Translate

Thursday, September 4, 2014

தூரிகையின் தேவதைகள்

மழலை விரல்கள்  உணரும்
      உயிர் எழுத்துகள்  உயிர்பெற்றதின் மெய்யை,
    விடலைப்பருவத்தின் மனம் சொல்லும்
ரிங்கா ரிங்கா ரோசஸ் இன்னும் வாடவில்லை என்று ,
    இளமையில்  முகவரி தெரியும்
 தொடுவானம் தோறும் மயில்கர்களாய் ,
   பௌர்ணமியை ரசிக்கும் ஓவியன் போல்
       சலனமேயில்லாமல் எங்கள் வெற்றியை ரசித்து,
       அடுத்த வெற்றியை ரசிக்க தயராவாய் ,   
 வருடங்கள் மாறலாம் 
        மாதங்கள் மாறுவதில்லை,
  ஏறும் கால்கள் மாறலாம்
     சுமக்கும் படிகள்  மாறுவதில்லை  
  கருப்பலகையை வெண்மைத்தீட்டிய தூரிகையின் தேவதைகளுக்கு !!!

No comments:

Post a Comment