Translate

Tuesday, September 23, 2014

சாணைப் பிடிக்க வேண்டும் !!!

  சாதியெனும் பேய்
  மனிதர்களின் ஆவியாலே,
  வேரூன்றி வெறிகொண்ட முருங்கை  மரத்தை வெட்ட
  படு கூர்மையான பகுத்தறிவா(ல்)ள்  முடியும் !!!!

Sunday, September 21, 2014

என்றுமே அனுப்பாத கடிதம்

இந்த அன்பில்லாதவள் ஞாபகம் எனும் மையில் எழுதுவது ...
    உன் நெஞ்சிலிருந்த நெருப்பை அணைத்தேன்
    புகையை இன்னும் வெளிவிடுகிறாயே ,
 என்னை நீ என்றும்  நினைக்காதே!
        நான் நனைந்த ஆடு தெரியாமல் சிலுப்பிவிட்டேன்,
        அதனால் பலியாகிறேன் ஒவ்வொரு க்ஷணமும் !!
   உனது பெயரை என் குழைந்தைக்கு வைத்து
        உன்னை கேவலப்படுத்தவில்லை !!
  உன் வேண்டுதலில் எனது  நலனிருப்பதை
       என் பிள்ளை ஆரோக்கியம் சொன்னது,
       என்னை தயவுகூர்ந்து மன்னிகாதே
       மன்னிப்பு அசிங்கப்படும் !
     மண் பசிக்கு நான் இரையாகும் போது
        இவள் பாவத்தை நம்மால் ஜீரணம் செய்யமுடியாது என்று புலம்பும் ....
        என்றோ ஒரு நாள் என் வேண்டுதலில் நீ இருப்பாய் !!!!

இந்த அதிர்ஷட்டமில்லாதவன் சந்தோசம் எனும் மையில் கிறுக்குவது ...
       காதல் என் நெஞ்சில் ஆணி அடித்தது,
       காலம் காந்தமாக வெளியே இழுத்தது,
       காலம் காலமாக சுவடுகளை சுமக்கும் என் நெஞ்சம்
       உன்னை வாழ்த்தும் அனுதினமும் ..
 

Monday, September 15, 2014

நம் பயணத்தில்..

தேடும் யாவும் கிடைப்பதில்லை
  கிடைத்த யாவும் தேடுவதில்லை !
தேடி கிடைத்த யாவும் போற்றுவதில்லை
   கிடைத்து தொலைத்த யாவும் அக்கறையில்லை !
 எல்லா மனங்களைப் புரிந்தவர்களுக்கு
  மரணமில்லை !! 

மானங்கெட்ட மனசே !

மானங்கெட்ட மனசே ,
 நீ என்ன ஜென்மமோ ??
 உன்னை செருப்பால் அடிக்க வேண்டும் !
 ஏன் ஏமாற்றத்தை நினைத்து அழுகிறாய்,
 ஏன் முடிந்ததை எண்ணி வருந்துகிறாய்;
மானங்கெட்ட மனசே,
   உன்னை அடித்தும் சொரணையில்லை 
   துடைத்துவிட்டு போனதை நிந்திக்கும், துடைத்துவிட்டு !
   யார் மானத்தையும் வாங்காத மனசு,
   பைசாக்கு பெறாத  
   மானங்கெட்ட மனசு தான் !!!!


Sunday, September 7, 2014

ஆழ்கடல்


         எப்பொழுதெல்லாம் கடற் கரையில் அமரும் போதும் ஆழ் கடல் எப்படி அமைதியாக உள்ளது என்று சிந்திக்க தோன்றும், ஒவ்வொரு முறையும் அலைகள் என் கால்களை நனைக்கும் போது அதன் சுறுசுறுப்பு மற்றும் புதிய சக்தியைக் கண்டு வியப்பு வரும், இதே போல் தான் மனிதர்களும் சிலர் அமைதியாக சிலர் துடிப்பாக. இப்படி பலரில் சிலர் மகேந்திர பாபு, என்னுடன் பயணிக்கும் ஒரு ஜீவன். இவரை ஆழ்கடல் என்றே சொல்லலாம், பள்ளி காலங்களில் இவர் ஒரு கண்ணுக்கு தெரியாத கானல் நீரைப்போல். படிப்பிலும் அப்படி தான் இவர் எடுக்கும் மார்க் கண்ணுக்கே தெரியாது அவ்வளவு சிறியதாக இருக்கும். இவர் +2 தேறமாட்டார் என்று எல்லா ஆசிரியர்களும் பெட் கட்டினார்கள் அதற்கு நேர் மாறாக தேர்ச்சி பெற்றார், எல்லாரும் இவர் மீது ஒரு நம்பிக்கையின்மையாக இருந்தார்கள் ஆனால் மகேந்திர பாபு சற்று கூட சலனமில்லாமல் அமைதி காத்தார்.
    பச்சையப்பன் கல்லூரியில் BCA சேர்ந்தார், எல்லா படத்திலும் பார்த்ததுபோல் பஸ் ரூட், பாட்டு , சண்டை , கட்டிங் என நட்பையும் , தீயதையும் சேர்த்தார். இவரின் தௌலத் தாங்க முடியாதது,  அது 2007 ஆம் ஆண்டு ஒரு நண்பனின் திருமணம் வரவேற்புக்கு  பாபு சென்றிருக்கிறார். கல்யணம் என்றால் அது குழந்தை கல்யாணம் , மணமக்களுக்கு 20 வயது தான். டாஸ்மாக் சமாச்சாரமும் நடந்தது, நண்பர்கள் அனைவரும் உற்சாகமாக ஐயா இளையராஜா குரலில் ஒருவர் இசைக்குழுவில் பாட ஆரம்பித்தார் "நிலா அது வானத்து மேலே", சற்று நேரத்தில் நாற்காலிகள் நடனம் ஆரம்பிக்க எல்லார் வாயில் ட்ரம்ஸ் சத்தம். இசைக்குழு அலறியது எல்லா சாமான்களையும் மூட்டை கட்டி ஓடினர். நண்பர்களின் சண்டை அதிகரித்து போலீஸுக்கு தகவல் சென்றது.
     ஏன் இந்த சண்டை என்றால் , ஒரு தரப்பினர் "ஆசை நூறுவகை" என்ற ரஜினி பாடலுக்கு கூச்சலிட, இன்னொரு தரப்பினர் "நிலா அது வானத்து மேலே" என்ற பாடலுக்கு வாதிட இறுதியல் கமல் ஜெயித்துவிட அங்கு சங்கு சத்தம் கேட்டது. சிறு நேரத்தில் போலீஸ் வந்தனர், நம் தௌலத் மகேந்திர பாபு SI இடம் சென்ற வீர வசனம் பேசினார் "உங்களுக்கு ஆள் பலம் பாக்கனுமா ? இல்ல அரசியல் பலம் பாக்கனுமா ?" என்றார். அவர்கள் லட்டி பலத்தைக் காட்டினர். எல்லா புகழும் பச்சையப்பன் கல்லூரிக்கே.
    BCA படிப்பு முடிக்கும் போது அவருக்கு 10 அரியர்கள், சற்றும் மனதை கைவிடாமல் அமைதியாக இருந்தார். அவர் சுற்றத்தார் எல்லோரும் "மகேந்தர் தண்டம், தமிழ் ல கூட பைல்" என்று ஏளனப் படுத்தினர். அரியர்க்கு விண்ணப்பம் செய்தார், அதற்குள் என் நண்பனும் பாபுவின் நண்பனுமான செந்தில் ICICI கால் சென்டர் இன்டர்வ்யு க்கு அடித்து இழுத்து சென்றார், இருவரும் வேலைக்கு சேர்ந்தனர். ஆறு மாதங்கள் ஓடியது, நன்றாக சம்பாரித்த பாபு திடீர் என வேலையை விட்டார், சுற்றத்தார் , நண்பர்கள் எல்லாரும் சாடினார்கள். அவர் ஒரு பெரிய கணினி கல்வி நிலையத்தில் சேர்ந்தார் அதே நேரத்தில் 10 அரியர்களையும் முடிக்கிறார். கணினி பொறியாளர் என்ற சான்றிதழ் தந்தனர் அந்த கணினி கல்வி கூடம். முடித்த பிறகு கூட வேலை கிடைக்க வில்லை. 40 இன்டர்வ்யு க்கு மேல் எந்த பயனும் இல்லை. பாபுவுடன் படித்தவர்கள் எல்லாம் காலத்தை விட வேகமாக நகர்ந்தனர் ஆனால் பாபு மனம் தளரவில்லை குறிக்கோள் கணினி பொறியாளன் என்ற தாகம் அடங்கவில்லை. கடினமாக ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இன்டர்வ்யு நடந்தது அதில் தேர்ச்சி பெற்றார்.
    இன்று பாபு மூன்று நிறுவனகள் மாறி, TL ஆகா ஓர் பெரிய நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவர் ஆழ்கடல் தான் அமைதியின் இடத்தில ஆழம் இருக்கும். அவரின் விடா முயற்சி இன்று வேறொரு பரிணாமத்தில் இருக்கிறார்.
எல்லா புகழும் பச்சையப்பன் கல்லூரிக்கே....

       சிலரிடம் அமைதி இருந்தால் திறமை அவ்வளவு சத்தம் போடாது, சிலர் சத்தம் போட்டு திறமையை அமைதியாக்கி விடுவார். ஒரு சிலர் மட்டும் தான் அமைதியாகவும் திறமையாகவும் இருப்பார்கள் அதில் ஒருவர் தான் சண்முகம் ; ஆறாம் வகுப்பு முதல் இன்று வரை எங்கள் நட்பு தொடர்கிறது. சண்முகம் எங்கள் பள்ளியின் மாணவத் தலைவன், விளையாட்டு , படிப்பு என பின்னி பெடல் எடுப்பார். திறமைசாலி என்றல் சண்முகம் தான். அவருக்கு வெட்னரி டாக்டர் ஆக வேண்டும் என்பது இலக்கு அதனால் தாவரவியல் பிரிவு எடுத்தார். திறமை மட்டும் அல்ல அவர் பேச்சிலும் செயலிலும் ஒரு தெளிவு இருந்து கொண்டே இருந்தது. எல்லாரும் கணித பரீட்சை முடிந்தவுடன் "என்னக்கு 180, 190 வரும்"   என்று ஏலம் விட்டனர் ஆனால் இவர் மட்டும் அமைதியாக இருந்தார், தேர்வின் முடிவுகள் வந்தது சண்முகம்  கணிதத்தில் முதல் வந்தார் (199/200). ஒட்டுமொத்தம் பள்ளியில் மூன்றாம் இடம் பெற்றார்.
     சமூகம் சண்முகத்தை தன் கனவுடன் பயணிக்க அனுமதிக்கவில்லை பிறகு பொறியியலை தேர்ந்தேடுத்தார். கலந்தைவை முடித்து 47 A  வில் அவருடைய தந்தை , தாயாருடன் வந்திருந்தார், அப்பொழுது என் கல்லூரியிலிருந்து வீடு திரும்ப 47 A வில் ஏறினேன், பார்த்தால் பெரும் மகிழ்ச்சி எதிரில்  சண்முகம்.
 " என்னடா குரூப் எடுத்திருக்க ? என்ன காலேஜ் ?" என்றேன்.
  " வேலம்மாள் டா , E & I " என்றார் சண்முகம்.
  என்னக்கு பெரிதும் மகிழ்ச்சி அது நல்ல கல்லூரி என்று,  E & I என்று பிரிவு பொறியியலில் உள்ளது என அன்று தான் தெரியும்.
எனக்கு தெரிந்த படிப்பை சொல்லி இதை எடுத்திருக்கலாமே என்றேன்.
அதற்கு சண்முகம் "எல்லாரும் தான் அத படிக்கிறாங்க , நான் அதுல விழக்கூடாது , வேற எதாவது புது முயற்சி செய்யனும்"
