~ஒரு நாய் கதை~
ஏதோ ஓர் ஊரில் பல நாய்களில் இதுவும் பிழைத்துக் கொண்டிருந்தது, ஊரிலுள்ள விதி நாய்கள் தேங்காயை உருட்டி கொண்டு ஒவ்வோர் வீட்டில் சேர்க்க வேண்டும், அப்படியே எல்லா நாய்களும் ஏன் உருட்டுகிறோம் எதற்கு உருட்டுகிறோம் என்பதை அறியாமல் ஓடிக்கொண்டிருந்தது. இந்த நாய்க்கு தேங்காயை உருட்டவும் உடைக்கவும் தெரியும் ஆதலால் இதை இன்னும் அதிகம் இப்பணியை புரிய வேண்டும் என்றும்,அதற்காக பெரிய ரொட்டி கிட்டும் என ஊர் வீட்டுக்கார்கள் தெரிவித்தார்கள். இருப்பினும் அந்த நாய்க்கு உருட்டுவதும் உடைப்பதும் பிடிக்கவில்லை, இதற்கு பிடித்ததெல்லாம் அருகம்புல்லுடன் இருக்கும் விநாயகர் சிலையையே பார்ப்பது அங்கு கிடைக்கும் சுண்டல் வைத்து காலம் தள்ளலாமென நினைத்ததை எதிர்த்தனர் ஊர்க்காரர்கள். மீண்டும் எதிர்க்கையில் அந்த நாய் மீண்டும் அதையே கூறுகையில் கல் அடியும் வாலில் தீ வைப்பும் நிகழ்ந்தேறியது.
வேறு வழி இல்லாமல் அதே உருட்டல் உடைத்தல், அதன் எண்ணவோட்டம் புரிந்த சில நாய்களில் ஒன்று அந்த சுண்டல் போதுமா என வினவியது, அதற்கு அந்த நாய் "அந்த அருகம்புல்லும் வசியம் பொதிந்த அவ்விநாயகருக்காக தேங்காய், பழம் உருட்டும்/எடுத்து கொடுக்கும் வேலை செய்ய வேண்டும், அதற்காக அந்த இரண்டு மூன்று சுண்டல்களே போதும், வயிறை விட மனசு நிறைவதே போதும்" என்றது.
சில நாய்கள் இதற்கு கோரஸாக மூன்று முறை குலைத்தது (அதன் மொழியில் இங்கு குலைத்தத்துக்கான அர்த்தம் - சிரிப்புடன், இந்த நாய் அடி வாங்கியே சாவப்போது).
ஒரு காலக்கட்டத்தில் இந்த நாயை மனிதர்கள்(ஆணோ/பெண்ணோ உங்கள் ஊகத்தில்) ஏமாற்றினார்கள், உறுதியாக விநாயகர் கோவில் அருகே தனி வீடு தருவோம் என வாக்களித்து ஆசையை தூண்டினார், அதுவும் நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு தன் சக்தியை மீறி உருட்டி உடைத்தது. இறுதியில் மனிதர்கள் வேலை முடிந்தவுடன் சரமாரியாக கல்லைக் கொண்டு எறிந்தார்கள்.மண்டையில் வழிந்த இரத்தம் கண்ணீருடன் கலந்து ஓடியது, கோவம் பூண்ட நம் நாய் வெறியுடன் தாக்க முற்பட்டு இருக்கலாம் ஆனால் அவர்களுக்கு வலிக்குமே என நினைத்தது பைத்தியம் பிடித்த நம் நாய்.
ஒரு நாள் அருகம்புல் வாசத்துடன் சேர்ந்திருக்க வேண்டும் என எண்ணி கனவினூடே இரத்தம் சொட்ட கால்கள் நொண்ட உருட்டுகிறது.
ஏதோ ஓர் ஊரில் பல நாய்களில் இதுவும் பிழைத்துக் கொண்டிருந்தது, ஊரிலுள்ள விதி நாய்கள் தேங்காயை உருட்டி கொண்டு ஒவ்வோர் வீட்டில் சேர்க்க வேண்டும், அப்படியே எல்லா நாய்களும் ஏன் உருட்டுகிறோம் எதற்கு உருட்டுகிறோம் என்பதை அறியாமல் ஓடிக்கொண்டிருந்தது. இந்த நாய்க்கு தேங்காயை உருட்டவும் உடைக்கவும் தெரியும் ஆதலால் இதை இன்னும் அதிகம் இப்பணியை புரிய வேண்டும் என்றும்,அதற்காக பெரிய ரொட்டி கிட்டும் என ஊர் வீட்டுக்கார்கள் தெரிவித்தார்கள். இருப்பினும் அந்த நாய்க்கு உருட்டுவதும் உடைப்பதும் பிடிக்கவில்லை, இதற்கு பிடித்ததெல்லாம் அருகம்புல்லுடன் இருக்கும் விநாயகர் சிலையையே பார்ப்பது அங்கு கிடைக்கும் சுண்டல் வைத்து காலம் தள்ளலாமென நினைத்ததை எதிர்த்தனர் ஊர்க்காரர்கள். மீண்டும் எதிர்க்கையில் அந்த நாய் மீண்டும் அதையே கூறுகையில் கல் அடியும் வாலில் தீ வைப்பும் நிகழ்ந்தேறியது.
வேறு வழி இல்லாமல் அதே உருட்டல் உடைத்தல், அதன் எண்ணவோட்டம் புரிந்த சில நாய்களில் ஒன்று அந்த சுண்டல் போதுமா என வினவியது, அதற்கு அந்த நாய் "அந்த அருகம்புல்லும் வசியம் பொதிந்த அவ்விநாயகருக்காக தேங்காய், பழம் உருட்டும்/எடுத்து கொடுக்கும் வேலை செய்ய வேண்டும், அதற்காக அந்த இரண்டு மூன்று சுண்டல்களே போதும், வயிறை விட மனசு நிறைவதே போதும்" என்றது.
சில நாய்கள் இதற்கு கோரஸாக மூன்று முறை குலைத்தது (அதன் மொழியில் இங்கு குலைத்தத்துக்கான அர்த்தம் - சிரிப்புடன், இந்த நாய் அடி வாங்கியே சாவப்போது).
ஒரு காலக்கட்டத்தில் இந்த நாயை மனிதர்கள்(ஆணோ/பெண்ணோ உங்கள் ஊகத்தில்) ஏமாற்றினார்கள், உறுதியாக விநாயகர் கோவில் அருகே தனி வீடு தருவோம் என வாக்களித்து ஆசையை தூண்டினார், அதுவும் நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு தன் சக்தியை மீறி உருட்டி உடைத்தது. இறுதியில் மனிதர்கள் வேலை முடிந்தவுடன் சரமாரியாக கல்லைக் கொண்டு எறிந்தார்கள்.மண்டையில் வழிந்த இரத்தம் கண்ணீருடன் கலந்து ஓடியது, கோவம் பூண்ட நம் நாய் வெறியுடன் தாக்க முற்பட்டு இருக்கலாம் ஆனால் அவர்களுக்கு வலிக்குமே என நினைத்தது பைத்தியம் பிடித்த நம் நாய்.
ஒரு நாள் அருகம்புல் வாசத்துடன் சேர்ந்திருக்க வேண்டும் என எண்ணி கனவினூடே இரத்தம் சொட்ட கால்கள் நொண்ட உருட்டுகிறது.
நாய்கள் மனிதர்களா இல்ல மனிதர்கள் நாய்களா ??
No comments:
Post a Comment