Translate

Saturday, March 28, 2015

துக்கம்

    
ஓர்  ஊரில் ஒரு குதிரை வண்டிக்காரன் இருந்தான், யாராவது சவாரி செய்ய வாடிக்கையாளர்கள் வருவார்களா என்ற எண்ணத்தில் இல்லாமல் உயிரற்ற பாவைப் போல் நின்றுக் கொண்டிருந்தான். வாட்ட சாட்டமாக ஒரு நபர் வந்தார்.

"ஏன் பா , வண்டி வருமா ??" என்றார்

"ஐயா , வாங்க "என்றான் குதிரை வண்டிக்காரன்.

" மாம்பலம் போ "என்றார் அவர்.

அவரும் ஏறி அமர, டொக்.. டொக்.. என குதிரை ஓட ஆரம்பித்தது, குதிரைக்கு கொலுசு போல அதன் காலில் அணியப்படிருந்தது, ஜல்.. ஜல்.. என ஒரு இசையின் சப்தம் ஒலித்துகொண்டே பயணம் தொடங்கியது. வண்டிக்காரன் அவரிடம் "ஐயா கொஞ்சம் பேசலாங்களா ?? " என்றான்.

"சத்த வாய்ய மூடி ஒற்றியா , ஒரே நை.. நை.. ன்னு ??"

முகம் வாடியது குதிரை வண்டிகாரனுக்கு, மேலும் பயணிக்க, மாம்பலம் வந்தது. அந்த நபர் "இந்த வெச்சிக்கோ அரணா" என்று நகர்ந்தார்.

அந்த அரையணாவை பார்த்தபடியே நின்றான் குதிரை வண்டிக்காரன்,

"யோவ்வ் வண்டி வருமா திருவல்லிகேனிக்கு  , மொத்தம் மூணு பேரு  " என்று ஒரு இளைஞன் கேட்க்க.

குதிரை வண்டிக்காரன் முகம் மலர்ந்தது, "சரி ஏறுங்க தம்பி " என்றான்.

மூன்று பேரும் ஏறி அமர, வண்டி நகர்ந்தது.

"தம்பி நான் கொஞ்சம் பேசலாங்களா , மனசு சரியா இல்ல.. அதான் "

"யோவ்வ் வண்டி ஒட்டு யா , உன் ராமாயணம் எங்களுக்கு எதுக்கு, ரோட்ட பாத்து குதிரைய அடிச்சு ஒட்டு" என்றார் அதில் ஒருவர்.

வண்டிக்காரனின் முகம் நான்கு நாட்கள் ரோஜாவைப் போல் ஆனது.

திருவல்லிக்கேணி வந்தது, அவர்கள் இறங்கி பைசா கொடுத்து விரைந்தார்கள். குதிரை வண்டிக்காரன் அமைதியாக நின்றான், சற்றே நகர்ந்து குதிரையிடம் சென்றான்.

"என் பையன் செத்துட்டான் , அவனோட உடல் வீட்ல இருக்கு .. சாயிங்காலம்  போய் அடக்கம் பண்ணிடுவேன், எனக்கு பைசா வேணாம் ஆனா இந்த சோகத்த பகிர யாரும் கேக்க மாட்டேன்கிறாங்க, நீயாவது கேப்பியா" என்றான்,

குதிரை கனைத்தது ..................    


~ சமர்ப்பணம்  ஆண்டன் செகாவ்

No comments:

Post a Comment