வண்ணமிகு வெள்ளைகள் !!
நிறம் ஒரு மனிதனை நிர்ணயம் செய்வதில்லை, ஆனால் நம்மில் இருக்கும் பலர் நிறம் தான் பிரதானம் எனினும் அகத்தை பார்க்கும் கண்கள் அவர்களிடம் இருந்தும் பார்க்க இயலாததே அதற்கு காரணம். என் பயணத்தின் சில பயணிகள் பல நிறங்களில் இருந்தாலும் அவர்கள் வண்ணமிகு வெள்ளையாக திகழ்ந்தார்கள், இவர்களைப் போல் நீங்களும் உங்கள் பயணங்களில் சந்தித்த வண்ணமிகு வெள்ளைகளை இந்த தொடர் பெட்ரோல் இல்லாமல் நினைவு எனும் வண்டியை ஓட்ட வைக்கும் என்று நம்புகிறேன்.
சுரேந்தர், எனது குடியிருப்பின் அருகில் வசிக்கும் நண்பன் அவனை வருடத்திற்கு இருமுறைப் பார்த்தல் அது பெரிது. இவன் என்னுடன் பள்ளியில் ஒன்றாக படித்தான், படிப்பில் அவ்வளவாக நாட்டமில்லாதவன். எல்லா ஆசிரியர்களும் அவனைப் பற்றி பாட்டு பாடாமல் அன்று ஷோ முடியாது, புதியதாக வரும் ஆசிரியர்களுக்கு எப்படி அடிப்பது என்பதை சுரேனை வைத்து பயிற்சி மேற்கொள்வார்கள்.
அவனை பள்ளி விளக்கியது, பத்தாவது டுடோரியலில் தான் படித்தான்.
நன்றாக வரையும் திறன் அவனிடம் உண்டு, வெகுளியாக பேசுவான் அவனக்கு சில சூழ்நிலையில் அளவுகோல் தெரியாது. சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்னர் அவனை நான் சந்தித்தேன், கையில் காமேரவுடன் லயோலா கல்லூரியின் விழாவை படம் பிடித்துக் கொண்டிருந்தான். " டேய் மச்சி !! என்னடா இங்க ?? " என்றேன், " ஹாய் மச்சி !! போட்டோகிராபர் டா. என்னோட ஏஜன்சி தான் கான்ட்ராக்ட்" என்றான் சுரேன். " சூப்பர் டா" என்று கூறி விடைப்பெற்றேன்.
சில ஆண்டுகள் முன் சுரேனை திரும்பவும் சந்திதேன், சென்னையில் சிறந்து புகைப்பட கலைஞனாக மிகவும் மகிழ்ச்சியுற்றேன், படிப்பு மட்டும் தான் ஒருவனை உயர்த்தும் என்பது தகர்ந்தது. ஒரு நாள் அதே தெருவைச் சார்ந்த நண்பன் எழில் மிகவும் துன்பத்தில் இருந்தான் சுரேனிடம் அவன் துன்பங்களை பகிர்ந்தான் அவனுடன் நானும் இருந்தேன் நான் ஒரு பொம்மை போல பார்த்துக் கொண்டிருந்தேன். சுரேன் " மச்சா , ஒரு ப்ரோப்ளம் இல்ல .. நீ வண்டி எடு பொண்ணு வீட்டுக்கு போலாம் , அவ பெரன்ட்ஸ் கிட்ட நான் பேசுறேன்" என்றான். நான் அதிர்ந்து போனேன், எழிலை அவன் எப்போதாவது தான் பார்ப்பன் என்னைப் போல் இருந்தாலும் அவன் அன்று கூறிய ஆறுதலான வார்த்தை ஒரு நண்பனுக்கு தோள் கொடுத்தமை என்னை சிந்திக்க வைத்தது.
சில தினங்கள் முன்னர் எழிலை சந்திக்கையில், " என்னடா எப்படி இருக்க ?? " என்றேன்.. " நல்ல இருக்கேன் மச்சி" என்றான் எழில்.
" சுரேனை பாத்தியா அவனை பாத்து ரொம்ப நாள் ஆச்சு" என்றேன்.
