக எடுத்தார்கள். நானும் அவனும் பட்ட படிப்பு சான்றிதழ் வாங்குவதை கம்யூனிஸ்ட் போல புறக்கணித்தோம். மேடம்கள் எல்லாம் எனக்கு  சாபம் கொடுத்தார்கள், அதுவும் வேடிக்கையாகவே இருந்தது . இன்று வினோத் அவன் சிறு வயதில் காதலித்த பெண்ணையே திருமணம் செய்து ஒரு ஆண் குட்டி இருக்கு இப்போ , IBM பெங்களூர்ல மென்பொருள் உருவக்கியளராக பணி புரிகிறான்.

           ன்னொரு நண்பன் இம்ரான் இவனும் MCA தான், இம்ரான் என்ற பெயர் ஒலித்தால் எனக்குள் ஒரு அமைதி வரும் அது ஏன் என்று உங்களுக்கு புலப்படும் என நம்புகிறேன். தர்மபுரி மாவட்டத்தை சார்ந்தவன் இம்ரான் பாஷா. எவ்வளவு பெரிய காரியத்தையும் முடித்து அவன் தான் முடிதான என நமக்கு சந்தேகம் வரும் , எல்லாவற்றையும் சிறப்பாக முடித்து அலட்டிக் கொள்ளாத ஜீவன். நன்றாக படிப்பான் ஆனால் இதுவரை அவனது மதிப்பெண்களை யாரிடமும் சொன்னதில்லை அது குறைவாக இருக்கும் என்று யோசிக்க வேண்டாம், எல்லா படங்களிலும் 75 % க்கும் மேல் இருக்கும் அவனின் மதிப்பெண்கள். சரி ! ஏன் அவன் வெளியே சொல்லி பறைசாட்டாமல் இருக்கிறான் என்பதற்கு , இம்ரானின் நண்பர்கள் நாங்கள் பாஸ் மார்க் கூட எடுக்க  மாட்டோம் எங்கே எங்கள் மனது வலிக்குமோ என்ற எண்ணத்தில் சொன்னதில்லை அவன். நண்பர்கள் வட்டாரத்தில் " மச்சா நீ நல்ல வந்துடுவடா " என்ற  சொற்கள் அவனின் மேன்மையின் புனித மேகம் அது மழையாக வரும் போது அளவற்ற மகிழ்ச்சி. இம்ரான் IT கனவு இல்லை , வியாபாரம் தான்.எல்லோரும் " ஏண்டா மாப்ள ரிஸ்க் எடுக்கற , எதாவது IT கம்பனில வேலைக்கு போ நல்ல சம்பளம் டா மாப்ள" என்று சொன்னபோதிலும் வியாபாரத்தை தன் குறிகோளாகக் கொண்டு முன் சென்றான்.
      கல்லூரி படிப்பு முடிந்தவுடன் மகிந்திரா பைக்களுக்கு டீலர்ஷிப் எடுத்தான் தர்மபுரியில், எப்படி ஒரு கணினி மாணவன் வேறு திசையில் செல்கிறான், அப்படி செல்ல வேண்டுமாயின் அதற்கு எவ்வளவு தீர்க்கமான சிந்தியல் தேவை , தன்னம்பிக்கை தேவை அது நிறையவே இருந்தது இம்ரானிடம். பின்னர் மகிந்திரா ஷோ ரூம் வைத்தான் மெதுவாக வியாபாரம் இருந்தது ஆனாலும் துவளவில்லை போராடினான் விடாமுயற்சியின் பிரதிபலிப்பு இன்று அவன் ஷோ ரூம் பெரியளவில் தர்மபுரியில் புகழ் பெற்று வளர்ந்திருக்கிறது அதுமட்டும் அல்லாது சர்வீஸ் சென்டரும் அங்கே நிறுவினான், இவ்வளவு செய்தும் ஒரு வெள்ளை காகிதமாக எதுவும் செய்யாது  போலவே இருப்பான். யாரும் இம்ரான் இந்தளவிற்கு வருவான் என்று நினைக்கவில்லை அவர்கள் எல்லோர்க்கும் பதிலடி தன் வளர்ச்சியில் சொன்னான்.
    அமைதியாகவும் அளப்பரையிள்ளமலும் இருந்தால் நாமும் இம்ரானாகலாம்.
    
      மூவரும் கிராமங்களில் இருந்து வந்து சென்னையில் இறங்கி  , தனம்பிக்கை மட்டுமே மூலதனமாக வைத்து உழைத்து முன்னேறிக் கொண்டிருக்கும் காலத்தின் இசை அறிந்த  யுவன்கள் !!
 வெள்ளை காகிதம் பத்தரமாகலாம் அவசரப்பட்டு  கசக்காதீர் ...