அகவை தொன்னூற்றி நான்கு..
காலையில் நாகூர் ஹனிபா தெரு முனைகளில் "கருணாநிதி வாழ்கவே .." என ஒலித்துக்கொண்டிருப்பார். அரை நூற்றாண்டிற்கும் மேல் பொது வாழ்வில் அர்ப்பணித்தவர் கலைஞர்; சமூக வலைத்தளங்களில் அவரை எள்ளி நகையாடுவோர் , அவதூறு சொல்லுவோர், பகடி செய்வோர்களில்10 சதவீதம் கூட அவரின் அரசியல், தமிழ் ஆளுமையை அறியாதவர்களாக இருப்பார்கள்; பார்ப்பனிய ஏகாதிபதியத்தில் இருந்து மீட்டெடுத்ததில் பெரும் பங்கு கலைஞரை சாரும்; அவர் தமிழ் சமூகத்திற்கு என்ன செய்தார் என்று கேட்டால்? இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் இருப்போருக்கு
மட்டுமே (Neutral english accent) நடுநிலையான ஆங்கில உச்சரிப்பு உள்ளது எனும் செய்தி அமெரிக்கா வெளியிட்டது,இதனால் பெருமளவில் BPO வும் தகவல் தொழிநுட்பமும் வளந்ததை மறுக்க இயலாது இதற்கு இரு மொழி கொள்கையே காரணம்; இன்றளவும் தமிழ் சினிமா நம்மிடமே இருப்பதற்கு இதுவம் ஒரு காரணம். இட ஒதுக்கீட்டிற்கு வழி வகுத்தவர், இது இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது, இன்னும் அவரின் தனித்துவமான நகைச்சுவை அவரை வெறுப்பவரையும் நட்புக்கொள்ளவைக்கும். பத்திரிக்கையாளர்களையே சந்திக்காத முதல்வரை நம் தமிழகம் சந்தித்திருக்கிறது ஆனால் கலைஞர் அவ்வப்போது சந்திப்பார் மேலும் விமர்சனங்களையும் ஏற்பார் அதற்கு உகந்த பதிலையும் கொடுப்பார்;
பார்ப்பனிய சூட்சமங்களால் இன்று சிலர் அவரை தூற்றலாம், தமிழ் கோரும் நல்லுகத்திலிருந்து தூக்கி எறியமுடியாது.
வாழும் தொல்காப்பியருக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்
June 3 2017
No comments:
Post a Comment