Translate

Wednesday, April 29, 2015

வலியும் வலிமையையும் !


"
சிந்தையிலுள்ள மையினால் ,
பேனா சிந்தும் இரத்தம்
வாழ்வின் சித்தம் ..."

*****************************************
 
"எழுத்தே,
என் ஆருயிர் நண்பனே !!
வாழ்விலுள்ள சந்திப்பிழைகளை யார் திருத்துவார் ?
முட்டாளே,
என் அர்தமற்ற நண்பனே !!
மகிழ்ச்சியெனும் வைட்னர் உள்ளதே !!
நீ என்றரிவாயோ .... "

*****************************************

"வேண்டாமென்றாலும் நெருங்கி வரும் நினைவு,
வேண்டுமென்றாலும் தூரம் செல்லும் நிம்மதி !
வரவேற்பரையில் துன்பம் அமர ,
வாசலில் இன்பம் நிற்கும் !
இன்னல்கள் மின்னலாய் தாக்கும் ,
மகிழ்ச்சியின் கண் பொசுங்கும்,
குரோதம்,
வன்மத்தின் முகங்கள் வினாயெழுப்ப,
குருடனாய் விடைக் கொடுத்தேன்"

No comments:

Post a Comment