Translate

Sunday, October 26, 2014

பூனை பூனை தான் புலி புலி தான் !!

        வேலைத்தேடி அலையும் பல திறமைசாலிகளில் ரவியும் ஒருவன் இவனின் மூன்றாவது கை அலைபேசி, எல்லா நேரங்களில் தலை குனிந்தே நடக்கும் அடக்கமான ஆ(ண்)ன் லைன் காரன். இப்படியாக நடந்து செல்லும் போது தலை நிமிர்ந்து நடந்து வந்தான்.
 " டேய் ரவி!.." என அழைக்க 
  புன்சிரிப்புடன் தலை நிமிர்ந்த ரவி  "முருகா ...." என்றான்  .
"என்னடா ! மொபைல பாத்து சிரிச்சிகிட்டே இருக்க ??"
" 'வாட்ஸ் ஆப்' பிரெண்ட்ஸ் முருகா..  ! நீ என்ன ஏரியா பக்கம் ஆளே காணோம்"
" ஒரு இலக்கிய திருவிழா கோயம்புத்தூர் ல நடத்து அதுக்கு போய் இருந்தேன் டா "
" கலக்குற முருகா, புது பத்திரிக்க வேல எப்படி போகுது ?, அப்பறம் உன் நம்பர் மிஸ் ஆயிடுச்சு குடு டா , உன்னையும் நம்ப ஏரியா வாட்ஸ் ஆப் குரூப் ல ஆட் பண்ணிடுறேன்"
 " நல்லா போது ரவி! நான் 1100 மொபைல் வெச்சி இருக்கேன் அதுல அந்த எதுவும் இல்ல!!  (சிரிப்புடன்)"
 "அட பாவி ஆதாம் ஏவாள் மொபைல் டா அது !!!  செரி மிஸ்டு கால் கொடு நான் நம்பர் சேவ் பண்ணிடறேன்"
 "(சிரித்துகொண்டே) மொபைல் எடுத்துட்டு வரல , ரெண்டு நாள் சுவிட்ச் ஆப் பண்ணிட்டேன் டா, சொல்றேன் நம்பர் நோட் பணிக்கோ 9*********6"
 "அட கடவுளே முருகா இந்த லூசு முருகன எப்படியாவது காப்பாத்து, டேய் 1100 வெச்சி இருக்கறதே மகா குற்றம் அதையும் சுவிட்ச் ஆப் பண்ணிட்ட ! ஏண்டா ?" என்று ரவி கேட்க.
" ரெண்டு நாள் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஒரு நாள் மொபைல் இல்லாம இருந்து பார் ! நீ அவ்வளோ மகிழ்ச்சிய இருப்ப ! யாருக்கும் பதில் சொல்ல வேணாம் , நட வண்டியில்லாம ஒரு குழந்தை சுதந்தரமா நடக்கும் போது வர மகிழ்ச்சிய நீ அனுபவிக்கலாம் !!! நான் கிளம்புறேன் ரவி , பாக்கலாம் ! பாய் !!!"
"பாக்கலாம் முருகா ! பாய் "
  ரவி , முருகனுடைய சித்தாந்தத்தில் மூழ்கி தானும் ஒரு நாள் அலைபேசி இல்லாமல் வாழ்ந்து பார்கலாம் என்ற முடிவை எடுத்தான், மறுநாள் தன் அலைபேசியை அணைத்தான். ஒரு மணி நேரம் கூட கடக்க வில்லை அவன் மனதில் யார் "வாட்ஸ் ஆப் பில்" செய்த அனுப்பிருப்பார்களோ ? என்ற ஆர்வமும் பதட்டமும் அதிகரித்து கொண்டே இருந்தது, இருபினும் விடா பிடியோடு இருந்தான் ரவி. முருகன் சொன்னது போல் ரவி க்கு ஒரு வித சுதந்திரம் கிடைத்தது, அவன் கடைத்தெருவிற்கு நடக்கும் போது இவளோ நாள் இருந்த மரத்த யார் வெட்டி இருப்பா ? இவளோ அழகான குட்டி நாய் இங்க எப்படி வந்தது ? என பல கேள்விகளுடன் நடக்க ஆரம்பித்தான், அடுத்த நாளில் இருந்து அலைபேசி அணைக்காமலே இதையெல்லாம் ரசிக்க வேண்டும் என்ற சிந்தையும் தட்டியது. இந்த நாள் அவனுக்கு அற்புதமான ஞானம் பொங்கிய நாளானது !!
     " செரி , மொபைல சுவிட்ச் ஆன் பண்ணுவோம் " என்று ரவியின் மனக்குரல் சொன்னது.
    பெரிய விதத்தில் அவனுக்கு குறு செய்தியோ அல்லது மற்ற செய்திகளோ வந்தாற்போல இல்லை.
  மறு நாள் காலை யாருக்கோ ரவி அலைபேசியில் அழைத்தான்.
" சார்! நான் ராம் தம்பி ரவி பேசுறேன் !! இன்டர்வ்யு கால் வரும்னு சொன்னீங்க வரவே இல்லையே "
" நேத்து பூர உனக்கு கம்பனில இருந்து கால் பண்ணி வேறுத்துட்டாங்க ! இன்னொரு ஆள எடுத்துட்டாங்க !! போன வை பா .."
  " தெரியாம சுவிட்ச் ஆப் பண்ணிட்டேனோ" என்ற மைண்ட் வாய்ஸ் எதிரொலித்தது.
        ரவி மட்டும் அல்ல எல்லோரும் எதையாவது பார்த்து உடனே சூடு போட்டுக்கொள்கிறோம், நமக்கு இது ஏற்புடையதா என சிந்திக்க தவறுகிறோம். சூடு போட்ட தழும்பு அவமானங்களாக , ஏமாற்றங்களாக , தோல்வியாக இருக்கிறது.
 
தன்னிலையை உணருவோம் !!
பூனை பூனை தான் புலி புலி தான் !!
     

Sunday, October 5, 2014

முதிர்வின் உணர்வு


 கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

முதிர்வின் உணர்வு - சிறுகதை


மேலும் இந்த சிறுகதை சிறுகதைகள் என்ற வலைதளத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது, உங்களுக்கு பிடித்திருந்தால் பகிருங்கள்.
http://www.sirukathaigal.com/குடும்பம்/முதிர்வின்-உணர்வு/#more-21512

பாசத்திற்கு பின் தியாகம் என்ற சொல் மறைந்திருக்கும் .

