Translate

Sunday, October 5, 2014

பாசத்திற்கு பின் தியாகம் என்ற சொல் மறைந்திருக்கும் .

       இந்த பூவுலகில் பாசம் என்ற உணர்வு திகழ்வதால் தானோ இயற்கை ஓரளவிற்கு சீராக இயங்கிக்கொண்டிருகிறது, மனிதர்களிடம் பாசம் சாயம் நீர்த்து பல காலம் ஆகிறது. காந்தியின் சிரிப்பை வைத்து தான் பாசம் நிர்ணயம் செய்யப்படுகிறது. இக்ககட்டதில் நான் சில குடும்பங்களை கண்டிருக்கிறேன், பாசத்தின் அர்த்தத்தை விழியன் வழி அனுபவித்தேன்.
ஆனால் இந்த பாசம் பின்னே எவ்வளவு தியாகம் ஒளிந்திருக்கிறது. உண்மையான பாசத்தை காட்டுபவர்கள் தியாகத்தை மறைப்பர், இந்த மாண்பு தான் அவர்களை மான் என்று சொல்ல வைக்கும் .

     அருள் ஜோதி , என நெருங்கிய நண்பன். MSW படித்துவிட்டு TI நிறுவனத்தில் மனிதவள துறையில் பதவியில் முற்பட்டவர் ஆகா (சீனியர் - HR) உள்ளான். இவனுக்கு 4 அண்ணன்கள் உள்ளார்கள், இவன் தான் கடை குட்டி. எல்லோருக்கும் அருள் என்றால் அவ்வளவு பாசம். அருள் MSW படிக்கும் போது அண்ணன்கள் சிறிய வேலையில் தான் இருந்தார்கள், அவர்களுக்கு சிரமம் கொடுக்க கூடாதென்பதற்காக வங்கியில் படிப்பதற்கான கடன் வாங்கி படித்து முடித்தான், வேலைக்கு சேர்ந்ததும் சிறுக சிறுக சேர்த்து கட்டி முடித்தான். இந்த காலத்தில் ஏமாற்றும் மக்களிடையே நேர்மையான மனிதர்கள் பௌர்ணமி போல உடனுக்குடன் தெரிய மாட்டார்கள். எல்லோருக்கும் 5 நாள் வேலையிருக்கும் ஆனால் அருளுக்கு 6 நாட்கள் வேலை இன்னும் பல நாட்கள் ஞாயிறு கூட செல்வான் , பார்க்கவே பாவமாக இருக்கும்.
" ஏண்டா நீ வேல மாற வேண்டியது தானே ?" என்று ஒரு முறை கேட்டேன்.
அதற்கு அவன் " இல்லைட வீட்டுக்காக புதுசா லோன் எடுத்திருக்கேன் அது கம்பெனி மூல்யமா ப்ராசெஸ் ஆயிருக்க , வேலைவிட்ட மொத்த காசையும் கேப்பானுங்க, முடியற வரைக்கும் போயிதான் ஆகனும்"
 நான் அதன் பின் எந்த வார்த்தையும் சொல்லவில்லை, அவனிடம் இருந்த கற்று கொள்ளவேண்டும் என்று நினைத்தேன். அருளின் அண்ணன் BL செய்தால் நல்லது என்று கூறி அவனை மைசூர் பல்கலைகழகத்தில் சேர்த்தார் , இது தொலைதூர கல்வி போல, எந்த வித ஆட்சேபனை தெரிவிக்காமல் வெற்றிகரமாக மூன்றாவது ஆண்டு முடிக்க போகிறான் அருள். இதில் வியப்பு என்னவென்றால் , எல்லா விடுப்பையும் சேர்த்து BL தேர்வு எழுதுவான்.
   இந்த மாதிரியான பாசம் நமக்கெல்லாம் முன் மாதிரி தானே !!

          சந்தீப், என பள்ளி நண்பன். திருமணம் முடிந்து 2 ஆண்டுகளக்கு மேல் ஆகிறது , இவன் காதலிக்கும் போது இவன் மனைவியை எப்படி காதலித்தானோ அதை விட பல மடங்கு அதிக பாசம் , காதலுடன் திகழ்கிறான். நாங்கள் நட்பு வட்டாரத்தில் அவன் கல்யாண வேளையில் "இன்னும் 30 நாள் தான் மச்சி , இன்னும் இரண்டு வருஷம் கழிச்சி இவளோ பாசமா இருக்கின்னு பாப்போம் " என்று கூறினோம்.
அவன் காதல் எங்கள் கன்னத்தை சுளீரென அடிக்கிறது இன்று. இது மிக தூய்மையான காதல் என்று நான் கருதுவேன், காதலிக்கும் போது ஒன்றே நின்று பெற்றோர் நிச்சயித்த திருமணம் ஆகா மாற்றினார்கள்.
சந்தீப் என்னிடம் உரையாடும் போதெல்லாம் அவன் காதலின் நறுமணம் வருடாவருடம் வாசனை அதிகமாகும் என்று என் மனம் சொன்னது, இது எல்லை அற்ற பாசம் அமிபாவைப் போல, பல நேரங்களில் அவன்  முக நூலில் தங்களது புகைபடங்களை பகிர்ந்து அதிகமாக செய்வது போல தோன்றும் பலருக்கு ஆனால் அது உண்மையான காதலின் பாசத்தின் வெளிப்பாடு, தன் மனைவிக்காக ஒவ்வொரு ஞாயிறும் நண்பர்களை பார்ப்பதை தியாகம் செய்தான் இன்று வரையில்.
      சந்தீபிற்கு மேல் 2 அண்ணன்கள் , ஜோதியை போன்று இவனும் கடை குட்டி; இவர்களை ஆனந்தம் பிரதேர்ஸ் என்று தான் சொல்ல வேண்டும். இத்தகைய பாசம் இந்த உடனடி பீட்சா உலகத்தின் பழைய மல்லி பூ இட்லி ஏதொரு மூலையில்.

       இத்தகைய பாசம் நாம் நம் நட்பு சூழலில் நிச்சியம் இருக்கும் , இந்த சிறுபகிர்வை வாசித்து உங்கள் நினைவுகளை தூண்டினால் அதுவே அலாதியான மகிழ்ச்சி எனக்கு.     

No comments:

Post a Comment