என் அலுவலகத்தில் சுமார் 4000 க்கும் மேல் வேலைசெய்கிறார்கள் ,இரண்டு வாரங்களுக்கு முன்பு அலுவலகத்தால் ஒரு கலைநிகழ்ச்சி ட்ரேட் சென்டர் நந்தனத்தில் நடைபெற்றது, அது பிரத்யேகமாக எங்கள் அலுவலகத்தில் பணிபுரியோருக்கு மட்டும் தான். மொத்தம் நான்கு அணிகளாக பிரிந்து போட்டிகள் நடைபெற்றன அதில் நடனம், குறும்படங்கள், நவீன நாகரீக நடை என்று பட்டையை கிளப்பினார்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள். இதை விட தனியார் தொலைகாட்சியின் தொகுப்பாளினி முழு நிகழ்ச்சியும் நன்றாக தொகுத்து வழங்கினார் மேலும் பிரபல பாடகி ஒருவர் அருமையாக பாடி பார்வையாளர்களை உற்சாகபபடுத்தினார். குளிரூட்டியால் நிரம்பிய கூடம் அது, எல்லோரும் குளிர்ந்து நடனத்தையும் மற்ற நிகழ்ச்சிகளை கண்டு மகிழ்ந்தனர்.
பாட்டு, நடனம் என மேடையில் ஓட கிழே பார்வையாளர்கள் கூட்டம் கூட்டாமாக நடனமாடி சந்தோஷப்பட்டனர், அதை பார்க்கவும் பரவசமாக இருந்தது. குறிப்பாக நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன் நுழைவாயிலில் ஒத்தை அடி மேளம் ஏற்ப்பாடு செய்திருந்தனர் உங்களுக்கு புரியும் படி சொன்னால் ' சாவு மோளம் ' , இதற்கு ஆணும் பெண்ணும் ஆடின ஆட்டம் வேறு தினுசாக இருந்தது.
"ஆண்டவரே என்னை மன்னியுங்கள் எனது பொய்களுக்காக!!"
ஐம்பது சிறார்களுக்கு உணவு வழங்கினார்கள் அது மிகவும் பாராட்ட வேண்டும் , இதைத் தவிர வேறு எதுவும் சொல்லிக்கொள்ள முடியவில்லை. தொகுப்பாளினி செய்த அட்டூழியம் மிகவும் அதிகம் அதில் ஒன்று "எதின்னி பேருக்கு கல்யாணம் ஆகல ??? " தேவையில்லாத கேள்விகளும் பதில்களும் முகத்தை சுளிக்க வைத்தது.
எங்கள் அலுவலக பணிகள் வெவ்வேறு மாடிகளில் ஒரே வளாகத்தில் இயங்கும் அதில் காப்பாளர்களாக பணி புரிவோர் 100 க்கும் மேல் இருப்பார்கள் .எல்லோரும் ஒரிசா, வங்காளம் மற்றும் ஆந்திராவில் இருந்து வந்தவர்கள் , அவர்களும் அந்த அரங்கில் இருந்தனர். இதில் வெளியே காவல் காக்க வேண்டும் உள்ளே வரக்கூடாது என்ற கட்டளையாக இருந்தது , சில விநாடி நானும் அந்த செக்யூரிட்டி ஆகா இருந்திருக்கலாமோ என்று நினைப்பு.
அப்படியும் ஒரு பெண் செக்யூரிட்டி, ஆந்திர மாநிலத்தைச் சார்ந்தவள், நடன நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கண்களில் ஏக்கம், தானும் இவர்களைப் போல் பங்குபெற வேண்டும் என்று, வறுமையில் அவள் கண் மை கலைந்ததை உணர்ந்தேன் சிறிது நேரத்திலே தலைமை கண்காணிப்பாளர் ஒருவர் அந்த பெண்ணைத் திட்டி அரங்கிற்கு வெளியே தள்ளினார்.