அதற்கு அவன் " மச்சி சுரேன் என்கிட்டே எப்போயவது போன் பண்ணுவான்டா, ஆனா நான் கஷ்டப் பட்டிருக்கும் போது தினமும் போன் பண்ணி நான் இருக்கேன் டா , யாராவது எதாவது பிரச்சனை பண்ணா சொல்லு மச்சி ன்னு சொல்லுவான் டா, நம்பெல்லாம் அவன அசால்ட் ஆஹ் நினைப்போம் ஆனா அவன் செம்ம கேரக்டர் டா" என்று கூறி நெகிழ்ந்தான்.
அவனிடம் விடைப்பெற்று நடந்து வருகையில் ஒருவன் வாழ்கையில் உயருவது மட்டும் முக்கியமில்லை அவன் அகத்தில் வண்ணமிகு வெள்ளையாக இருந்து பலரின் வாழ்கைக்கு பல நிறங்களை தெளிக்க வேண்டும். அதை சுரேன் செய்து கொண்டிருக்கிறான்
தேவேந்திரன் என் மாநில கல்லூரி நண்பன், ராமநாதபுரத்தைச் சார்ந்தவன். அவனும் நானும் கிரிகட் விளையாடியுள்ளோம், தேவா மிகவும் திறமையாக விளையாடக் கூடியவன். தேவா என்னக்கு அவ்வளவாக பரிட்சயம் இல்லை, அவனை நான் முதலில் பார்த்தது ஜெயா டிவியில் தான் அன்று கல்லூரி ஸ்ட்ரைக் , எல்லோரும் வகுப்புகளை புறக்கணித்து ஸ்ட்ரைக்கில் சேருமாறு சில மாணவர்கள் போர்க்கொடி தூக்க எல்லோரும் சென்றோம். "இல்லை இல்லை .. அடிப்படை வசதி இல்லை .. இல்லை இல்லை சுத்தம் இல்லை " என்ற கோஷம் ஒலிக்க. ஒரு பெரிய கல் சர்ர்ர்ர் என கல்லூரி முதல்வர் தலையில் விழுந்தது. காவலர்கள் பெரிய படையுடன் நின்று கொண்டிருந்தார்கள், முதல்வரின் ரத்தத்தால் லட்டி சார்ஜ் கொடுக்க, எல்லோரும் மாரத்தான் ஓட்டம் எடுத்தோம், அடிக்கு பயந்து நானும் வினோத்தும் தமிழ் துறையில் தஞ்சம் புகுந்தோம், பின்னர் தப்பித்து வீடு சேர்ந்தேன். டிவியை போட்டேன் மாநில கல்லூரியில் மாணவர்களுக்கும் போலீசாருக்கும் மோதல் என முக்கிய செய்தியாக ஓடிக்கொண்டிருந்தது அன்று தி .மு. க ஆட்சி என்பதால் ஜெயா டிவியில் இந்த செய்திக்கு அழுத்தம் கொடுத்தார்கள், அப்படி பார்க்கும் போது " சார் இங்க ஒருத்தன் செடி பின்னாடி மறஞ்சிட்டு இருக்கான் பாருங்க" என்று போலீஸ் சொல்ல , தேவா வெளியே வந்தான். " சார் சார் .. நான் ஊர் சார் , கம்ப்யுடர் டிபார்ட்மெண்டுக்கு வந்தேன் சார் " என்று கூறினான். அவனை அடித்தார்கள் அவனும் வலி தாங்காமல் ஓடினான். இப்படி தான் தேவாவின் அதிசிய அறிமுகம். வெகு நாட்கள் கழித்து தேவாவை பார்த்தேன் அந்த சம்பவம் அவனை பாதிக்கும் என்று நான் கேட்கவில்லை ஆனால் அவனே அதை கூறி நகைத்தான். " மாமா எவனாவது செடி பின்னாடி ஒளிவானா டா " என்று சிரிப்புடன் கூறினான்.