       இந்த பூவுலகில் பாசம் என்ற உணர்வு திகழ்வதால் தானோ இயற்கை ஓரளவிற்கு சீராக இயங்கிக்கொண்டிருகிறது, மனிதர்களிடம் பாசம் சாயம் நீர்த்து பல காலம் ஆகிறது. காந்தியின் சிரிப்பை வைத்து தான் பாசம் நிர்ணயம் செய்யப்படுகிறது. இக்ககட்டதில் நான் சில குடும்பங்களை கண்டிருக்கிறேன், பாசத்தின் அர்த்தத்தை விழியன் வழி அனுபவித்தேன்.
ஆனால் இந்த பாசம் பின்னே எவ்வளவு தியாகம் ஒளிந்திருக்கிறது. உண்மையான பாசத்தை காட்டுபவர்கள் தியாகத்தை மறைப்பர், இந்த மாண்பு தான் அவர்களை மான் என்று சொல்ல வைக்கும் .

     அருள் ஜோதி , என நெருங்கிய நண்பன். MSW படித்துவிட்டு TI நிறுவனத்தில் மனிதவள துறையில் பதவியில் முற்பட்டவர் ஆகா (சீனியர் - HR) உள்ளான். இவனுக்கு 4 அண்ணன்கள் உள்ளார்கள், இவன் தான் கடை குட்டி. எல்லோருக்கும் அருள் என்றால் அவ்வளவு பாசம். அருள் MSW படிக்கும் போது அண்ணன்கள் சிறிய வேலையில் தான் இருந்தார்கள், அவர்களுக்கு சிரமம் கொடுக்க கூடாதென்பதற்காக வங்கியில் படிப்பதற்கான கடன் வாங்கி படித்து முடித்தான், வேலைக்கு சேர்ந்ததும் சிறுக சிறுக சேர்த்து கட்டி முடித்தான். இந்த காலத்தில் ஏமாற்றும் மக்களிடையே நேர்மையான மனிதர்கள் பௌர்ணமி போல உடனுக்குடன் தெரிய மாட்டார்கள். எல்லோருக்கும் 5 நாள் வேலையிருக்கும் ஆனால் அருளுக்கு 6 நாட்கள் வேலை இன்னும் பல நாட்கள் ஞாயிறு கூட செல்வான் , பார்க்கவே பாவமாக இருக்கும்.
" ஏண்டா நீ வேல மாற வேண்டியது தானே ?" என்று ஒரு முறை கேட்டேன்.
அதற்கு அவன் " இல்லைட வீட்டுக்காக புதுசா லோன் எடுத்திருக்கேன் அது கம்பெனி மூல்யமா ப்ராசெஸ் ஆயிருக்க , வேலைவிட்ட மொத்த காசையும் கேப்பானுங்க, முடியற வரைக்கும் போயிதான் ஆகனும்"
 நான் அதன் பின் எந்த வார்த்தையும் சொல்லவில்லை, அவனிடம் இருந்த கற்று கொள்ளவேண்டும் என்று நினைத்தேன். அருளின் அண்ணன் BL செய்தால் நல்லது என்று கூறி அவனை மைசூர் பல்கலைகழகத்தில் சேர்த்தார் , இது தொலைதூர கல்வி போல, எந்த வித ஆட்சேபனை தெரிவிக்காமல் வெற்றிகரமாக மூன்றாவது ஆண்டு முடிக்க போகிறான் அருள். இதில் வியப்பு என்னவென்றால் , எல்லா விடுப்பையும் சேர்த்து BL தேர்வு எழுதுவான்.
   இந்த மாதிரியான பாசம் நமக்கெல்லாம் முன் மாதிரி தானே !!

          சந்தீப், என பள்ளி நண்பன். திருமணம் முடிந்து 2 ஆண்டுகளக்கு மேல் ஆகிறது , இவன் காதலிக்கும் போது இவன் மனைவியை எப்படி காதலித்தானோ அதை விட பல மடங்கு அதிக பாசம் , காதலுடன் திகழ்கிறான். நாங்கள் நட்பு வட்டாரத்தில் அவன் கல்யாண வேளையில் "இன்னும் 30 நாள் தான் மச்சி , இன்னும் இரண்டு வருஷம் கழிச்சி இவளோ பாசமா இருக்கின்னு பாப்போம் " என்று கூறினோம்.
அவன் காதல் எங்கள் கன்னத்தை சுளீரென அடிக்கிறது இன்று. இது மிக தூய்மையான காதல் என்று நான் கருதுவேன், காதலிக்கும் போது ஒன்றே நின்று பெற்றோர் நிச்சயித்த திருமணம் ஆகா மாற்றினார்கள்.
சந்தீப் என்னிடம் உரையாடும் போதெல்லாம் அவன் காதலின் நறுமணம் வருடாவருடம் வாசனை அதிகமாகும் என்று என் மனம் சொன்னது, இது எல்லை அற்ற பாசம் அமிபாவைப் போல, பல நேரங்களில் அவன்  முக நூலில் தங்களது புகைபடங்களை பகிர்ந்து அதிகமாக செய்வது போல தோன்றும் பலருக்கு ஆனால் அது உண்மையான காதலின் பாசத்தின் வெளிப்பாடு, தன் மனைவிக்காக ஒவ்வொரு ஞாயிறும் நண்பர்களை பார்ப்பதை தியாகம் செய்தான் இன்று வரையில்.
      சந்தீபிற்கு மேல் 2 அண்ணன்கள் , ஜோதியை போன்று இவனும் கடை குட்டி; இவர்களை ஆனந்தம் பிரதேர்ஸ் என்று தான் சொல்ல வேண்டும். இத்தகைய பாசம் இந்த உடனடி பீட்சா உலகத்தின் பழைய மல்லி பூ இட்லி ஏதொரு மூலையில்.

       இத்தகைய பாசம் நாம் நம் நட்பு சூழலில் நிச்சியம் இருக்கும் , இந்த சிறுபகிர்வை வாசித்து உங்கள் நினைவுகளை தூண்டினால் அதுவே அலாதியான மகிழ்ச்சி எனக்கு.     