" சார் ! சார் !! இந்த டான்ஸ் மட்டும் பாத்துட்டு போய்டறேன்" என்றது இன்று வரை என்னக்கு ஒலித்துக்கொண்டே இருக்கிறது
இரட்டை அர்த்தம் கொண்ட வசனங்கள் தேவயில்லாமல் நேரத்தை விழுங்கியது. இந்த செக்யூரிட்டி களுக்கு ஒரு 5 நிமிடம் தங்கள் திறமைக்கு கொடுத்திருந்தால் ஒருங்கினைப்பாளர்களின் பாவம் சிறிது கழிந்திருக்கும்.
சாவிற்கு முன் தன் துயரை மறைக்க ஆடும் தோழர்களைப் பார்த்து "என்ன கீழ்த்தரம்" என்று வினவுவோர் அன்று அதே மேளத்திற்கு ஆடியது கேலி கூத்து தான் அதில் பெண்கள் அதிகம் என்பது வியப்பே !!
தோழர்களே ! உங்கள் அலுவலகத்தில் இதை போன்று நிகழ்ச்சி நடக்குமானால் நம் கண்ணிற்கு தெரியாத வண்ணங்களுக்கு உயிர் கொடுங்கள்...
ஐம்பது சிறார்களுக்கு உணவு வழங்கினார்கள் அது மிகவும் பாராட்ட வேண்டும் , இதைத் தவிர வேறு எதுவும் சொல்லிக்கொள்ள முடியவில்லை. தொகுப்பாளினி செய்த அட்டூழியம் மிகவும் அதிகம் அதில் ஒன்று "எதின்னி பேருக்கு கல்யாணம் ஆகல ??? " தேவையில்லாத கேள்விகளும் பதில்களும் முகத்தை சுளிக்க வைத்தது.
எங்கள் அலுவலக பணிகள் வெவ்வேறு மாடிகளில் ஒரே வளாகத்தில் இயங்கும் அதில் காப்பாளர்களாக பணி புரிவோர் 100 க்கும் மேல் இருப்பார்கள் .எல்லோரும் ஒரிசா, வங்காளம் மற்றும் ஆந்திராவில் இருந்து வந்தவர்கள் , அவர்களும் அந்த அரங்கில் இருந்தனர். இதில் வெளியே காவல் காக்க வேண்டும் உள்ளே வரக்கூடாது என்ற கட்டளையாக இருந்தது , சில விநாடி நானும் அந்த செக்யூரிட்டி ஆகா இருந்திருக்கலாமோ என்று நினைப்பு.
அப்படியும் ஒரு பெண் செக்யூரிட்டி, ஆந்திர மாநிலத்தைச் சார்ந்தவள், நடன நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கண்களில் ஏக்கம், தானும் இவர்களைப் போல் பங்குபெற வேண்டும் என்று, வறுமையில் அவள் கண் மை கலைந்ததை உணர்ந்தேன் சிறிது நேரத்திலே தலைமை கண்காணிப்பாளர் ஒருவர் அந்த பெண்ணைத் திட்டி அரங்கிற்கு வெளியே தள்ளினார்.
" சார் ! சார் !! இந்த டான்ஸ் மட்டும் பாத்துட்டு போய்டறேன்" என்றது இன்று வரை என்னக்கு ஒலித்துக்கொண்டே இருக்கிறது
இரட்டை அர்த்தம் கொண்ட வசனங்கள் தேவயில்லாமல் நேரத்தை விழுங்கியது. இந்த செக்யூரிட்டி களுக்கு ஒரு 5 நிமிடம் தங்கள் திறமைக்கு கொடுத்திருந்தால் ஒருங்கினைப்பாளர்களின் பாவம் சிறிது கழிந்திருக்கும்.
சாவிற்கு முன் தன் துயரை மறைக்க ஆடும் தோழர்களைப் பார்த்து "என்ன கீழ்த்தரம்" என்று வினவுவோர் அன்று அதே மேளத்திற்கு ஆடியது கேலி கூத்து தான் அதில் பெண்கள் அதிகம் என்பது வியப்பே !!
தோழர்களே ! உங்கள் அலுவலகத்தில் இதை போன்று நிகழ்ச்சி நடக்குமானால் நம் கண்ணிற்கு தெரியாத வண்ணங்களுக்கு உயிர் கொடுங்கள்...
No comments:
Post a Comment