பின்னர் நெருக்கமாக பழகும் வாய்ப்பு அமைந்தது, அவன் எல்லோருக்கும் ஓடி ஓடி உதவி செய்தான் இதுவரை யாருக்கும் அது தெரியாது. ஒரு தோழியின் பாட்டி இறந்து போகையில் அவளை வளர்த்த பாட்டி மிகவும் துன்பத்தில் இருக்கும் போது இவன் கையில் இருக்கும் பணத்தைக் வைத்து அவளின் ஊருக்கு அழைத்துச் சென்றான். காது மற்றும் வாய் பேச முடியாமல் இருக்கும் மாணவர்கள் கணினி துறையில் இளங்கலை படித்துக் கொண்டிருந்தார்கள், தேவா அவர்களிடம் பேசிக் கொண்டே இருப்பான் குறியீடு மொழி மூலம். குறியீடு மொழியை சட்டென கற்றுக் கொண்டான். எப்போதும் அவர்களுடன் சிரித்து மகிழ வைத்திருப்பான் அவர்களை,அன்று எனக்கு இவன் மேல் மதிப்பு கூடியது, தேவா திடீர் தீடீரென தனது இலக்கை மாற்றி கொள்வான், ஒரு நாள் போலிஸ் ஆகவேண்டும் என்பான், இன்னொரு நாள் எதாவது அரசு வேலை , இன்னொரு நாள் கிரிகெடர் என குறுங்கு போல மாறுவான். இதுவரை அவனை நகையில்லாமல் பார்த்திருக்கிறேன் ஆனால் புன்னகை இல்லாமல் இல்லை, அவனுக்கு இருக்கும் தனிமை, கவலை யாருக்கும் கிடையாது என்பதை நான் நன்கறிவேன் இதை நான் அவனிடம் கற்றுக் கொண்டேன்.
சமீபத்தில் அவனை பார்த்தேன் 4 ஆண்டுகளுக்கு பிறகு, அதே தேவாவாக ! ஒரு பெரிய கம்பெனி ஆரம்பித்திருக்கிறான் , கேட்க அவ்வளவு மகிழ்ச்சி ." மச்சி நம்ப காலேஜ் ல போயிட்டு கஷடப்பற்ற பசங்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் டா அவங்க டிகிரி முடிக்கல செரிய படிக்கலனாலும் பரவா இல்ல நாம்ப சொல்லிக் கொடுப்போம் " என்றான்
நான் ஒரு வினாடி உறைந்தேன், இத்தைகைய வண்ணமிகு வெள்ளைக்காரன் கருப்பு உருவத்தில் .....
சரவணன் எனது அலுவலகத்தில் வேலை செய்யும் நண்பர், அவ்வளவு பரிச்சயம் இல்லை இருப்பினும் தூரத்திலிருந்து அவரை சிக்னல் லைட்டாக பார்த்ததுண்டு. அவர் நான் அமரும் இடத்திலிருந்து அருகமையில் தான் அவர் அமருவார், நான்கு நபர்களுக்கு ஒரு தடுப்பு போல அமைந்திருக்கும். தகவல் தொழில்நுட்பம் என்றாலே வெகு நேரம் வேலை,கணினியை வேண்டா வெறுப்பாக பார்க்க வேண்டும் என்பது போக நாம் அமெரிக்க ஊழியர்களிடம் நிறைய உரையாட வேண்டும் வேலை சார்பாக. அப்படி சரவணனும் உரையாடுவார் அவருக்கு தெரிந்த ஆங்கிலத்தை வைத்து, பேசும் போது ஹெட் செட் அணிவதால் அவர் குரல் உயர்த்தி கேட்க்கும் மற்றவர்களுக்கு. அவர் பேசம் ஆரம்பித்தால் சின்ன தம்பி பிரபு பாட ஆரம்பிச்சிட்டான் என்று வரு வது போல உஸ்ஸ் உஸ் என சில பெண்கள் அவரை பகடி செய்வார்கள், அவருக்கு அதெல்லாம் தெரியாது, சரவணன் சிரமப்பட்டு தான் ஆங்கிலம் பேசுவார் ஆனால் அதில் அவர் அதிகம் பேசினால் நல்ல நேர்த்தி கிடைக்கும் மற்றும் வேலையும் முடியும் என்ற சிந்தனை அவருக்கு.
