தமிழ் சினிமாவில் ஒரு வருடத்தில் சராசரியாக 300 க்கும் மேற்பட்ட படங்கள் தயாராகிறது அதில் 150 முதல் 170 படங்களே திரை அரங்குகளில் கதவுகளை தட்டுகிறது அதிலும் 20 படங்கள் மட்டுமே ஜெயிக்கிறது அப்படியே ஜெயித்த படங்களெல்லாம் மனதில் நிற்கிறதா என்பது சந்தேகமே! அப்படி பட்ட படம் "காக்கா முட்டை". 2 மணி நேரம் நாம் அடி தட்டு மக்களின் சூழலை வாழ்வியலை திரை முன்னே காட்டும் படம். எவ்வாறு குழந்தைகள் திணிக்கப்படும் விளம்பரங்களால் பாதிக்கப்படுகிறார்கள் அதிலும் குறைந்த வருமானம் உள்ள குடும்பத்தில் அது எத்தகைய தாக்கத்தை உருவாக்குகிறது, ஒரு தந்தை செரியில்லையெனில் அந்த குடும்பத்திலுள்ள குழந்தைகளின் பரிதவிப்பு, ஏக்கம் எத்தகைய வினையை உருவாக்கும் ;குப்பம் மக்களின் மேல் பெரும்பாலானோர் பார்க்கும் பார்வை, அவர்களிடம் அதீத மனிதமும் அறமும் இருக்கிறது என பல இயல்புகளை இந்த படம் நம்மிடையே உறக்கச் சொல்லிக்கொண்டே இருக்கும்.
Irony
# காசு கரி ஆகுதுன்னு சொல்லுவாங்க ஆனா இந்த படத்துல கரி காசாகும்.
# அரிசி ஸ்டாக் இல்ல ஆனா இரண்டு டிவி கொடுப்பாங்க.
அறம்
# ஒன்னு உனக்கு இன்னொன்னு எனக்கு இன்னொண்ணு காக்காவுக்கு ..
# அக்கா இந்த watch ஆஹ் எடுத்துக்கவா ?? -எதுவாக இருந்தாலும் கேட்டு எடுப்பது
# காசுக்காக ட்ரெயின் foot board ல் அமரும் ஆட்களின் செல் போன் அடித்து திருடுவதர்காக பெரிய காக்கா முட்டை கட்டையுடன் காத்துக் கொண்டிருக்க சட்டென மனம் மாறி கட்டையை கீழே போடுவது.
# பானி பூரியையும் வாங்கி கொடுத்து மேலும் அவர்களிடம் இருந்த பணத்தையும் கொடுத்து அந்த பணக்கார சிறுவர்களிடம் இருந்து புது ஆடைகளை வாங்கி வருவார்கள்.
# லோகேஷ் மாடி வீட்டு பையன் எப்போதுமே ஒரு வேலியில் உள்ளே இருப்பான், இந்த இரண்டு சிறுவர்களை காட்டிலும் ஒவ்வொரு காட்சியிலும் உயரத்திலே இருப்பான்.
#விளம்பரத்தால் திணிக்கப்படும் கூற்றுகளால் குழந்தைகள் மற்றும் மக்கள் எவ்வாறு ஆட்கொள்கிறாரகள். ஒரு காட்சியில் FM இல் டீ தூளில் மணம் திடம் குணம் என்ற விளம்பரத்தை விமர்சிப்பதை ambience ஆகா சொல்லி இருப்பார்கள்.(53 mins )
# ஒரு பாதியில் vote எழுதி கொண்டிருப்பான் மீதி பாதியில் காக்கா முட்டைகள் சுவரை சுரண்டுவார்கள் சுண்ணாம்பு முகத்தில் விழும் - என்ன தான் நாங்க vote போட்டாலும் நீங்க சுரண்டறது சுரண்டறது தான்...
# கரி அள்ள போகும் போது எப்பவுமே பெரிய காக்க முட்டையை கரி பையை வைத்திருப்பான் அதுமட்டுமில்லாமல் அவன் பின் தான் செல்வான் சின்ன காக்கா முட்டை - வீட்டுக்கு மூத்தவன் குடும்ப பொறுப்பை சும்மப்பவன்.