சலவைக்கு போட்ட மனசு.


     பெரும்பாலும் மக்கள் நமக்கு கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் அதிகம் ஆனால் சிலர் மட்டும் எதற்கும் கவலைப்படாமல் தனக்கு என்ன வாய்த்ததோ அது போதும் என்று நகர்வார்கள். அவர்களுக்கு நல்லது கெட்டது  தெரியாமல் இருக்கும் மனசு, யாராவது அவர்களை கிண்டல் செய்தாலோ , ஏமாற்றினாளோ அவர்களின் வருத்தம் அறவே இருக்காது.
இதைபோல் நம் பயணத்தில் பலரை சந்தித்திருப்போம்.

    பிரவீன் , என் பள்ளி நண்பன். யாரையும் தவறாக எண்ணாத மனது. எல்லோரும் இவன் மீது உரிமை கொண்டாடி கேலி செய்வார்கள், இதை அவன் "நம்ப நண்பன் தானடா அவன் " என்று மெய்சிலிர்க்கும் பதிலை கொடுப்பான். இந்த மனது யாருக்கு வாய்க்கும். பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் போது பள்ளியில் அறிவியல் கண் காட்சியொன்று நடந்தது, அதற்கு தோரணை மற்றும் பல அலங்கார பொருள் வாங்க வேண்டும் என்று என்னிடம் ஜமீல் சார்(கணினி வாத்தியார்) கூறினார் இதை கேட்ட பிரவீன் எங்களின் தோழி மேனகா ஸ்கூட்டியை வாங்கிக் கொண்டு என்னை தேடினான், அப்போது நான் வேறு ஒரு அலுவல் வேலையாக பள்ளியிலேயே இருந்தேன் , நான் பான்சி ஸ்டோர் சென்றேன் என்று நினைத்து  என்னை தேடி மேனகாவின் ஸ்கூட்டி எடுத்துக்கொண்டு பள்ளியை விட்டு கண்காணிப்பாளரிடம் செய்தி கூறி வெளியே சென்றான். சைக்கிள் கூட அவனுக்கு செரியாக ஓட்ட தெரியாது, முதல் முதலில் மோட்டார் சைக்கிள் அனுபவம் ஒரே குஷி தான் அவனுக்கு. ஸ்கூட்டியின் கியர் எங்கே என்று ஓட்டிக்கொண்டே தேடினான், அக்செலரேட்டர் மிகவும் அதிகமாக திருப்பி விட்டான், பின் பிரேக் தான் பிடிக்கும் என்று சொல்லி கொடுத்திருக்கிறாள் மேனகா ஆனால் நம் அறிவாளி பிரவீன் முன் பிரேக்கை பிடித்திருக்கிறான். அன்று பார்த்து அந்த இடத்தில தார் ரோடு போட கோபுரம் போல் கருங்கற்களை கொட்டி இருந்தனர், அதில் முட்டி வண்டியை நிறுத்திடலாம் என்று நினைத்து விட்டான் வண்டியை இதை பார்த்த மக்கள் யாவரும் சர்கஸ் பார்த்த திருப்தி, டெரிமினேட்டர்-2 வில் கடைசி காட்சியில் அர்னோல்ட் முகம் போல் பள்ளிக்கு திரும்பி வந்தான். கை , முகம் ஒரே ரத்தக்களறி. இதில் பெரும் வேடிக்கை வண்டியை வரும் போது ஒட்டி வந்தான். எல்லாரும் பதைத்தனர், மேனகாவின் அழுகை மட்டும் அடங்கவில்லை, பிரவீன் அவளிடம் சென்று " எனக்கு உண்டான காயம் தன்னால ஆறிடும்.." என்று கூற
"டேய் , பண்ணி .. என் பைக் போச்சு டா " இந்த வரிகள் மேனகா கூறுகையில் இன்று கூட சிரிப்பை அடக்க முடியவில்லை.
     வெள்ளந்தி மனிதருள் பிரவீனும் ஒருவன் , எல்லவற்றையும் சுலபமாக நினைக்கும் மனசு சலவைக்கு போட்ட மனசு தான், பிரவீன் இன்று பெரிய தகவல் தொழில்நுட்பத்தில் பணி புரிகிறான். சமீபத்தில் திருமணனும் முடிந்தது மகிழ்ச்சியாக உள்ளன்.

       கபிலன், இவர் என் பழைய அலுவலக தோழர் என் உடன் பிறவா சகோதரர். நான் சந்தித்த மிக சிறந்த மனிதர், இவரும் சலவை மனசுக்காரர். உள்ளே ஒன்று வைத்து வெளியே பேசும் மனிதர்கள் தான் அதிகம் , என்றுமே ஒரே பேச்சு இவரிடம். கபிலன் எனக்கு அறிமுகம் செய்த புத்தகம் ஏராளம், குழந்தையின் நுனி விரல் பிடித்து நடை பழகுவது போல என்னை இலக்கியத்துக்கு அறிமுகம் செய்தார், இவரின் ஊக்குவிப்பால் தான் என் முதல் கட்டுரை வெளியே வந்தது, மனம் திறந்து பாராட்ட கூடிய மனிதர் கபிலன்.
      அவர் குழந்தையின் பிறந்த நாள் வந்தது, தனது நெருங்கிய நண்பரிடம் DSLR கேமரா வாங்கினார், பிறந்த நாள் முழுவதும் படம் பிடித்தார் மறு நாள் கேமராவை கொடுக்க வேண்டும், மாறாக கேமரா கிழே விழுந்து நொறுங்கியது அவர் ஸ்தம்பித்து போனார். என்னிடம் தான் முதலில் சொன்னார், " என் நண்பருடைய நம்பிக்கைய உடச்சிட்டேன் பவித்ரன் " என்று கூறி அழ ஆரம்பித்தார், அவரால் அதற்கான பணத்தையோ அல்ல புதிதாக வாங்கி தந்திருக்க முடியும் ஆனால் அவரின் உணர்வு எவ்வளவு உணமையானது என அன்று உணர்ந்தேன்.

     இதை போன்ற சலவை மனசுக்கரர்கள் உங்கள் வட்டாரத்தில் இருப்பார்கள், இவர்களை பார்த்தல் நன்றாக பாராட்டுங்கள் இவர்களெல்லாம் மிகவும் அரிது.      

