Translate

Thursday, September 17, 2015

Monologue for Feature film audition

Scene :1 Scene: Husband a typical psycho gave poison to his divorced wife where she haven't aware and he speaks his world of law 

Version 1:

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.  (Shouts)

புரியல ல (Sigh - giggles) .. என் அன்பே புரியல..(sigh - arrogant giggle )


இந்தா  ஜூஸ் .. ஆச்சர்யமா பாக்குற !! (innocently speaks) , என் உடம்புக்கு எப்போ பசி எடுக்கும்னு தெரியும் டி..(speaks with authority)

கண்ணுல இருக்கிற கரு மணி நீ, நான் அந்த வெள்ளை; அதுல ஒரு கீறல் பட்டாலும் பார்வை தெரியும் ஆனா கற்பு ல.. சீ... கருப்பு ல பட்டுச்சி... குருடன்(laughs) .. குருடன்(laughs) ... நான் குருடன் (shouts)

ஐயோ .. நீ .. குடி பட்டு .. நீ .. குடி.. (slowly he says)

என் அன்பு கற்பு மாதிரி டி, அத ஊர் முழுக்க கூவி கூவி வித்துடீயே...

வெயில் போல காயுமே .... (Biting his teeth and speaks with loud shout)

எது சரின்னு தெரிஞ்சும் .. தப்பா ஆக்கிட்டியே ... முதுகிலேம்பு இல்லாத புழு வெயில்ல சுட்டு சூடு ஏற மாதிரி , என் அமுதான அன்பு உன்ன கொஞ்சம் கொஞ்சமா நஞ்சா ஏறப்போது..
(killer laugh) ஏறிடுச்சி ..(teeth biting speech)

{Wife started to sink}

கண்ணுக்கு மை வைக்க தெரியுது , மனசுல பொறுமைய வைக்க தெரில (hitting the mosquito which comes near her).. நான் பாரு உன்கிட்ட இவளோ பொறுமைய இருக்கேன்.. inch inch ah செய்றேன் யாருக்காக ?? உனக்காக .. ...
இன்னைக்கு  Court ல special marriage act 1954 , under the section 13-B, 13-D nnu ... பஸ் நம்பர் மாதிரி  சொல்லும்போது  அப்படியே james horner symphony வாசிச்சா போல இருந்துது  .. அடடே (like tasting a sweet )அப்பப்பா ...

{Wife sinking}

என்னென்னு தெரியல நிறைய பேசுனும்ன்னு தோணுது .. ஏதோ அனைறது ,பிரக்சம்ன்னு சொல்லுவாங்களே .. நீ கூட என் .. sorry நம்ப வீட்டுக்கு வந்து ஏத்துனியா கொளுத்துனியா ன்னு தெரியல..

இன்னும் கொஞ்சம் நாளுல நானும் வருவேன் அங்கேயாவது ..........

அன்ப வலி நினைக்கிற ஒவ்வொவொரு ஆறறிவுக்கும் உன் சாவு சொல்லித்தராத பாடம் ..

ஐயோ ... நீ .. குடி பட்டு .. நீ குடி ...
ஐயோ ... நீ .. மடி  பட்டு .. மாமா மடி லயே மடி .. நீ மடி ...

{Wife sinked}

************************************************************************
 
Version2:

Why this to me ???? (anger)

தலைல Road Roller ஓடிகிட்டே இருக்கு.. , நல்ல தார காச்சி ஊத்திட்டே நீ (with smile)

(He sipping a juice but not getting into the throat)

தாகமா இருக்கா ?? எனக்கும் தான் ..

"எனக்கு ஒன்னும் நாளும் என் ஒடம்பு தாங்கும் ஆனா உன் உடம்பு தாங்கும்மா ...."(mimicry in kamal voice)
{Laughs}

நீயே குடி ...

'மாங்கல்யம் தந்து நானே.. நவஜீவன கேது நாம்..
"சர்வ மங்கள மாங்கல்யே" (Keech voice as Iyer) ன்னு கேட்டது எக்கோ வா கேடுக்குட்டே இருக்கு(sudden shift to angry voice)..

இன்னைக்கு கோர்ட்ல (Under the hindu marriage act , divorce ordered) சொன்னப்பவே ..    நல்ல (Pause) பட்டு வேட்டி ..பட்டு சொக்கா போட்டு ,சும்மா ஜம்முன்னு பன்னீர் தெளுச்சி , பந்தாவா ரோஜாப் பூ மாலை ஆள் உயருதுக்கு மாட்டி பாடையில ஏத்தி சங்கு ஊதனா மாதிரி ஒரு feel (giggles) .

