Translate

Thursday, September 17, 2015

சொல்லத் தோணுது...

குழந்தை அலான் காப்பாற்றினான் சிரியன் அகதிகளை, ஐ.நா செய்யாதது அவன் மரணம் செய்தது , ஈர மண் சொல்லும் அவன் பால் வாசனையை;இன வெறியின் பொறி தீ எழுப்ப குளிர் காய்கிறது ஏகாதிபத்தியம், அதிகாரத்தை சொல்வார்கள் லிட்டில் பாய் , பாட் பாய், 20 ஆண்டுகள் வியட்நாமின் கதறல் யாருக்கு கேட்டது ??...சிரியன் அகதிகள் மூச்சுவிடுவார்கள் அலானின் மூச்சால் ..
அகதிகளின் இன வரலாற்றில் ,19 ஆம் நூன்றாண்டில் ருஷ்யாவிலிருந்து டுகோபோர் என்ற இனத்திற்காக போராடி அவர்களை பாதுகாப்பாக கனடா அனுப்பியவர்; இதற்காக இவர் எழுதிய நாவல் "RESCURRECATION" இதன் மூலம் ஈட்டிய 13000 ரூபேளை கொடுத்து காப்பாற்றியவர். மதவாதிகளால் இன்னல்களுக்கும் துன்பங்களுக்கும் , உயிர் வதைக்கும் ஆட்பட்டவர்கள் டுகொபோர்ஸ்.
இந்த இனம் இன்று வாழ்கிறது என்றால் அதற்கு காரணம் " லியோ டால்ஸ்டாய்". 600 ஏக்கர் விவசாயத்துக்கு தனம் தந்த பிரபு.
தமிழ் சமூகத்தில் அலான் போல எவ்வளவு உயிர் மாண்டிருக்கும் கள்ளப் படகில் ரமேஸ்வரத்திலிருந்து ஆஸ்ட்ரேலிய செல்கையில் ,1990 களில் இலங்கையிலிருந்து அகதியாய் வந்தவர்களுக்கு இன்றும் ஒரு அடையாள அட்டை இல்லை; பெரும்பாலான நாடுகள் 5 ஆண்டுகளுக்கு மேல் அந்த நாட்டில் வாழ்ந்தால் குடியிருப்பு (domicile) ஆனால் இங்கு ... யாருக்கு தெரியும் மண்டபம் காம்பில் 70,000 இலங்கை தமிழர்கள், இன்னும் கும்முடிபூண்டி , திருச்சி என 50,000 துக்கும் மேற்பட்டோர், பெரும்பாலும் அடையாளம் இல்லாமல்.
டால்ஸ்டாய் ,அலான் போல எங்களுக்கு எண்ணிலடங்கமால் பெயர்களிருந்தாலும் ஊடகம் விடுவதில்லையே ...
செங்கொடி, முத்துக்குமார் யாரென்றே தெரியாத மக்களுக்கு என்ன சொல்வது ..

அன்பின் கதவு மனிதம் தானே !!

2 comments: