Translate

Friday, July 31, 2015

காலம்!! காலம்!!.... கலாம்

இசுலாத்தின் ஏசுவே உங்களை
ஒவ்வொரு வினாடிக்கு ஓர் முறை
ஒவ்வொரு இளைஞனுள் உயிர்த்தெழுவாய் !!
இன்று மோகன்தாஸ் கரம்சந்த் இருந்தால்
கலாமாக இருக்க ஆசை மட்டுமே பட்டிருப்பார்,
பூமியை பார்த்தவனை
ஆகாசத்தை பார்க்கவைத்தாயே ,
எங்களிடம் கனவுப் பாலை பருக வைத்'தாயே'!!
உங்கள் எண்ணத்தின் வானில்
இந்தியாயெனும் பிறை வளரும்,
ஐய்யம் வேண்டாம் அயர்ந்து உறங்குங்கள்
உங்கள் உள்ளொளியின் பிரகாசம் உறங்காது !!
விதைத்தவர் உறங்'கலாம்'
விதை உறங்காது ........

No comments:

Post a Comment