is , was, that ,sure, Yes , No, definetly.. என்ற ஆங்கில சொற்கள் அங்கும் இங்கும் வெடிக்க, அயர்லாந்த் மகராணி என்று நினைக்கும் சில பெண்கள் "ஒபாமா பேச ஆரம்பிச்சிட்டாரு" என்ற பகடியை நான் கேட்டிருக்கிறேன். அவருக்கே இது காதில் விழுந்தாலும் அவர் சொல்வது "அட விடுங்க பாஸ் ! நம்மால சிரிக்றாங்க இல்ல , என்சாய் பண்ணட்டும் ! நான் நாளுக்கு நாள் முன்னேறிகிட்டு இருக்கேன்!!" சரவணனின் சிரிப்பும் அப்படி ஒரு தனித்தன்மை கொண்டது பள்ளியில் மணி போல சத்தமாக ஒலிக்கும் , யார் அருகில் இருகிறார்கள் என்பதெல்லாம் தெரியாது மனதிலிருந்து வரும் தூய மழை அது ! அன்று ஒரு நண்பரின் வீட்டில் துக்க சம்பவம் எல்லோரும் சென்றிருந்தோம் சரவணனும் இறுதிவரை வந்தார், சொந்த பந்தங்கள் அருகில் வராமல் ஒதுங்கி நின்ற போது அவர் உதவினார், உதவியின் முதல் கை அவரிடமிருந்து வந்தது. நாம் சொல்வது சரி என்றால் யார் என்னவென்று கருதாமல் நம்மை பாராட்டி பேசுவார். இது போல் சொல்லிக் கொண்டே போகலாம்.
சரவணனும் பல வண்ணங்கள் தெளிக்கும் தூரிகை அவர் மனதில் இருக்கும் வண்ணமிகு வெள்ளையினால்
இவர்களைப் போல பல மனிதர்கள் நம் வாழ்வில் கடந்திருப்போம்,அந்த வண்ணமிகு வெள்ளையை உங்கள் கண்கள் இனி அதிகம் என்ற நம்பிக்கையுடன் ......
நிறம் ஒரு மனிதனை நிர்ணயம் செய்வதில்லை, ஆனால் நம்மில் இருக்கும் பலர் நிறம் தான் பிரதானம் எனினும் அகத்தை பார்க்கும் கண்கள் அவர்களிடம் இருந்தும் பார்க்க இயலாததே அதற்கு காரணம். என் பயணத்தின் சில பயணிகள் பல நிறங்களில் இருந்தாலும் அவர்கள் வண்ணமிகு வெள்ளையாக திகழ்ந்தார்கள், இவர்களைப் போல் நீங்களும் உங்கள் பயணங்களில் சந்தித்த வண்ணமிகு வெள்ளைகளை இந்த தொடர் பெட்ரோல் இல்லாமல் நினைவு எனும் வண்டியை ஓட்ட வைக்கும் என்று நம்புகிறேன்.
சுரேந்தர், எனது குடியிருப்பின் அருகில் வசிக்கும் நண்பன் அவனை வருடத்திற்கு இருமுறைப் பார்த்தல் அது பெரிது. இவன் என்னுடன் பள்ளியில் ஒன்றாக படித்தான், படிப்பில் அவ்வளவாக நாட்டமில்லாதவன். எல்லா ஆசிரியர்களும் அவனைப் பற்றி பாட்டு பாடாமல் அன்று ஷோ முடியாது, புதியதாக வரும் ஆசிரியர்களுக்கு எப்படி அடிப்பது என்பதை சுரேனை வைத்து பயிற்சி மேற்கொள்வார்கள்.
அவனை பள்ளி விளக்கியது, பத்தாவது டுடோரியலில் தான் படித்தான்.
நன்றாக வரையும் திறன் அவனிடம் உண்டு, வெகுளியாக பேசுவான் அவனக்கு சில சூழ்நிலையில் அளவுகோல் தெரியாது. சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்னர் அவனை நான் சந்தித்தேன், கையில் காமேரவுடன் லயோலா கல்லூரியின் விழாவை படம் பிடித்துக் கொண்டிருந்தான். " டேய் மச்சி !! என்னடா இங்க ?? " என்றேன், " ஹாய் மச்சி !! போட்டோகிராபர் டா. என்னோட ஏஜன்சி தான் கான்ட்ராக்ட்" என்றான் சுரேன். " சூப்பர் டா" என்று கூறி விடைப்பெற்றேன்.