வெற்றிக்கு விடா முயற்சியெனும் கடவுச் சொல் உள்ளது !

      வெற்றியும் தோல்வியும் வானிலை போல மாறிக்கொண்டே இருக்கும், நம்மில் பலர் ஒரு சில முயற்சிகளில் ஈடுபட்டு தோற்றதும் வெறுத்து துவண்டு இருப்போம் அதன் தாக்கம் வடிய சில நாட்கள் ஆகும் இன்னும் சிலர் அடுத்தென்ன என்ற நிலையில் வெற்றியை நோக்கி அம்பை தயார் செய்வர். விடா முயற்சியுடன் நாம் பயணித்தால் ஒரு போர் வீரனின் பாங்கு நம்மிடையே வளரும்.
என் சிறிய பயணத்தில் சில போர் வீரர்களை சந்தித்திருக்கிறேன்.
 
  என் பள்ளி நண்பன் கிருஷ்ண மூர்த்தி , கிச்சு என்று அழைக்கும் எங்கள் நட்பு வட்டாரம். ஒவ்வொரு முறை கிச்சுவை பார்க்கும் போது உறுமெய்ம்மை ஏற்படும், அவன் யாரிடம் பேசினாலும் தேவை அறிந்த பேசும் பாங்கு மேலும் சொல் ஆற்றல் வாய்ந்து தூவும் சாரல் போல் ரம்யமாக இருக்கும். இதெல்லாம் ஒரே நாளில் வருவதன்று அனுபவத்தால் மட்டுமே ஈட்ட முடியும்.
   கிச்சு, பதினோராம் வகுப்பு சேர்கையில் கணினி பிரிவு எடுத்தான் பின்னர் குடும்பத்தாரின் விருப்பத்தின் அடிப்படையில் உயிரியல்  பிரிவு தேர்வு செய்தான், அவனின் சித்தப்பா மருத்துவர் ஆதலால் இவனையும் மருத்துவ படிப்பிற்கு முயற்சிக்கலாம் என்ற முனைப்பு. அவர்கள் தவறான தேர்வு நிகழ்தினார்களோ என்ற ஐய்யம் எனக்கு இருந்தது அவன் கணிதத்தில் மிகவும் திறமைசாலி பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 180 மதிப்பெண் எடுத்தான் இதுவும் ஒரு சான்று, இன்று வரை அவனிடம் இதை பற்றி சொன்னதில்லை. படிக்க வேண்டும் என்ற முனைப்போடு கலை நிகழ்ச்சிகள் என பன்னிரெண்டாம் வகுப்பின் போது எதிலிலும் ஈடுபடவில்லை. ராஜ் பரத் , லக்ஷ்மி நாராயணன் மற்றும் கிச்சு இவர்கள் சேர்ந்தால் பயங்கர ரகளையாக இருக்கும். பள்ளி நாட்களில், நான் கிச்சுவிடம் அந்தளவு நெருக்கமாக பழகியதில்லை இருந்தாலும் அவனை மிகவும் கவனித்துள்ளேன். பன்னிரெண்டாம் தேர்வு நடந்து முடிந்தது பல ஏமாற்றங்கள் காத்துக்கொண்டிருந்தது. மிகவும் குறைவான மதிப்பெண்ணுடன் தேர்ச்சிபெற்றான், மருத்துவர் எனும் கனவு கடற்கரை மணல் கோபுரமாய் சரிந்தது. அவனது நண்பர்கள் இவனை விட அதிக மதிப்பெண்ணுடன் தேர்ச்சிபெற்றார்கள். கிச்சு சற்று கூட மனம் தளரவில்லை, மறு ஆண்டு மீள் தேர்வு எழுத முயற்சித்தான், மிகவும் தைரியமான முடிவு.
    கிச்சு, மீள் தேர்விற்காக முயற்சிக்கும் போது தனது சகாக்கள் கல்லூரிக்கு பிரவேசித்தனர். அப்போது அவனுடைய மன நிலை எப்படி இருந்திருக்கும் தவறான முடிவா இது ? என்ற கலக்கம் அதிகம் படறி இருக்கும். வினோத் என்ற நண்பன் இருந்தான். கரடிவிடம் தனது நண்பன் ராமுவை  மாட்ட செய்து தப்பிப்பான் சோமு இந்த  கதை நமக்கு தெரியும், இதில் வரும் சோமுவின் முக்கால் வாசி கதாபத்திரம் தான் வினோத். கிச்சுவை ப்ளே ஸ்டேஷனிற்கு அழைத்து சென்று அந்த விளையாட்டிற்கு அடிமை செய்தான். தேர்வு நெருங்கியது, தேர்வும் எழுதினான் கிச்சு.
    சோதனையின் வலை கிச்சுவிற்கு தானோ? வருடம் 2005 , மீள் தேர்வில் முந்தைய தேர்வின் மதிப்பெண்ணை விட குறைவு. இடிமேல் இடி, ஆனால் அவன் துவளவில்லை, மீள் திருத்தத்திற்கு முறையிட்டான். அன்றைய அதிமுக அரசு மீள் தேர்வை ரத்து செய்து , பழைய தேர்வு தான் கணக்கில் எடுக்கப்படும் என்ற ஆணை பிறப்பித்தது. சோதனை வலையை சாதனையாக மற்ற ஒரு சந்தர்ப்பம், கோடியில் ஒருவனுக்கு மட்டும் தான் இந்த வைப்பு கிட்டும், மீள் தேர்வின் மதிப்பெண் சான்றிதழை சமர்ப்பித்து பழைய சான்றிதழை வாங்கினான் , RMK கல்லூரியில் 2005 ஆம் ஆண்டே சேர்ந்தான்.
   இது வெறும் அதிர்ஷ்டமோ தற்செயலோ அல்ல, ஒருவனின் விடா முயற்சிக்கு கிடைத்த கூலி. இத்துடன் இவன் சோதனையின் தொடர்ச்சி பாகம்-2 ஆகா தொடர்ந்தது. ஸ்கை குவெஸ்ட் என்ற MLM இல் சேர்ந்து நட்பு வட்டாரத்தையும் சேர வற்புறுத்தினான் அதில் நானும் ஒருவன் ஆனால் எனக்கு உடன்பாடு இல்லை , நட்பு முறியும் பணத்தினால் என்ற யோசனை எழுந்தது. அதே போல பல நண்பர்களையும் இழந்தான் கிச்சு. ஸ்கை குவெஸ்ட் இல் நன்றாக வளர்ந்தான் மேல நாட்டுக்கும் சென்று வந்தான். இன்னும் காலம் கழிந்தது இவனுடன் இரண்டு பேர் சேர்ந்து ஒரு MLM வியாபாரம் ஆரம்பித்தனர், ஓராண்டு சுமாராக போனது , இதிலும் இவனது சகாக்கள் இவன் பணத்தை ஏமாற்றினார். இத்துணை சம்பவங்கள் ஒரு மனிதனை உரு கொலையா வைக்காதா ? என்ற கேள்வி என்னுள் இருந்தது. விடா முயற்சி எனும் கடைச் சொல்லை படுத்தி , கடினமான உழைப்பினால் இன்று ஒரு பெரிய மென் பொருள் நிறுவனத்தில் TL ஆகா உள்ளான்.
    நான் ரசித்த பலருள் ஒருவன் கிச்சு, நீங்கள் இந்த பதிவை வாசித்திருந்தால் நிச்சயம் உங்களுக்கு வெற்றியின் கடவு சொல் தெரிந்திருக்கும் .        

