கையில் கடிகாரம் இல்லை
மகிழ்ச்சியின் நேரம் தெரியும்,
பள்ளி மணி ஓசை !
மழையே வா ,
கடவுளை வேண்டும்
விவசாயி பள்ளி மாணவன் !
காலைப் போட்டாலும் போடாவிட்டாலும் ,
காலில் போடுவார்
தமிழய்யா !!
வகுப்பு தேர்வு, மர மண்டைகளின்
வினாக்களைச் சுமக்கும் ,
மர பெஞ்சுகள் !!
கணக்கு பரீட்சை,
பச்சைக் குத்தும் மோகம்
பார்முலாக்கள் !!
படிக்காத வாண்டுக்கு
ஆசிரியரின் ஆசீர்வாதம்
நறுக்கென கொட்டு !
No comments:
Post a Comment