Translate

Wednesday, March 15, 2017

குறுங்கதை :அப்போ நரி இப்போ காக்கா (March 8 Special)

குறுங்கதை : அப்போ நரி இப்போ காக்கா (March 8 Special)


சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர்..
கோடானகோடிக் கணக்கான ஆலமரங்கள் இருக்குமிடம் அது, வயோதிக அல்லது நடுவயது பெண்மணி வடை சுடுவது வழக்கம், அந்த வடையில் நல்ல நார்ச்சத்தும், சத்துமிக்க தானியங்களும் அடங்கும். ஒரு மரத்திற்கு நிறைய காகங்கள் இருப்பது வியப்பில்லை. அவ்வடையை காகங்கள் எடுத்துச் செல்லும்,
அதை பார்க்கும் அப்பெண்மணிகள் "வடை பத்திரம் கீழே விற்றாதே" என கூறுவது இயல்பே. அப்படியாக ஒரு காகம் வடை
யை வாயில் கவ்வி சென்றது,யாருமற்ற கிளையில் வாடையுடன் அமர்ந்தது. அதை நோட்டம் விட்ட நரி வடையை அபகரிக்க அந்த கிளையின் கீழே நின்றது. "இந்த கானகத்துல உன்ன காகம் னு கூப்பிடறதவிட பட்டு ன்னு கூப்பிடணும்னு தோணுது" என்றது நரி.
காகத்திற்கு ஒரு பக்கம் வெட்கம், மகிழ்ச்சி என பல உணர்ச்சியின் குளியலில் சிலிர்ப்பி கொண்டிருந்தது.
மீண்டும் நரி " உன் முகத்துல ஏதோ அழுக்கு மாறி இருக்கு" என்றது.
அதற்கு காகம் தன் காலின் உதவியுடன் சுத்தம் செய்தது.
நம்ம நரி சும்மா விடுமா!
"பட்டு .. கொஞ்சம் கிட்ட வா, நான் செரி செய்யறேன் " என்றது நரி.
அந்த அமைதியான கானகத்தில் காகம் தன்னை மறந்து நரியின் பேச்சில் மயங்கி அருகே சென்றது, நரி வடையை லாவகமாக எடுத்து அழுக்கை எடுக்கிறேன் என சொல்லி காக்காவுக்கு அழகு குத்தி ஓடிப்போனது. காகம் காயத்துடன் அழுத்துகொன்டே இருந்தது....
முப்பது ஆண்டுகளுக்கு பிறகு ..
கோடானக்கோடி கணக்கான சிறு மரங்கள்,செடிகள் இருக்கின்ற இடமாக உருமாறியது. நடுவயது பெண்மணி வடை சுடுவது வழக்கம், அது இன்ஸ்டன்ட் வடை, சத்திருக்குமா என்பது சந்தேகமே ! ஒரு மரத்திற்கோ செடிக்கோ ஒன்றோ இரண்டோ காகங்கள் இருப்பது வியப்பே இல்லை.அவ்வடையை காகங்கள் எடுத்துச் செல்லும், ஒரு போதும் அப்பெண்மணிகள் கண்டுக்கொள்வதே இல்லை இது இயல்பே.அப்படியாக ஒரு காகம் வடை வாயில் கவ்வி சென்றது,கூட்டம் அடர்ந்த கிளையில் வாடையுடன் அமர்ந்தது. அதைக்கண்ட நரி அந்த கிளையின் கீழே நின்றது. அந்த நரியிடம் இரண்டு பண் பொட்டலம் இருந்தன, எப்போதுமே வடையை பார்த்தால் நரிகளுக்கு ஈர்ப்பு தான் !
வைத்த கண் வாங்காமல் வாயில் வடையுடன் இருக்கும் காகத்தை பார்த்துக் கொண்டிருக்க, திடீரென காகம் வடையை தன் காலின் கீழே வைத்து நரியை பார்த்து
" டியர் ... " என்றது
"நான் பாஃஸ், டியர் இல்ல " என அசடாக கூறியது நரி..
"ஷாப்பா... உன்ன செல்லமா கூப்பிட்டேன், அங்க வரேன் இரு .." என காகம் கூறி நரியின் அருகே சென்றது.
நரிக்கு ஒரு பக்கம் வெட்கம், மகிழ்ச்சி என உணர்ச்சியின் குளியலில் சிலிர்ப்பி கொண்டிருந்தது. வடையை ருசித்து விடவேண்டும் எனும் எண்ணம் இருந்தது.
காகம் அருகே வந்து "இந்த கானகத்துல உன்ன நரி னு கூப்பிடறதவிட செல்லம் ன்னு கூப்பிடணும்னு தோணுது" ..
சிரிப்பும் ஆனந்தமும் கலந்து தன் காலால் கோலமிட்டு கொண்டிருந்த நரியிடம் இருந்த இரண்டு பண்ணையும் லாவகமாக எடுத்து பறந்து கிளையில் அமர்ந்தது காகம். நரிக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது "இப்படி ஏமாத்திட்டியே .. காக்கா..உன்ன கடிக்க போரேன் பாரு " என்றது.
அதற்க்கு காகம் "இது சாமர்த்தியம் ஏமாத்துறது இல்ல.. நீ வடைக்கு ஆசைப்பட்டவன்னு எனக்கு தெரியும், இந்தா பொழச்சிக்கோ ..." என ஒரு பண்ணை தூக்கி எரிந்தது. காகம் வடையுடனும் பண்ணுடன் பறக்க விருந்ததது.
"ஏய் காகமே !! " என கூவியது நரி.
பறந்து கொண்டே காற்றில் நின்ற காகம் "என்னா ??" என கேட்க ,
"ஹாப்பி ஒமென்ஸ் டே (HAPPY WOMENS DAY)" என சொன்னது நரி ..
சிரித்தே பறந்தது காகம் ..

No comments:

Post a Comment