Translate

Friday, April 21, 2017

மானம்

இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்.

  "அந்த ஷாட்டுக்கு  லென்ஸ் வேற மாத்தணும், டெலி யூஸ் பண்ணு " என்று சொல்லி நகர்ந்தான் ராஜேஷ், பார்த்த மாத்திரத்தில் பலுக்கலை (Lens) சொல்லக்கூடியவன், அற்புதமான நிழற்பட கலைஞன்; அந்த நிறுவனமே ராஜேஷை நம்பி ஓடிக்கொண்டிருந்தது. மேலும் நிறுவனத்தில் அவனுக்கு அனைத்து சலுகையும் நல்ல சம்பளமும் அளித்தனர். ஒரு நாள் விடுப்பெடுத்தால் நிறுவனமே ஸ்தம்பித்த சூழல் உருவாகும், ராஜா வாக வாழந்து வந்தான் ராஜேஷ் !
      "என்ன இருந்தாலும் முதலாளிக்கு இப்படி துரோகம்  பண்ணியிருக்க கூடாது  அவன்.. " என ஒரே எதிரொலியாக நிறுவனத்தில் ஒலித்துக்கொண்டிருந்தது.
       "என்னையா , ராஜேஷ் ,.. நம்ம கம்பனிக்கு வர விளம்பர ஆர்டர் லாம் அவன் சொந்தக்காரன் கம்பெனிக்கு திருப்பி விட்றானமே"  என்ற பேச்சை முதலாளி காதிலே விழ, அதீத மனம் வருந்தினார.ராஜேஷை தனது அறைக்கு வர சொன்னார். இரண்டு நிமிடங்கள் எதுவுமே பேசவில்லை முதலாளி எதுவும் சொல்லாமல் " ஒன்னும் இல்ல ராஜேஷ் .. வேலைய பாருங்க " என்று தயக்கத்துடன் சொல்லி அனுப்பினார்.
          எல்லா கூற்றையும் தெரிந்த ராஜேஷ் அமைதிகாத்தன் மனம் வருந்தினான், அடுத்த நாளிலிருந்து அவன் அந்த நிறுவனத்திற்கு வேலைக்கு செல்லவில்லை, உதறிவிட்டான்; அலைபேசி வந்தது அவனை பணிக்கு வர கூறி இருப்பின் அவன் முடிவில் நின்றான். ஏன் இந்த முடிவு என அவன் தங்கை கேட்கையில் அதற்கு " ஒரு வேலை அதுல நம்மதான் ராஜா, நம்மளால தான் பண்ண முடியும்ன்னு இருந்தாலும் அந்த இடத்துல ஒரு சின்ன இழிவு ஏற்பட்டுடுச்சினா அங்க இருக்குறது தான் இழிவு அதனால நஷ்டம் எவளோ ஆனாலும் செரி..அதான் வெளிய வந்துட்டேன் " என்றான் ராஜேஷ் .
       
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்.

          

No comments:

Post a Comment