சில ஆண்டுகள் முன் சுரேனை திரும்பவும் சந்திதேன், சென்னையில் சிறந்து புகைப்பட கலைஞனாக மிகவும் மகிழ்ச்சியுற்றேன், படிப்பு மட்டும் தான் ஒருவனை உயர்த்தும் என்பது தகர்ந்தது. ஒரு நாள் அதே தெருவைச் சார்ந்த நண்பன் எழில் மிகவும் துன்பத்தில் இருந்தான் சுரேனிடம் அவன் துன்பங்களை பகிர்ந்தான் அவனுடன் நானும் இருந்தேன் நான் ஒரு பொம்மை போல பார்த்துக் கொண்டிருந்தேன். சுரேன் " மச்சா , ஒரு ப்ரோப்ளம் இல்ல .. நீ வண்டி எடு பொண்ணு வீட்டுக்கு போலாம் , அவ பெரன்ட்ஸ் கிட்ட நான் பேசுறேன்" என்றான். நான் அதிர்ந்து போனேன், எழிலை அவன் எப்போதாவது தான் பார்ப்பன் என்னைப் போல் இருந்தாலும் அவன் அன்று கூறிய ஆறுதலான வார்த்தை ஒரு நண்பனுக்கு தோள் கொடுத்தமை என்னை சிந்திக்க வைத்தது.
சில தினங்கள் முன்னர் எழிலை சந்திக்கையில், " என்னடா எப்படி இருக்க ?? " என்றேன்.. " நல்ல இருக்கேன் மச்சி" என்றான் எழில்.
" சுரேனை பாத்தியா அவனை பாத்து ரொம்ப நாள் ஆச்சு" என்றேன்.
அதற்கு அவன் " மச்சி சுரேன் என்கிட்டே எப்போயவது போன் பண்ணுவான்டா, ஆனா நான் கஷ்டப் பட்டிருக்கும் போது தினமும் போன் பண்ணி நான் இருக்கேன் டா , யாராவது எதாவது பிரச்சனை பண்ணா சொல்லு மச்சி ன்னு சொல்லுவான் டா, நம்பெல்லாம் அவன அசால்ட் ஆஹ் நினைப்போம் ஆனா அவன் செம்ம கேரக்டர் டா" என்று கூறி நெகிழ்ந்தான்.
அவனிடம் விடைப்பெற்று நடந்து வருகையில் ஒருவன் வாழ்கையில் உயருவது மட்டும் முக்கியமில்லை அவன் அகத்தில் வண்ணமிகு வெள்ளையாக இருந்து பலரின் வாழ்கைக்கு பல நிறங்களை தெளிக்க வேண்டும். அதை சுரேன் செய்து கொண்டிருக்கிறான்
தேவேந்திரன் என் மாநில கல்லூரி நண்பன், ராமநாதபுரத்தைச் சார்ந்தவன். அவனும் நானும் கிரிகட் விளையாடியுள்ளோம், தேவா மிகவும் திறமையாக விளையாடக் கூடியவன். தேவா என்னக்கு அவ்வளவாக பரிட்சயம் இல்லை, அவனை நான் முதலில் பார்த்தது ஜெயா டிவியில் தான் அன்று கல்லூரி ஸ்ட்ரைக் , எல்லோரும் வகுப்புகளை புறக்கணித்து ஸ்ட்ரைக்கில் சேருமாறு சில மாணவர்கள் போர்க்கொடி தூக்க எல்லோரும் சென்றோம். "இல்லை இல்லை .. அடிப்படை வசதி இல்லை .. இல்லை இல்லை சுத்தம் இல்லை " என்ற கோஷம் ஒலிக்க. ஒரு பெரிய கல் சர்ர்ர்ர் என கல்லூரி முதல்வர் தலையில் விழுந்தது. காவலர்கள் பெரிய படையுடன் நின்று கொண்டிருந்தார்கள், முதல்வரின் ரத்தத்தால் லட்டி சார்ஜ் கொடுக்க, எல்லோரும் மாரத்தான் ஓட்டம் எடுத்தோம், அடிக்கு பயந்து நானும் வினோத்தும் தமிழ் துறையில் தஞ்சம் புகுந்தோம், பின்னர் தப்பித்து வீடு சேர்ந்தேன். டிவியை போட்டேன் மாநில கல்லூரியில் மாணவர்களுக்கும் போலீசாருக்கும் மோதல் என முக்கிய செய்தியாக ஓடிக்கொண்டிருந்தது அன்று தி .மு. க ஆட்சி என்பதால் ஜெயா டிவியில் இந்த செய்திக்கு அழுத்தம் கொடுத்தார்கள், அப்படி பார்க்கும் போது " சார் இங்க ஒருத்தன் செடி பின்னாடி மறஞ்சிட்டு இருக்கான் பாருங்க" என்று போலீஸ் சொல்ல , தேவா வெளியே வந்தான். " சார் சார் .. நான் ஊர் சார் , கம்ப்யுடர் டிபார்ட்மெண்டுக்கு வந்தேன் சார் " என்று கூறினான். அவனை அடித்தார்கள் அவனும் வலி தாங்காமல் ஓடினான். இப்படி தான் தேவாவின் அதிசிய அறிமுகம். வெகு நாட்கள் கழித்து தேவாவை பார்த்தேன் அந்த சம்பவம் அவனை பாதிக்கும் என்று நான் கேட்கவில்லை ஆனால் அவனே அதை கூறி நகைத்தான். " மாமா எவனாவது செடி பின்னாடி ஒளிவானா டா " என்று சிரிப்புடன் கூறினான்.
பின்னர் நெருக்கமாக பழகும் வாய்ப்பு அமைந்தது, அவன் எல்லோருக்கும் ஓடி ஓடி உதவி செய்தான் இதுவரை யாருக்கும் அது தெரியாது. ஒரு தோழியின் பாட்டி இறந்து போகையில் அவளை வளர்த்த பாட்டி மிகவும் துன்பத்தில் இருக்கும் போது இவன் கையில் இருக்கும் பணத்தைக் வைத்து அவளின் ஊருக்கு அழைத்துச் சென்றான். காது மற்றும் வாய் பேச முடியாமல் இருக்கும் மாணவர்கள் கணினி துறையில் இளங்கலை படித்துக் கொண்டிருந்தார்கள், தேவா அவர்களிடம் பேசிக் கொண்டே இருப்பான் குறியீடு மொழி மூலம். குறியீடு மொழியை சட்டென கற்றுக் கொண்டான். எப்போதும் அவர்களுடன் சிரித்து மகிழ வைத்திருப்பான் அவர்களை,அன்று எனக்கு இவன் மேல் மதிப்பு கூடியது, தேவா திடீர் தீடீரென தனது இலக்கை மாற்றி கொள்வான், ஒரு நாள் போலிஸ் ஆகவேண்டும் என்பான், இன்னொரு நாள் எதாவது அரசு வேலை , இன்னொரு நாள் கிரிகெடர் என குறுங்கு போல மாறுவான். இதுவரை அவனை நகையில்லாமல் பார்த்திருக்கிறேன் ஆனால் புன்னகை இல்லாமல் இல்லை, அவனுக்கு இருக்கும் தனிமை, கவலை யாருக்கும் கிடையாது என்பதை நான் நன்கறிவேன் இதை நான் அவனிடம் கற்றுக் கொண்டேன்.
சமீபத்தில் அவனை பார்த்தேன் 4 ஆண்டுகளுக்கு பிறகு, அதே தேவாவாக ! ஒரு பெரிய கம்பெனி ஆரம்பித்திருக்கிறான் , கேட்க அவ்வளவு மகிழ்ச்சி ." மச்சி நம்ப காலேஜ் ல போயிட்டு கஷடப்பற்ற பசங்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் டா அவங்க டிகிரி முடிக்கல செரிய படிக்கலனாலும் பரவா இல்ல நாம்ப சொல்லிக் கொடுப்போம் " என்றான்
நான் ஒரு வினாடி உறைந்தேன், இத்தைகைய வண்ணமிகு வெள்ளைக்காரன் கருப்பு உருவத்தில் .....