 இந்த சொற்கள் கோர்த்த அவருடைய குரலில் வரும் ஓசை காற்றில் மட்டும் கலக்கவில்லை என் சிந்தனையிலும் கலந்தது. சண்முகம் கல்லூரி படிப்பை முடித்தார், ஒரு பெரிய IT நிறுவனத்தில் வேலை கிடைத்தது , கை நேரிய சம்பளம் என்று இருந்தது. எல்லோருக்கும் ஒரே மகிழ்ச்சி ஆனால் துயரம் ஒரு ஆண்டுகளுக்கு மேல் சண்முகத்தை அந்த நிறுவனம் அழைக்கவில்லை, அதன் பிறகு அழைத்தும் அவர் போகவில்லை.
    அவர் வீட்டிலே சில ஆண்டுகள் இருந்தார், இந்த சமூகம் அவரை வாட்டி வதைத்தது, ஆனால் அவர் எதையோ சிந்தித்து இருந்தார் என்பது புலப்பட்டது, பிறகு அவர் படித்த படிப்பிலேயே வேலை தேடினார், வேலையும் கிடைத்தது மிக சொற்பமான சம்பளம் தான் ஆனால் மன நிறைவுடன் சென்றார். அவருடன் படித்த சக நண்பர்கள், காம்பஸ் இன்டர்வ்யுவில் கிடைத்த IT  நிறுவனத்தில் தாமதமான அழைப்பில் சேர்ந்து லட்சத்தில் புரண்ட போது , சண்முகம் லட்சியத்தில் நகர்ந்தார். ECE /EEE /E & I  என இது போன்ற தொழிற் கல்வி பயின்று வேறு துறையான IT துறையில் பணத்திற்காகவும் குடும்பதிர்காகவும் செல்லும் இளைஞ்சர்களில் தொழிற்கல்வியை போற்றி ஒரு இலக்குடன் இருந்த சண்முகத்தை பகடி செய்தது.
    சண்முகத்தின் விடா முயற்சி எனும் முகம் அவரை இன்று ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமை மின் பொறியாளராக அடையாளம் காட்டியுள்ளது. ஒரு லட்சியத்தின் போராட்டத்தில் சண்முகம்மும் ஒரு போராளி.      

Thursday, September 4, 2014

தூரிகையின் தேவதைகள்

மழலை விரல்கள்  உணரும்
      உயிர் எழுத்துகள்  உயிர்பெற்றதின் மெய்யை,
    விடலைப்பருவத்தின் மனம் சொல்லும்
ரிங்கா ரிங்கா ரோசஸ் இன்னும் வாடவில்லை என்று ,
    இளமையில்  முகவரி தெரியும்
 தொடுவானம் தோறும் மயில்கர்களாய் ,
   பௌர்ணமியை ரசிக்கும் ஓவியன் போல்
       சலனமேயில்லாமல் எங்கள் வெற்றியை ரசித்து,
       அடுத்த வெற்றியை ரசிக்க தயராவாய் ,   
 வருடங்கள் மாறலாம் 
        மாதங்கள் மாறுவதில்லை,
  ஏறும் கால்கள் மாறலாம்
     சுமக்கும் படிகள்  மாறுவதில்லை  
  கருப்பலகையை வெண்மைத்தீட்டிய தூரிகையின் தேவதைகளுக்கு !!!