லாபமா ?


  கபிலன் : தமிழ் நாட்ல இட்ஸ் மெடிக்கல் மிரகல் சார் ..

 கிச்சா :   சார் , யாருங்க போழசிகிட்டா ?

 கபிலன் : க்ளிசரின் கம்பெனி, செம்ம லாஸ் ல இருந்தாங்க கடந்த 2 வாரமா அமோக லாபம் ....

கிச்சா :நம்ப ஆரம்பிக்கலாமா சார் ??

கபிலன் : ????????????

நுங்கம்பாக்கம் , Chennai - 600034 / part 3

கவலை ஒரு ரசம் போன கண்ணாடி

  கவலையை தொலைத்து நிம்மதியை தேடும் ஏரளமானோர் உள்ளார்கள், என்னவோ கவலை இவர்களை துரத்தி துரத்தி காதலிக்கும். எவ்வளவு கவலைகள் இருந்தாலும் சிலரிடம் சிரிப்பு மட்டுமே தெரியும், ஒரு வண்ண ஓவியத்தின் பின் புறம் போல. சில நேரங்களில் நான் சிந்தித்ததுண்டு இந்த மனிதர்கள் மனதின் மிக சிறந்த மருத்துவர்கள், இவர்கள் பல நேரங்களில் மற்றவர்களுக்கு சிகிச்சை செய்து குண படுத்துவார்கள். இதை போல்  பல மருத்துவர்களை நீங்கள் உங்கள் வாழ்வில் சந்தித்து இருப்பீர்கள் அதை நினைவு கூற  இந்த பதிவு ஒரு தூது வல்லரையாக செயல்படும்.
      தமிழ் மணி , மிக சிறந்த கபடி வீரன், பாடி பில்டர், பல குரல் கலைஞன் என்று வெவ்வேறு முகங்கள் உண்டு. எல்லோருக்கும் பிடித்த நண்பன் கல்லூரியில். அவனுக்கு பல கவலைகள் இருக்கிறது ஆனால் இதுவரை ஒரு முறை கூட அதை விளம்பரம் செய்ததேயில்லை. எல்லாரையும் மகிழ்வித்து தானும் மிகிழ்ந்தவண்ணம் இருப்பவன்  தமிழ் மணி, அவனுக்கு கபடி மூலம் வேலை கிடைக்காமல் போனது இதை பற்றி அவன் எந்த சலனமும் இல்லாமல் அடுத்த வேலை தேடினான். காதல் மணி மணிக்கு சரியாக அடித்ததில்லை கல்லூரி நாட்களில். அம்பதூர் ரவி, சதீஷ் , சிரில், மோகன் மற்றும் நான் விவேக்ஸ் ஷோ ரூமில் எங்களது இளங்கலை இறுதியாண்டு ப்ராஜெக்ட் அங்கே செய்ய நேர்ந்தது, அந்த காலகட்டத்தில் தமிழ் மணிக்கு ராங் கால் ஒன்று வந்தது, அது ஒரு பெண். SMS - குறுஞ்செய்து  இலவசம் மற்றும் கட்டணமும் மளிவு , ராங் கால் ரைட் கால் ஆகா மாறியது, இடை விடாமல் SMS உம் பேச்சுமாக இருக்கும் இதையெல்லாம் அவதானித்து இருந்தேன். ஒரு நாள் இருவரும் சந்திக்க முடிவெடுத்தனர், மெரினா பீச் கண்ணகி சிலை. அவள் பச்சை நிற ஆடையிலும் மணி கருப்பு நிற ஆடை என்று முடிவேடுத்திருந்தார்கள் காலம் கனிந்தது. தமிழ் மணி உசார் மணி, முதலில் அவன் அவளை பார்க்க வேண்டும் என்று தன் ஆடை நிறத்தை மாற்றி சிவப்பு நிறத்தில் முதலில் சென்று கண்ணகி சிலை அருகே நின்றான். பச்சை நிற சுடிதார் அணித்து கையில் அலைபேசி அழைப்புக்காக எதிர் பார்த்த சற்றே உடல் பருமனுடன் , வியர்வையில் பவுடர் திட்டு திட்டக மாநிற முகத்தில் இருந்தபடி பஸில் இருந்து இறங்கினாள். தமிழ் மணி அலைபேசி அடித்தது அவன் கனவு கோட்டை இடிந்தது, ஓட்டம் எடுத்தும் நம் உசேன் போல்ட். அந்த பெண்ணிடம் என்னால் இன்று வரயியலவில்லை என்று கிளம்பியவுடன் சொன்னான். " எனக்கு தெரியும் , அந்த சிவப்பு சட்ட நீங்க தானே ? " என பதில் வந்ததும் பீப் தான்.
   தமிழ் மணி கூடே இருந்தால் நேரம் எங்கே போகும் என்று தெரியாது, என் வகுப்பில் ஒரு முக்கிய புள்ளி, எல்லாரையும் மகிழ வைப்பான். சமீபத்தில் தான் திருமணம் நடந்தது, TCS கம்பனில் நல்ல மதிப்புடன் மிமிகிரி மணியாக சுகமாக இருக்கிறான்.

