~ சாதியையும் மதத்தையும் கதம் செய்ய காதல் தானே !! ~
படி தாண்டா பத்தினியே,
எக்ஸ்கலேட்டர் ஏறா சுந்தரியே !
உனக்கு கரைந்த மை அழகில்லையே,
நான் சிந்திய பொய் சலிக்கவில்லையே !
பொறுமை சாத்தியமோ - இந்த
எருமை சொல் கேளாயோ !
காதலுக்கு ஏன் சாதி, மதம்
உண்மையில் இரயில் தான் தாமதம் !
ஐய்யம் கொள்ளாதே,
என்னைக் கொல்லாதே !
பாரதி எரிந்தத் தீயில் கிளம்பிய
பல கோடிப் பொறியில் நானும்,
என்னை விட
என் வீட்டார்
உன்னை விட மாட்டார் !!
எண்ணை விட வாராயோ,
விளக்கேற்ற பொறியிருக்கே;
கேளாயோ தோழி !!