Translate

Wednesday, December 23, 2015

போதுமன்றோ !

முயற்சிகளனைத்தும் அயர்ச்சியாயின்,
துயரத்தின் உயரம் அதிகமாயின்,
சுற்றமும் உன்னை ஒதுக்குமாயின்,
உறக்கமே கனவாயின்,
தோல்வியின் கீறல்கள் கிழிக்குமாயின்;
குருதிச் சூடு குறையுமோ ?
குறிக்கோள் ஒரு கலைஞனின் இயற்கைக்கோளாயின்;
ரணம் ஆறாவிட்டால்
நம்பிக்கையெனும் மருந்து போதுமன்றோ !!

No comments:

Post a Comment