(she stares at him)

அட ஜூஸ் கேக்க மாட்டேன்…. நீயே குடி ஆனா பேசறத மட்டும் கேளு…

எனக்கு பசிக்குதே ன்னு நெனச்ச விட உனக்கு பசிக்குமே நெனச்சது தான் அதிகம்,
என் ஒவ்வொரு மூச்சுலையும் உன் பேச்சு தான், பசிய அடக்கலாம், கோவத்த அடக்கலாம் ஏன் ஒண்ணுக்க கூட அடக்கலாம்.. அன்ப அடக்க முடியாது ,
அன்பு பல்லூன் இருக்கிற காத்து மாதிரி எப்படியாவது கசிஞ்சிரும் .. கசிஞ்சி .. உருகி .பித்து பிடுச்சி காதலிச்சதுக்கு ,
நல்லா பண்ணமா.... நீ  ரொம்ப நல்லா பண்ணே (Kala master) 

(She sinking)
In men’s world women are the rulers (Loudly)

செரியா Rule பண்ணல Unruled பக்கம் மாதிரி Blank ஆயிடும் (Laughs a loud),

உனக்கு கொடுத்த ஜூஸ் என் அன்பும் பாசமும் பரிவும் அது கூடயே விஷமும் (Teeth biting)
நிம்மதியா செத்து போ .. பூவும் பொட்டோட..(Teeth Bite)

Iam the god of my own hell ……(Shouts)      

****************************************************************
 
 Version 3:

பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்.
பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்.(twice) (different modulation)

சரியா சொன்னீங்க பாட்டி (clapping.. clapping) Wah !!! Wah !! Wah !! ...

இவளுங்கோ அந்த Innocent ah இருந்த பரவா ல, Innocent ah நடிக்கிரளுங்கலே பாட்டி (cries)...

உன் தாகம் எனக்கு தெரியும் ..(Sarcastically)

இந்த ஜூஸ் ..
{She gets it}

 ஒரு சின்ன கதை சொல்றேன் கேட்டுகிட்டே குடிப்பியான்.(Kind of delivering to a child)

ஒரு பெரிய தோட்டம், அதுல ஆண் தேனீ பெண் தேனீ  ரெண்டுபேரும் ஒன்னு தான்னு அந்த ஆண் தேனீ நெனச்சிதான், தினமும் ஆண் தேனீ எல்லா பூ கிட்ட இருந்தும் நல்ல தேன எடுத்துட்டு, அது குடிக்காம, தேன் கூடு கட்டாம, பெண் தேனீக்கு கொடுக்குமா அப்படி எல்லாம் நல்லதையும் அதுக்கு செய்யுமாம்.திடீர்ன்னு ஒரு நாள் அந்த பெண் தேனீ 
"இவளோ நாள் என்ன நல்லா பதுக்கிற மாதிரி நடிக்கிற, நீ கொண்டு வந்த தேன் லாம் விஷப் பூவோடது .. என்ன முதல குடிக்க வெச்சிட்டு அப்பறம் உயிரோட இருந்தா நீ குடிக்கலாம் தான் உன் எண்ணம்" அப்படின்னு சம்மந்தமே இல்லாம திட்டிட்டு பிரிஞ்சிடுச்சி (Sad tone)... அந்த ஆண் தேனீ அழுது அழுது வீனா போச்சு ...

இந்த கதைல யார் மேல தப்பு ??
விற்று... விற்று ... சொல்லவேணாம் .. விற்று ...

ஓம குண்டதுல இருந்த புகை உன் கண்ண கலங்க வைக்கும் ன்னு .. எந்த சடங்கும் வைக்காம தாலி கட்னவன் நான் .. கோர்ட் நீ பேசுன பேச்சு spray பண்ணாத Ansthesia ,

Sorry  .. Disturb பண்றேன் .. நீ குடி ...

அது பண்ணேன் இது பண்ணேன் ன்னு சொல்லி காமிக்க விரும்பல….

நீ கடைசி வரைக்கும் என் அன்ப வலியா தான் பாத்த ,

விடு….

{she started to sink}

அந்த பைதிக்கார ஆண் தேனீ இல்ல நான் .. கொடூர தேனீ (Teeth bite) ஆனா உன் கிட்ட சொபிட்(soft)
இந்த கொடூர தேனீ உண்மையாவே விஷப் பூ இருந்து விஷம் எடுத்து அந்த ஜூஸ் கலந்திடுச்சீ ... (Teeth bite)

செத்துப் போ .. (giggles)


No comments:

Post a Comment