#சிட்டி சென்டர் மைலாப்பூர் எனும் அட்ரெஸ்ஸை முதலில் பெரிய காக்கா முட்டை சொல்வான் சிறியவனுக்கு பிறகு பஸ்ஸில் (45 B) பெரிய காக்கா முட்டை மறக்கையில் சிறியவன் பெரிய காக்கா முட்டைக்கு சொல்வான் - இதில் இரண்டு பேரின் பரஸ்பரம் விட்டுக் கொடுத்தாலும் தெரியும்.
# படம் முழுவதும் யாருக்கும் தங்களது இயற் பெயரே கிடையாது, மாடி வீட்டுப்பையன் லோகேஷ் தவிர அது கூட ஒரு காட்சியில் சின்ன காக்கா முட்டை தன் அம்மாவிடம் சொல்வான் "மா .. லோகேஷ் வீட்டு நாய் மூஞ்சி சப்பையா இருக்குமா .. 25000 ரூபாயாம்". ஏன் பெயரில்லை ?? நம்மில் பல காக்கா முட்டைகளும் பழ ரசங்களும் நைனாக்களும் இருப்பதால் தான்.
# கடேசிக் கட்டத்தில் பீசா கடையின் ஊழியர் அடித்த பிறகு சிறுவர்கள் சின்ன காக்கா முட்டையும் பெரிய காக்கா முட்டையும் கரி அல்ல போகும் போது கிண்டல் செய்வார்கள் "திரும்பி பீசா துன்ன போறீங்களா?" அந்த காட்சியுடன் கேமரா அங்கே நின்று விடும் அந்த இரண்டு சிறுவர்களும் frame ஐ விட்டு வெளியே செல்வார்கள் - ஷாட் மூலம் கதை சொல்லும் பாணி, இத்துடன் சிறுவர்கள் காணாமல் போக போகிறார்கள் என்பது. பின்னர் அவர்கள் கிடைத்து அம்மாவிடம் சேரும் போது கேமராவை நோக்கியே ஓடி வருவார்கள். அத்துடன் கேமரா எங்கும் அலையாது எல்லாம் சீராயிற்று எனும் சொல்லும் ஷாட் பாணி.
# நம்மக்கு தெரியாமலே நம்மைப் பற்றி விவாதித்து பிழைப்பு நடத்தும் ஊடகத்தை சாடி இருப்பார்கள், காக்கா முட்டைகள் நடந்து வரும் போது ,புதிய தலைமுறை செய்தியாளர் பேசிக் கொண்டிருப்பார், அருகில் உள்ளவன் அந்த சிறுவர்களை ஆதிக்க உடல் மொழியில் அவர்களை விரட்டுவார்.
# இறுதி காட்சியில் சின்ன காக்க முட்டையும் கரி அள்ள பை எடுத்து தன் அண்ணனுடன் செல்வான் அதற்கு முன்னர் அவன் இரவில் தூங்கியவாறே சிறுநீர் கழிப்பதை நிறுத்திவிடுவான் அதிலிருந்து பெரியவன் ஆகிவிட்டான் என்பதை குறிக்கும்,அதே போல் அவன் "நிறைய சம்பாதிக்கணும் டா, அப்பா வ வெளிய கொண்டு வரணும், சம்பாரிச்ச பணத்துல பழ ரசத்துக்கு குடுக்கலாம்" இந்த வசனத்தில் அவர்களின் உன்னதமான மனதை இருவரியில் அடக்கி இருப்பார்கள் .
நுட்பமாக கவனிக்க :-
# பாட்டி இறந்த பின் ஒரு மஹாலக்ஷ்மி விளக்கு எரிந்து கொண்டிருக்கும் , அதன் திரி ஒலி துல்லியமாக கேட்கும் .
# பாட்டியின் இளமை கால படமொன்று அந்த வீட்டின் சுவரில் தொங்கிக்கொண்டிருக்கும் அதிலிருந்த காக்கா முட்டையும் அவர்களின் அம்மாவும் பாட்டி வீட்டில் தங்குகிறார்கள் எனும் பதிவு அங்கே ஏற்படுகிறது
# நாம் திரைப்படங்களை எவ்வளவு கவனமாக பொறுப்புணர்ச்சியுடன் எடுக்க வேண்டும் என்பதற்காக ஒரு காட்சி சொல்லாமல் சொல்லும் , சிம்புபின் சிலம்பாட்டம் படத்தை பார்த்து அந்த சிறுவர்கள் அப்படியே நடிப்பார்கள்.
No comments:
Post a Comment