Translate

Saturday, July 12, 2014

முயற்சி


ஒரு ஐ. டி நிறுவனம் அதில் இரண்டு நண்பர்கள் இருவருக்குமே அங்கு வேலை செய்ய விருப்பமில்லை, வேண்டா வெறுப்பாக வேலை செய்துவந்தார்கள்.
'அங்க வேல இருக்கானு கேக்காதீங்க, அங்க நிச்சயமா வேல இல்ல - யாரோ ஒருத்தரோட மைண்ட் வாய்ஸ்'

அவர்கள் ராஜனும் , அருளும் !!

அருள், ஆர். ஜே (Radio Jockey) ஆகா வேண்டும் என்ற ஆசையும் குறிக்கோளும் மற்றும் திறமையோடு இருப்பவன். ராஜனுக்கு சந்தோசம் , மகிழ்ச்சி மட்டுமே குறிக்கோள்.

"டேய் ராஜன், நாளைக்கு ஆர்.ஜே செலக்ஷன் டா மயிலாப்பூர் கிட்ட , நான் போறேன் " என்றான் அருள்.

"சூப்பர் டா , அடுத்த லவ் குரு நீ தான்" என ராஜன் சொன்னதும்.

" அடிங்க , டாய் மொக்க டுப்பாக்கி ... நான், யாரு லவ்வர் இப்போ யாரோட இருக்கானா பேசபோறேன்.. நான் சமூகத்துல இருக்கிற அவலத்த சீரியஸ் ஆவும் ஜோக்கவும் சொல்ல போறேன் டா" .

" டாய் வாழ எல மூஞ்சி.. , எப்படியோ நல்ல பண்ணு " என்று வாழ்த்தினான் ராஜன்.

"அருள் , பள்ளியில் நன்றாக மிமிகிரி செய்வான், நல்ல பேசுவான். இந்த திறமைக்கு ஏதோ ஒரு ரேடியோவில பேசுவான் " என்று மனதில் நினைத்து வீடு சென்றான் ராஜன்.
அன்றிரவு அருள் தூங்கவில்லை நல்ல ஸ்கிரிப்ட் பண்ணனும் என்று நினைத்து ரஜினி , கார்த்திக் , பாரதி ராஜா வாய்சையும் வைத்து ஒரு ஸ்கிரிப்ட் ரெடி செய்தான் அதுமட்டும் அல்ல பொறியியலை பற்றி ஒரு ச்பீச்சையும் தயார் பண்ணினான். அவன் கண்ணில் கனவு , எதிர் பார்ப்பு , திறமைக்கு ஏற்ற வாய்ப்பு கிடைக்கும் நம்பிக்கையில் சிறிது நேரம் உறங்கி அடுத்தநாளில் ஆர் . ஜெ வாக மாறினான் (கங்கா படி படியா சந்திரமுகியா மாறின மாதிரி).

வண்டி சத்தம் உர்ர்ர்ர்ர் ன்னு கேக்க, ரேடியோ சென்டறுக்கு சென்றான் அருள்.
" என் பேரு அருள், நேத்து கூட கால் பண்ணேனே"
Yes Arul, please be seated, 500 /- RS க்கு DD எடுத்துட்டு வந்தீங்களா" என்றது ஒரு பெண் குரல் .
" இல்லைங்க மேடம் ".

"Arul நீங்க எடுத்துட்டு வாங்க that's registration purpose, நாங்க ஆர் . ஜெ கோர்ஸ் offer பண்றோம் , அதுல ஜாயின் பண்ணுங்க , கோர்ஸ் பீஸ் ஜெஸ்ட் 48,900 /- RS தான் "

அப்பு கமல் லவ் பைலியர் பி.ஜி. எம் கேட்டுக் கொண்டே இருக்க...

" தொ வறேன் மேடம்" என்று கிளம்பினான் அருள்.

ராஜன் கால் செய்தான் , அருள் எடுக்கவில்லை .
இதவேற அவன் கிட்ட சொல்லி மனசு கஷ்டபடுத்தனுமா என நினைத்து விரக்தியோடு வீடு திரும்பினான்.

வந்ததும் அசரீரீப் போல ஒரு திருக்குறள் அவன் கண்ணில் பட்டது,

"உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து"

' இந்த குறலுக்கு அர்த்தம் நீங்களே தேடி புரிஞ்சிகோங்க'

அடுத்த வாய்ப்புக்கு பல ஸ்கிரிப்ட்டுகளை எழுத தொடங்கினான்....




"முயற்சியே வெற்றியின் முதல் படி, பார்வையாளருக்கும் பங்கேற்ப்பாலருக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது...."

No comments:

Post a Comment