Translate

Tuesday, April 25, 2017

வாழ்க்கைத் துணைநலம்



மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

     ஓ பாசிட்டிவ் ரத்தம் தேவைப்படுகிறது எனும் குறுஞ்செய்தி வந்தவுடன் சாவரிக்காக காத்திக்கிடந்து கந்தன் செய்தி வந்த எண்ணிற்கு அழைத்து பேசினார், விரைந்து மருத்துவமனைக்கும் சென்றார், இருபத்தி எட்டு வயது இளைஞருக்கு இருதய அறுவைசிகிச்சைக்காக என்பதை அறிந்தார். அந்த இளைஞரின் தந்தை விம்மி புலம்பி அழுதுகொண்டிருந்தார் "சம்பாரி..சம்பாரி னு எவளோ பிரஷர் குடுத்தா அவன் பொண்டாட்டி  ... ஐயோ...ஐயோ."

                    கந்தன் ரத்தம் கொடுத்திவிட்டு அங்கிருந்து கிளம்பினார், தனது ஆட்டோவில் செல்லும் போது அந்த தந்தையின் அழுகுரல் உடன் வந்தவாறே இருந்தது, அப்பொழுது தன் மனைவியை பற்றி சிந்திக்கலானார், ஆட்டோ ஒட்டிக்கொண்டு தானே பேசினார் " டெய்லி 500 ரூபா கெடச்சா பெரிய விஷயம், இதுவரைக்கும் அவ நேத்து ஜாஸ்தியா இருந்துது இன்னைக்கி கம்மியா இருக்கே ன்னு சொன்னது இல்ல, நான் குடுக்கற காச வெச்சி தான் குகன்க்கு ஸ்கூல் பீஸ் , புக்ஸ் லாம் வாங்கி தறா, சமைக்கிறா, சேத்து வெச்ச
காசுல சீட்டு போடுறா, அவள இதுவரைக்கும் பாராட்டி பேசுனதே இல்ல அவ அருமை இப்பதான் தெரியுது, அவ உண்மையான வாழ்க்கை துணை.

Friday, April 21, 2017

மானம்

இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்.

  "அந்த ஷாட்டுக்கு  லென்ஸ் வேற மாத்தணும், டெலி யூஸ் பண்ணு " என்று சொல்லி நகர்ந்தான் ராஜேஷ், பார்த்த மாத்திரத்தில் பலுக்கலை (Lens) சொல்லக்கூடியவன், அற்புதமான நிழற்பட கலைஞன்; அந்த நிறுவனமே ராஜேஷை நம்பி ஓடிக்கொண்டிருந்தது. மேலும் நிறுவனத்தில் அவனுக்கு அனைத்து சலுகையும் நல்ல சம்பளமும் அளித்தனர். ஒரு நாள் விடுப்பெடுத்தால் நிறுவனமே ஸ்தம்பித்த சூழல் உருவாகும், ராஜா வாக வாழந்து வந்தான் ராஜேஷ் !
      "என்ன இருந்தாலும் முதலாளிக்கு இப்படி துரோகம்  பண்ணியிருக்க கூடாது  அவன்.. " என ஒரே எதிரொலியாக நிறுவனத்தில் ஒலித்துக்கொண்டிருந்தது.
       "என்னையா , ராஜேஷ் ,.. நம்ம கம்பனிக்கு வர விளம்பர ஆர்டர் லாம் அவன் சொந்தக்காரன் கம்பெனிக்கு திருப்பி விட்றானமே"  என்ற பேச்சை முதலாளி காதிலே விழ, அதீத மனம் வருந்தினார.ராஜேஷை தனது அறைக்கு வர சொன்னார். இரண்டு நிமிடங்கள் எதுவுமே பேசவில்லை முதலாளி எதுவும் சொல்லாமல் " ஒன்னும் இல்ல ராஜேஷ் .. வேலைய பாருங்க " என்று தயக்கத்துடன் சொல்லி அனுப்பினார்.
          எல்லா கூற்றையும் தெரிந்த ராஜேஷ் அமைதிகாத்தன் மனம் வருந்தினான், அடுத்த நாளிலிருந்து அவன் அந்த நிறுவனத்திற்கு வேலைக்கு செல்லவில்லை, உதறிவிட்டான்; அலைபேசி வந்தது அவனை பணிக்கு வர கூறி இருப்பின் அவன் முடிவில் நின்றான். ஏன் இந்த முடிவு என அவன் தங்கை கேட்கையில் அதற்கு " ஒரு வேலை அதுல நம்மதான் ராஜா, நம்மளால தான் பண்ண முடியும்ன்னு இருந்தாலும் அந்த இடத்துல ஒரு சின்ன இழிவு ஏற்பட்டுடுச்சினா அங்க இருக்குறது தான் இழிவு அதனால நஷ்டம் எவளோ ஆனாலும் செரி..அதான் வெளிய வந்துட்டேன் " என்றான் ராஜேஷ் .
       
