Translate

Sunday, December 21, 2014

நுங்கம்பாக்கம் , Chennai - 600034 / part 5

வாழ்கை வாழ்வதற்கே !

      நாளொருவண்ணம் ஒவ்வொரு கவலையின் புலம்பல் பலரிடம் காணலாம், அவர்களை தவறு சொல்லி பயனில்லை. ஆசைகளும் , பொறுப்புகளும் கூடினால் மனதின் சத்தம் புலம்பலாக மாறும். இப்படி பட்ட ஓசை நிறைந்த அண்டத்தில் வாழ்கையை வாழும் சில இறகுகள் நம் நடை பாதையில் பார்த்திருப்போம். ஒரு சில இறகுகள் என் கல்தடங்களில் வழிகளாக !!

         தீபக், லயோலா  கல்லூரி கணிதப் பிரிவின் நண்பன். இயல்பாக எல்லோரிடம்மும் பழகும் குணம் உண்டு.இவன்  படிப்பில் சற்று மந்தம், வகுப்பு தேர்வோ அல்லது ஆண்டு தேர்விலோ தான் படித்தது வரவில்லை என்றால் அவன் மனதில் வரும் முதல் கேள்வி "இது நம்ப சிலபஸா?" எல்லா நண்பர்களும் "செம்மைய பண்ணேன் டா","இல்ல மச்சி நெக்ஸ்ட் செம் தான் ", "அப்படா மச்சி சொல்லி கொடுதாண்டா", "இந்த புண்ணியவான் ஆன்சர் சொன்னான்" என எல்லோரும் வெவ்வேறு தொனியில் சொல்வார்கள் இது ஒவ்வொரு தேர்விற்கும் வருத்தம் சந்தோசம் என தொனி மாறிக்கொண்டே இருக்கும். தீபக் என்றும் ஒரே பதில் தான் "பாத்துக்கலாம் மச்சான்". அவனுக்கு நன்றாக முயன்று படிப்பான் ஆனால் அது மதிப்பெண்ணுக்கு ஏன் தெரியவில்லை என்பது தெரியாது. தேர்வில் எளிதாக யாரையாவது பார்த்து எழுத வாய்ப்பு கிடைத்தாலும் அதை கஷ்டப்பட்டு மகேஷுக்கு கொண்டு சேர்ப்பதில் அதிக கவனம் அவனுக்கு. மகேஷ் அவனுக்கு நெருங்கிய நண்பன். தீபக் இதுவரை புலம்பி பார்த்ததில்லை, கடினமான நேரத்திலும் சிரிப்பு ஒன்று தான் பதிலாக இருக்கும்.
          தான் கிடைத்ததை வைத்து மகிழ்ச்சியோடு வாழும் ஆத்மா, இது நிச்சியம் வாழ்கையை இலகுவாக நினைத்தால் மட்டுமே அது வரும். வருத்தம் வந்தாலும் சீக்கிரம் தன் சிரிப்பின் வழியில் விடை கொடுப்பான். தீபக் வாழ்கையை வாழும் நண்பன், எதுக்கும் துவளாமல் தன்பிக்கையை தோளில் சுமந்து இன்றும் சிரித்துகொண்டே ஓடிகிறான். படித்தால் தான் நம்பிக்கை என்ற மாயை அதிகம் புழங்கும் வேளையில் வாழ்கையை வாழ்ந்தால் போதும் தன்னம்பிக்கை நம்முடன் வாழ ஆசைப்படும் என்பதற்கு உதாரணம் தீபக்.