      ராஜேஷ், கல்லூரியில் அனைவருக்கும் மிக முக்கிய நண்பன். பரங்கிமலையின் ஜோதி மட்டும் இல்ல இவன் ஒரு சுடர் என்று கூட சொல்லலாம். ஆழ்ந்த கவலைகளை உள்ளே வைத்து முகத்தில் சிரிப்போடு இருப்பான். எங்கள் வகுப்பின் சந்தானம் , டைமிங் காமெடியில் இவனை அடிக்கவே முடியாது. ராஜேஷ் ஒரு இடத்தில இருந்தால் அங்கு எல்லோருமே சிரித்துகொண்டு  தான் இருக்க வேண்டும். சிறந்த கால் பந்து வீரன், பல தோல்விகள் சுமந்தாலும் அதை யாரிடமும் பகிர்ந்ததில்லை.
     வகுப்பில் மிகவும் சுமாராக தான் படிப்பான், தன் கடின உழைப்பின் பயனால் இன்று ஸ்கோப் நிறுவனத்தில் TL ஆகா இருக்கிறான். வேலையை கவலையுடன் சேர்க்க மாட்டன் , கவலையை வேலையுடன் சேர்க்க மாட்டன். இவனைப் பார்த்தல் நமக்கு ஒரு உத்வேகம் வரும், முன்னேற்றம் என்றால் வெற்றியும் தோல்வியும் பிரித்து பார்ப்பது அது ராஜேஷிடம் அதிகம்.  என் முதல் நாள் கல்லூரி எனது குரல் காற்றில் கரைந்து சென்றது ராஜேஷிடமும் தமிழ் மணியிடம் அதை எப்போதும் அசைபோடும் பழக்கம் எனக்கு.
    ஓராண்டுக்கு முன்னர் ராஜேஷுக்கு திருமணம் நடந்தது , நான் அருகில் இருந்தேன் அந்த தருணம் மிகவும் மகிழ்ச்சியாகவும் , நெகிழ்ச்சியாகவும் இருந்தது.

   அடுத்து என் நினைவில் வருவது மகேஷ், நான் முன்னர் சொன்ன வாறு இத்தகைய குணாதிசியம் கொண்ட நபர்கள் எல்லோரையும் வெகு சீக்கிரமாக நட்பின் வலையில் ஒரு சிறிய மீனைப் போல் சிக்க வைப்பார்கள். உதையா அவனுடைய நெருங்கிய நண்பன் இருவரும் இரட்டையர்கள் போல சுற்றி திரிவார்கள். எனக்கு மகேஷின் மேல் நல்ல அபிமானம் உண்டு, இரண்டாம் ஆண்டு இறுதியில் தான் நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்தது. எவ்வளவு பிரெச்சனை இருந்தாலும் ஒரு சலனமே இல்லாமல் தனக்குள்ளே பேசி தீர்ப்பான்.
    இளங்கலை படிப்பு முடிந்தவுடன், மேல் படிப்புக்கு ஐயர்லாந்து சென்றான், இனிதே படிப்பை தொடங்கி நன்றே தேர்வுகளை எதிர் கொண்டான். நேரம் அவன் மேல் கருப்பு சாயத்தை பூச ஆசைப்பட்டது , சில குடும்ப சூழலால் படிப்பை தொடரமுடியாமல் இந்தியா திரும்பினான். இந்த சம்பவம் வேற யாராவது வாழ்வில் நடந்திருந்தால் அவர்கள் ஸ்தம்பித்து இருப்பார்கள், ஆனால் மகேஷ் "விடு மாமா, அடுத்தத பாப்போம் " என்று தைரியத்தின் சொல் நம்பிக்கையின் நாவின் இருந்தது வந்தது. மகேஷும்  கவலையை  ஒரு ரசம் போன கண்ணாடியாக பார்த்தான்.

  இந்த மாதிரியான நண்பர்கள் உங்கள் அருகாமையிலும் இருப்பார்கள் சற்றே உணர்ந்து பார்த்தால் தெரிவார்கள் நம் முன்னே மகிழ்ச்சியோடு..

  தொடரும் ....

செப் - 5

"வழியெங்கும் உயிருள்ள பதாகைகள் போல
ழகரம் முதல் சிகரம் வரை
வழிகாட்டியச் சுடரகளுக்கு
பின்னே தான் தெய்வங்கள்"

இதை படித்து , உங்கள் ஆசிரியர்கள் மனதில் வந்திருந்தால் அதுவே எனக்கு பெரிய லைக்.

காட்சி 1:
மாநில கல்லூரி (Presidency College) கணினி முதுகலை முதலாண்டு செய்முறைத் தேர்வு C ++, வெளியிருந்து ஒரு பேராசிரயர் வருவார் (External) , அவர் லயோல கல்லூரி HOD கிளெமென்ட் கிங், தேர்வு தொடங்கியது, சொற்கள் தேடிகொண்டிருக்கும் கவியைப் போல பேனா என் தாடையை தட்டிக்கொண்டு இருந்தேன். 20078104 என்று அழைத்தார் கிங் , அந்த ரோல் நம்பர் நான் தான், நானும் சென்றேன் எனக்கு வந்ததோ கடினமான ப்ரோக்ராம் கையில் பிட் கூட இல்லை அது சுலபமாக இருந்தாலும் பிட் எழுதலையே என்று யோசித்திருப்பேன்.
சரமாரியாக கேள்வி கேக்க ஆரம்பித்தார் கிங், அப்போது நக்கலான சிரிப்பு சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது அது என் நண்பர்கள் இல்லை , என் ஆசிரியர்கள் கிளாடிஸ் (Gladice) மேடம் , தமிழ் கொடி மேடம் , வெண்ணிலா மேடம் மற்றும் ரமா மேடம்.