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்.

          

Wednesday, April 19, 2017

வான் சிறப்பு


நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்

          அவன் தேர்ந்த திறமைசாலி, நல்ல கதைசொல்லி ஒரு பெரிய இயக்குனரிடம் உதவி இயக்குனனாக பணியாற்றிக்கொண்டிருந்தான்.என்றுமே எதிர்பாராத அந்த நாள் வந்தது, அவன் தன் இயக்குனர் எடுத்த காட்சியில் பிழையை கூறினான், இயக்குனருக்கு அது தவறில்லை எனவும் தன்  அகம்பாவத்தையும் காட்டினார். அவனுக்கு சாபமிட்டார் 'ஒரு போதும் உனக்கு படம் இயக்க வாய்ப்பே கிடைக்காது' என. அவ்வார்த்தைகளை அடுப்பாங்கறை மூளையில் தூசிக்கு நடுவே சொருகினான். அவன்  பெருமுயற்சியுடன் ஒரு கதையை தயார் செய்தான் ஒரு நடிகரும் ஒப்பந்தமானார் ஆனால் தயாரிப்பாளர் கிட்டவில்லை; மனம் தளராது போராடினான் இப்பவும் கிடைக்கவில்லை ஜனங்களிடம் வசூல் (Crowd funding) செய்து படம் துவங்கலாம் என்ற முயற்சியுடன் ஆரம்பித்தான் கணிசமான தொகை வந்தது, படப்பிடிப்பு ஆரம்பமானது; படம் முடிந்து வெளியானது, மாபெரும் வெற்றி, வசூல் சாதனை படைத்தது; அவன் பெரிய இடத்திற்கு சென்றான், அடுத்த படம் வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில் ஒப்பந்தமானான்; அவனுடைய இயக்குனர் பணத்தட்டுப்பாடு வந்தது அதை கேட்டதும் அவன் பணம் தர முற்படவில்லை ஆயின் அவருக்கு பல வாய்ப்புகள் வரவழைத்து பணம் புழக்கம் அதிகம் பெற செய்தான், இது அந்த இயக்குனருக்கு தெரியாது. இப்படியேயாக போக அந்த மாநகரில் பேரிடர் மழை வெள்ளம், மக்கள் அவதிப்பட்டனர் சிறிது நாட்களில் சற்று சீரானது ஆனால் பலர் வீடில்லாமல் இருந்தார்கள், அவன் வீடிழந்தவர்கள் என நூறுக்கும் மேற்பட்ட குடும்பத்திற்கு  சென்று பணம் கொடுத்துதான் அவனிடம் கடேசி ரூபாய் இருக்கும்வரை கொடுத்தான்.
    அவன் உதவியாளன் "சார், வேஸ்ட் சார் நீங்க; எதுக்கு தேவ இல்லாம உதவி செய்றீங்க"
  அதற்கு அவன் " உதாரணத்துக்கு , கடல்ல இருந்து மழை மேகம்  உருவாகுது, சரியான நேரத்துல மழை பெய்யல்லனா கடல் கூட வத்தி போய்டும் அப்படி தான் இதுவும்.."

Monday, April 17, 2017

~ரசனையாளன்~

~ரசனையாளன்~


காரிருளில் திடமான நட்சத்திரங்கள்,
மின்னிக்கொண்டிருக்கும் தெரு விளக்குகள்,
அடர்ந்த இரவில் பேன் போல நகர்கிறேன்;
நடைபாதை வியாபாரி கடையை மூடி கற்பூரம் கொளுத்த,
அப்பிரகாசத்தில்
பச்சை நிற சில்க் புடவையில் வெள்ளையான திருநங்கை
எதையோ துறக்கிறாள்;
பாஞ்ச் ருப்பியே குலஃபி ஐஸும்,
மலையாள தம்பதியும் காதலின் வெளிச்சமா காமத்தின் இருளா ??
ஒட்டும் போஸ்டர்களின் பசைக்கு தெரியும்
ஒட்டிய கையின் பசியை;
இரவில் போதையா
போதையில் இரவா ??
எங்கும் இளையராஜா,நிலவு இல்லா நாளிலும்;
நிசபதமும் ஓங்கார அமைதியும்
சத்தம்போடும் சிறு பூச்சியும்
கொசுக்கடி தூக்கத்தின் நடுவே
ரசனையின் உச்சமாய்
இரவின் மிச்சமாய்
மின்மினயாய் வண்டி ஊர்ந்தது;
வண்ணம்புரியாத விளக்குகள் விட்டு விட்டு எரிய,
வண்டியை யாரோ நிறுத்தினார்,
"ஊதுங்க" என்றார் ..
ரசனையின் ரசம் குப்பென போனது....