                தீபக் போல இன்னொரு நண்பன் நரேஷ், நாங்கள் ஒரே வகுப்பு. இதற்கும் கலங்காத ஜீவன், நரேஷின் வாழ்கையில் கவலையை காணவில்லை போஸ்டர் ஒட்டியே இருக்கும்.அவன் இதுவரை முகம் வாடி பார்த்ததில்லை, நிச்சயம் ஒவ்வொருவருக்கும் பல எண்ணங்கள் உதிக்கும் அது கைகூடாவிட்டால் கவலையாக மாறலாம், எண்ணங்கள் முளைத்து அதன் தன்மை வெற்றியோ தோல்வியோ யோசிக்காமல் நகர்ந்தால் வாழ்கையை வாழ இயலும், இதை நரேஷிடம் காணலாம்.
          29 c பஸ்சில் தான் நரேஷ், பிரிட்டோ , சித்தார்த் , அலெக்ஸ் இவர்களுடன் நானும் கல்லூரிக்கு பயணிப்போம். இதில் ஐவருமே கணித வகுப்பு என்பது குறுபிடதக்கது. பஸ் பயணத்தில் மற்ற பிரிவைச் சார்ந்த நண்பர்களும் வருவார்கள், மூன்று ஆண்டுகளில் நரேஷ் ஒரு நாள் கூட முகம் சுளித்து வந்ததோ தன் துன்பங்களை கூறுவது என எதுவும் சொன்னதில்லை. எல்லோராலும் அவனுக்கு நன் மதிப்பு உண்டு அதற்கு ஒரே காரணி கவலையை காணவில்லை போஸ்டர் ஒட்டியது தான், எப்பொழுதும் அவனிடம் விலை மதிப்பில்லாத ஆபரணம் இருக்கும் 'புன்னகை'. வாழ்கையை வாழும் நண்பன்.
         நரேஷை சொல்லும்போது பால் எழிலழகன் சொல்லாமல் இருக்க முடியாது, கல்லூரிக்கு மீஞ்சூரில் இருந்து பயணித்து வருவான் சற்று தூரம் தான் ஆனால் முகம் சுளித்ததில்லை. வாழ்கை வாழ்வதற்கே என்பதற்கு மிக சிறந்த சான்று பால். அவன் உள்ளத்தில் அவ்வளவு குமுறல்கள் இருந்தாலும் எதிரே இருப்பவர்களுக்கு அது வெளிப்படாது. எங்கள் வகுப்பில் எல்லோரும் மேற்படிபிற்கு கணினி மற்றும் வியாபார ரீதியில் படிக்க சென்றார்கள் இன்னும் சிலர் வேலைக்கு பயணித்தார்கள், பால் ஒரு நடத்தற குடும்பத்தின் பிரதிநிதி, பணம் நிறைக்க செல்லும் மக்களிடம் சற்றே விலகி மனம்  நிறைக்க மனிதர்களைப்பற்றி சென்னை பல்கலைகழகத்தில் படித்தான்(Msc.Anthrapology). இந்த துணிவும் தனம்பிக்கையும் சிலருக்கே வரும், இது அற்புதமான படிப்பு. எங்கள் வகுப்பில் மொத்தம் 80 மாணவர்கள் அவர்களில் ஒரே ஒருவன் வேறு தொனியில் சென்றான் அது பால், தன் பாதையில் எவ்வளவு இன்னல்கள் இருந்தாலும் சிரித்து கடப்பவர்கள் பட்டியலில் பாலும் ஒருவன்.
   பல சமயங்களில் சூழல் கடினமாக இருந்தாலும் தங்களிடம் தனபிக்கையும் புன்னகையும் இருந்தால் வாழ்கை வாழ்வதற்கே என்பதற்கு அற்புதமான சான்று பால் எழில் !!!
         நம் வாழ்வில் இது போன்ற நண்பர்கள் ஏராளம் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்வது நம் மனதின் தாராளம். நமக்கு அவன் என்னடா என்ற நினைப்பிலே இது போல பல நண்பனை அலட்சிய படுத்துவோம். சிலவற்றை நம் ஈகோ விழுங்கி விடும், இவர்களை போன்ற நண்பர்கள் உங்கள் வட்டாரத்தில் இருப்பார்கள் மேலே உள்ள பதிவை வாசித்திருந்தால் கட்டாயம் உங்கள் நண்பனின் முகம் தெரிந்திருக்கும்.

            

No comments:

Post a Comment