Q.1 Difference between Liked list and Doubly Linked list ?
சிரிப்பு தொடர்ந்தது - Donno sir.
Q.2 What are Abstract Classes?
Donno sir
Q.3 huffff - ok , atleast answer this, give names of OOPS concept?
Donno sir, am sportsman i haven't attended classes சிரிப்பு தொடர்ந்தது

என் ரெகார்டை தூக்கி வெளியே எறிந்தார் கிங், " நீ லாயக்கே இல்ல கணினி படிக்க , HOD கிட்ட போய் சார் நான் இங்க படிக்க லாயக்கில ன்னு நான் சொல்றேன் ன்னு சொல்லு " என்றார்.
எங்கிருந்து எனக்கு கோவம் வந்தது என்று தெரியவில்லை , கிழே சிதறிய ஏடுகளை எடுத்துக்கொண்டு என் பையை எடுத்து TC வாங்க கிளம்பினேன், இதை கண்ட ரமா மேடம் தன் வாயில் தான் அடித்து கொள்ளவில்லை " ஓடியாங்க மேடம் ஓடியாங்க , இவன் TC வாங்க போறனா " அங்கு ஒரு பெரிய சண்டையே நடந்தேறியது, " நீ எல்லாம் என்ன கதி ஆகபோற பாரு, இனிமே கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்ட் க்கு வந்த கால வெட்டிடுவேன்" என்று சொன்னார் ரமா மேடம். "நீ ரொம்ப கஷ்ட படபோற, உனக்கெல்லாம் கால் சென்டர் தான்" என்றார் தமிழ் கொடி மேடம். "நீ IT ல வேல செஞ்சா அது மெடிக்கல் மிராக்கள்" என்றார் வெண்ணிலா மேடம், இந்த மக்கு மூஞ்சி 13 அரியர்களோடு உறவாடினேன் அதில் HTML practicals கூட . இதை இப்போ நினைக்கும் போது இவர்களுக்கு எப்படி ஜோசியம் தெரியும் என்ற கேள்வி வந்தது.

இந்த காட்சியில் வாத்தியார் ? அனுபவம் தான் ; இதை வழங்கிய என் மாநில கல்லூரி கணினி துறை ஆசிரியர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

காட்சி 2-
ஆண்டு 2009, HSBC டெலி காலர் நேர்காணல் லயோல கல்லூரியில். நான் சென்றேன்.ஒவ்வொரு முறை நான் என் கல்லூரி உள்ளே செல்லும் போது காதலர் தினம் குனால் போல கிழே விழுந்து என் கன்னத்தில் கல்லூரி மண் முத்தமிட வேண்டும் என்று நினைப்பேன்.
அடர்ந்த ஜீவனிருக்கும் மர நிழல்களை அவதானித்து கொண்டிருந்தேன், நேர்காணலை மறந்து 2004 முதல் 2007 ர்க்கு சென்றேன்.
" டேய் , எப்படி இருக்க" என்று ஒரு ஜீவன் ஓடி வந்தது , யாரது ன்னு கிழவனைப் போல் என் இடது கை கண்கள் மேல், அவர் தான் பெலிக்ஸ் சார் , என் கணித ஆசான். அவர் அப்படியே சென்றிருக்கலாம், எனக்கு கை கொடுத்தார் அந்த உள்ளங்கை சூட்டை நான் அறிவேன். "எப்படி இருக்க , கிரிகெட் விளையாடுறிய " என்றார். " ஏதோ இருக்கேன் சார் " என்றேன். அவர் என்ன புரிந்து கொண்டார் என தெரியவில்லை " டேய் நீ நல்ல வருவ போ டா" என்று அவர் தொனியில் சொன்னார். அந்த 2 நிமிடங்களை 200 நாட்களுக்கும் மேல் சிந்தித்து கண்கள் கசிந்திருப்பேன்.

இந்த காட்சியில் வாத்தி பெலிக்ஸ் சார் தான், ரொம்ப தேங்க்ஸ் சார் .

காட்சி 3 -
பள்ளி நாட்கள் - தர்ஷியஸ் எங்கள் பள்ளி முதல்வர், படிப்பை விட வேறொரு உலகத்தை காட்டிய கொலம்பஸ். "இவன் எல்லாம் எங்க.." என்று சொன்னார்கள், ஆனால் அவர் மட்டும் என் மீது நம்பிக்கை வைத்தார், சுதந்திரமாக மேடை நிகழ்ச்சிகளை நடத்த சொன்னார். சொல்லாமல் கடமை என்றால் என்ன என்று கற்றுக்கொடுத்தார்.
+1 முதல் நாள், வெறும் 10 மாணவர்கள் மட்டும் வந்தனர் அதில் நானும் ஒருவன். அசசெம்ப்லி முடிந்து எங்களை மட்டும் அங்கே நிற்கவைத்து எந்த குரூப் எடுக்க போறீங்க என்று ஆசிரியை தாரா கேட்க்க முனைப்போடு இருந்தார். அங்கு நான் மட்டும் தான் ஷூ அணிந்திருந்தேன், 10 ஆம் வகுப்பின் முற்பாதியில் வாங்கியது சிறிது கிழிசலோடு இருந்தது. எல்லோரையும் எந்த குரூப் என்று கேட்டு விட்டு என்னிடம் வந்தார்கள். " ஒரு டிசிப்ளின் வேண்டாம் , இப்படியா வருவ ? உண்ணலாம் ஸ்கூல சேத்ததே தப்பு. துரை என்ன மார்க் வாங்கிட்டாரு ? CS குரூப் தரத்துக்கு, ஷூ ஒழுங்க போடவே வக்கு இல்ல" என்று திட்டியபோது என்னை காப்பாற்றியவர் ரமணி அம்மா , "மிஸ் அவனோட அப்பா அங்க நிக்கிறாரு , விடுங்க". என் அப்பா மிகவும் வருத்தப்பட்டார் அன்று நான் உபயோகமற்றவன் , லாயக்கில்லாதவன் என யோசிக்க தொடங்கிய நாள் அன்று.  
என் தமிழ் ஆசிரியர் ரமணி அம்மா, எனக்கு நிறைய போராடி இருக்கிறார், உன்னால் முடியும் என்று எனக்கு சொன்ன முதல் ஷிவ் கேர என் ரமணி அம்மா. சிவா சார் , என் கணித ஆசிரியார். இவர் தான் என் கணிதத்தில் காந்தம் வைத்த ஐன்ஸ்டின்.

