Translate

Wednesday, December 23, 2015

வெள்ளத் தனைய மலர்நீட்டம் // திரைக்கதை


 வெள்ளத் தனைய மலர்நீட்டம் // திரைக்கதை 

இந்த படம் ஒரு தனி மனிதனின் கொள்கை சார்ந்தது மேலும் தற்போதிய சூழலில் அவன் சிலந்தி வலையில் சிக்கிக் கொள்ளும் சிறு உயிரினமாகிறான், இறுதியில் அவன் சராசரியாக தோற்றாலும் ஆனால் அசாதாரண கொள்கையில் கோலோச்சினான்..

Ad films // Screenplays

மாடு.. நாடு..கேடு ..

ஒரு நிமிட குறும்படம், மாட்டு இறைச்சி தடையும் சகிப்புத்தன்மை இல்லாமை பற்றியும்..
மாடு.. நாடு..கேடு ..


பாவி !

ஆற்றில் நீச்சல் பயின்று ,
நதியில் எதிர் நீச்சல் கற்று,
கடலில் உள்நீச்சல் தேர்ந்து,
இறுதியில்
பெண்ணின் கண்ணீரில்
மூழ்குகிறான்,
ஆண் பாவி ...

போதுமன்றோ !

முயற்சிகளனைத்தும் அயர்ச்சியாயின்,
துயரத்தின் உயரம் அதிகமாயின்,
சுற்றமும் உன்னை ஒதுக்குமாயின்,
உறக்கமே கனவாயின்,
தோல்வியின் கீறல்கள் கிழிக்குமாயின்;
குருதிச் சூடு குறையுமோ ?
குறிக்கோள் ஒரு கலைஞனின் இயற்கைக்கோளாயின்;
ரணம் ஆறாவிட்டால்
நம்பிக்கையெனும் மருந்து போதுமன்றோ !!