Translate

Tuesday, November 11, 2014

தனிமை !

கடற்கரையின் காற்று
சுதந்திரத்தின் சுவாசம்,
சிறைப்பட்ட காற்று
பலூனின் நேசம் ,
எந்த குண்டு விடுவிக்குமோ ?
அதற்கு பகலவன் துணை நிற்பானோ ?
அனாதையான பலூன்களை
காற்று வழிநடத்தும்,
ஆனால்
என்ன பயன் காற்றுக்கு சுதந்திரமில்லையே !
இருப்பினும் மெதுவாக செல்லும்,
பலூனின் காதலைக் கொல்லும்!
இறுதியில் காற்றுக்கு சுதந்திரம்
பலூன் மண்ணுக்குள் பத்திரம்
தன் காதலோடு.. !!!

பேராசையின் பிம்பங்கள் !

என் செலவவுக்கு அளவில்லை
ஆசைக்கும் மதியில்லை ,
செல்வதை அழித்தேன்; சுவைத்தேன் ,
இதில் சர்கரை நோய்யண்டினாலும்
அடைக்களம் தர காந்தியிருக்கிறார் !
மமதை பீடிக்க ,
மழையில் கரைந்த மார்கழி கோலம் போல
கனவும் கலைந்தது !!...