இதில் வாத்தி ரமணி அம்மா, தர்ஷியஸ் சார், சிவா சார் - கண் குளிக்க நன்றி சொல்கிறேன்.

Saturday, October 4, 2014

பெரம்பூர் லொக்கோவிலிரிந்து பார்க் டவுன் வரை

   தினமும் என் மனதில் தோன்றும் கவலை , நான் ஏன் இங்கு வேலைக்கு சேர்ந்தேன் என்று; கொசு அடிப்பது போல் மனதை அடித்துவிட்டு மின்தொடருக்காக காத்துக்கொண்டிருந்தேன் பெரம்பூர் லோக்கோ இரயில் நிலையத்தில்.முன் தினம் பார்த்த இரயில் நிலையம் போல இல்லை, மிகவும் சுத்தமாக இருந்தது குப்பைகள் அகற்றப்பட்டு தூய்மையாக இருந்தது.வியப்படைந்தேன்,இந்த இரயில் நிலையத்தில் இரண்டு நடைமேடைகள் உள்ளது இரண்டிலும் காந்தியடிகளின் பதாகை கட்டி வைக்கப்பட்டு காற்றில் அதில் உள்ள எழுத்துக்கள் "சவாச் பாரத் - தூய்மை பாரதம்" ஆடி கொண்டிருந்தது இந்த புரட்டாசியில்.மனதில் உள்ள மத குப்பையை யார் சுத்தம் செய்வார்? மதம் எனும் ஆழ் கிணற்றை யார் தூர் வாருவார் ? என்று யோசித்து முடித்தவுடன் மின்தொடரின் ஒலி காதைத் துளைத்தது, சென்னை சென்ட்ரல் மார்க்கம் செல்லவிருந்தது. வெண்டார் என்று சொல்லக்கூடிய சிறு வியாபாரிகள் தங்களது வியாபார மூட்டைகளுடன், மீன் குடைகளுடன் அமர்ந்திருந்தனர் அந்த பெட்டியில் நான் ஏறினேன். சிலர் வாய் நிறைய "பாண் பராக், மாவா" என்ற புகையிலை வஸ்துக்களை மென்றவாறு உமிழ் நீரை தங்கள் அருகில் துப்பினார்கள், இந்த வஸ்துக்களை தடை செய்தார்களே என்று யோசிக்கையில் அல்லாவுதீன் விளைக்கை தேய்ப்பது போல் பெரும்பாலானோர் தங்கள் அலை பேசியை தேய்த்து சிரிக்கின்றனர் , கோவப்படுகின்றனர் என பல பாவனைகளை பார்க்க நேர்ந்தது. தவறு செய்தவர்கள் மட்டும் தலைகுனியவில்லை இன்று பாதிக்கும் மேற்பட்டோர் தவறு செய்தார்களா? என்று என் எண்ணங்கள் கேள்வி கேக்கையில் "சென்ட்ரல் வந்துடுச்சி , நீ மூடினு பார்க் டவுன் ஸ்டேஷன் நடைய கட்றியா ? " என்று எனது மைண்ட் வாய்ஸ் நறுக்கென்று கொட்டியது.
சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து பார்க் டவுன் பறக்கும் இரயில் நிலையத்திற்கு சென்றடைவது ஒரு சாகசம் தான். மூன்று முனை பூந்தமல்லி நெடுஞ்சாலை கடக்க படாத ஓட்டம் எடுக்க வேண்டும், சுரங்கப்பாதையில் கடக்க வேண்டுமானால் நமக்கு மூக்கடைப்பு அல்லது சுவாச கோளறு ஏற்பட்டிருக்க வேண்டும் , அது சுரங்கபாதையா அல்ல சுரங்க கழிப்பறையா ?
எனக்கு மூக்கடைப்போ , சுவாச கோளாறோ இல்லை ஆதலால் ஓட்டம் எடுத்தேன் , பல்லவன் மேம்பாலத்தில் என் கால்கள் மூவுருளிகளைத் தாண்டி சென்றன.
"சவாச் பாரத்" பணிக்கு கல்லூரி மாணவர்கள் எங்கோ செல்ல விரைகிறார்கள், மற்ற கூட்டம் கூட தீ மெதிப்பது போன்று பதற்றமாக நடந்தார்கள். மேம்பாலத்தில் ஒரு தொழிலாளி மூன்று சக்கர மிதி வண்டியில் கட்டைகளை ஏற்றி இழுக்க முடியாமல் இழுத்தவாறு ஏறினார், நான் வேகமாக சென்று உதவி செய்யலாம் என்று விரைவதற்குள் என்னைப்போல் ஒரு சாமான்யன், அகவை 40 இருக்கும் அவருக்கு அந்த தொழிலாளிக்கு உதவி செய்தார் மற்றவர்கள் தீ மெதித்தனர். மேட்டை கடந்து மிதி வண்டி சம பகுதிக்கு வந்தடைந்தது, தொழிலாளி தன் கையை உயற்றி அந்த சமான்யனிடம் உடல் மொழியில் நன்றி சொன்னார், இவரும் அதை ஏற்று ஒரு சின்ன சிரிப்பு செய்து பார்க் டவுன் நிலையத்திற்கு சென்றார். யார் கண்களுக்கும் இந்த தொழிலாளி தெரியவில்லையே என்று நகர்கையில் ஒருவர் அந்த சாமான்யனை நோக்கி விரைந்து சென்று " சார் !! ரொம்ப நல்ல செயல் செஞ்சீங்க , மகிழ்ச்சி" என்று பாராட்டி சென்றார்.
அந்த சாமான்யனின் முகத்தில் ஒரு மகிழ்ச்சி எந்த பணத்தாலும் கொடுக்க முடியாது அதை, இந்த சின்ன பாராட்டு அவரை மேலும் பல உதவிகளை செய்யவைக்கும் . எதிர் பாராத உதவிக்கு எதிர் பாரா பாராட்டு அலாதியானது. மனம் வந்து பாராட்டுவோம், பணம் தேவையில்லை மனம் இருந்தால் போதும்.
யார் கண்களுக்கும் இந்த சாமான்யனின் செயலை பாராட்ட தெரியவில்லையே என்னையும் சேர்த்து தான்.
இந்த அவதானிப்போடு நகர்ந்தேன் ...