சரவணன் எனது அலுவலகத்தில் வேலை செய்யும் நண்பர், அவ்வளவு பரிச்சயம் இல்லை இருப்பினும் தூரத்திலிருந்து அவரை சிக்னல் லைட்டாக பார்த்ததுண்டு. அவர் நான் அமரும் இடத்திலிருந்து அருகமையில் தான் அவர் அமருவார், நான்கு நபர்களுக்கு ஒரு தடுப்பு போல அமைந்திருக்கும். தகவல் தொழில்நுட்பம் என்றாலே வெகு நேரம் வேலை,கணினியை வேண்டா வெறுப்பாக பார்க்க வேண்டும் என்பது போக நாம் அமெரிக்க ஊழியர்களிடம் நிறைய உரையாட வேண்டும் வேலை சார்பாக. அப்படி சரவணனும் உரையாடுவார் அவருக்கு தெரிந்த ஆங்கிலத்தை வைத்து, பேசும் போது ஹெட் செட் அணிவதால் அவர் குரல் உயர்த்தி கேட்க்கும் மற்றவர்களுக்கு. அவர் பேசம் ஆரம்பித்தால் சின்ன தம்பி பிரபு பாட ஆரம்பிச்சிட்டான் என்று வரு வது போல உஸ்ஸ் உஸ் என சில பெண்கள் அவரை பகடி செய்வார்கள், அவருக்கு அதெல்லாம் தெரியாது, சரவணன் சிரமப்பட்டு தான் ஆங்கிலம் பேசுவார் ஆனால் அதில் அவர் அதிகம் பேசினால் நல்ல நேர்த்தி கிடைக்கும் மற்றும் வேலையும் முடியும் என்ற சிந்தனை அவருக்கு.
is , was, that ,sure, Yes , No, definetly.. என்ற ஆங்கில சொற்கள் அங்கும் இங்கும் வெடிக்க, அயர்லாந்த் மகராணி என்று நினைக்கும் சில பெண்கள் "ஒபாமா பேச ஆரம்பிச்சிட்டாரு" என்ற பகடியை நான் கேட்டிருக்கிறேன். அவருக்கே இது காதில் விழுந்தாலும் அவர் சொல்வது "அட விடுங்க பாஸ் ! நம்மால சிரிக்றாங்க இல்ல , என்சாய் பண்ணட்டும் ! நான் நாளுக்கு நாள் முன்னேறிகிட்டு இருக்கேன்!!" சரவணனின் சிரிப்பும் அப்படி ஒரு தனித்தன்மை கொண்டது பள்ளியில் மணி போல சத்தமாக ஒலிக்கும் , யார் அருகில் இருகிறார்கள் என்பதெல்லாம் தெரியாது மனதிலிருந்து வரும் தூய மழை அது ! அன்று ஒரு நண்பரின் வீட்டில் துக்க சம்பவம் எல்லோரும் சென்றிருந்தோம் சரவணனும் இறுதிவரை வந்தார், சொந்த பந்தங்கள் அருகில் வராமல் ஒதுங்கி நின்ற போது அவர் உதவினார், உதவியின் முதல் கை அவரிடமிருந்து வந்தது. நாம் சொல்வது சரி என்றால் யார் என்னவென்று கருதாமல் நம்மை பாராட்டி பேசுவார். இது போல் சொல்லிக் கொண்டே போகலாம்.
சரவணனும் பல வண்ணங்கள் தெளிக்கும் தூரிகை அவர் மனதில் இருக்கும் வண்ணமிகு வெள்ளையினால்
இவர்களைப் போல பல மனிதர்கள் நம் வாழ்வில் கடந்திருப்போம்,அந்த வண்ணமிகு வெள்ளையை உங்கள் கண்கள் இனி அதிகம் என்ற நம்பிக்கையுடன் ......
arumai vicky
ReplyDelete