Translate

Wednesday, February 26, 2020

Jaywalkers near chennai central -

Jaywalkers near chennai central : Nov 28/2019,

After this i saw a change in traffic, dont know whether it had reached them though i take it.

சென்னை போக்குவரத்து காவல் ஆணையம் சில மாற்றங்களை நேற்று முன் தினம் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் அருகே கொண்டு வந்தது. சென்னை சென்ட்ரல் மெட்ரோ பணிகள் 80 % முடிந்த நிலையில், பூங்கா நகர்/ பூங்கா ரயில் நிலையம் செல்வதற்கு சுரங்க பாதை மக்களுக்கு திறந்து வைத்துள்ளார்கள்; சென்னை புறநகர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து குறிப்பாக பூங்கா நகர் செல்லும் மக்கள் போக்குவரத்து விதிகளைக் கவனிக்காமல் பூந்தமல்லி நெடுஞ்சாலையை குறுக்குமறுக்காகச் செல்கிறார்கள் (JAYWALKERS) ஆதலால் பல்லவன் சாலையிருந்து வரும் வாகனங்கள் , ரிப்பன் பில்ட்டிங் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் சற்றே போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது இதனால் பெரும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. அருகிலே அரசு மருத்துவமனை இருப்பதால் விரையும் ஆம்புலன்சுக்கு பெரும் இடர்பாடாகிறது. இந்த முன்னெடுப்பு வரவேற்க வேண்டியது. சென்ட்ரலிலிருந்து பூங்கா நகர் செல்வோர் புதிதாக இரண்டு வழியாக இருக்கும் மெட்ரோ சுரங்கபாதகியை உபயோகிக்கலாம். அதில் மின்படிக்கட்டு இருப்பது இன்னும் சிறப்பு.
இதெல்லாம் ஒரு புறம் இருக்க , பூங்கா நகர் ரயில் நிலையத்திலிருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் போகும் சுரங்கப்பாதையின் நிலையை ஏன் கணிக்க தவறினார்கள் என்பது பெரும் வருத்தமாக உள்ளது. 2012 ஆம் ஆண்டின் கணக்கு படி 30000 பயணிகள் அம்மார்க்கத்தை பயன்படுத்துகிறார்கள் என புள்ளி விவரம் சொல்கிறது, இன்றைய நாளில் திருவாங்மயூர், பெருங்குடி , தரமணி ஆகிய இடங்களில் நிறுவப்பட்டிருக்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகம் அதே போல பயணிக்கும் மக்களும் கடந்த ஏழு ஆண்டுகளில் 100 மடங்காக உயர்ந்துள்ளது என்பது புரிந்துகொள்ளக்கூடியவொன்று.
சில புரிதல்கள் :
# MRTS Phase 1 1997 ஆம் ஆண்டு மக்களுக்கான சேவை தொடங்கப்பட்டு திருமயிலை வரை ரயில் நிலையங்கள் நிறுவப்பட்டது (6 பெட்டிகள் கொண்ட தொடர் வண்டி என்பதை குறிப்பிட வேண்டும்).
# அன்றைய மக்கள் பயன்பாடென்பது சொற்பமே ஆகையால் அப்போதைய சுரங்கப்பாதை கட்டமைப்பு ஒரே நேரத்தில் 150 க்கும் குறைவானவர்கள் எந்த வித நெரிசலும் இல்லாமல் பயன்படுத்தலாம் .
# இன்றைக்கு ஒரு ரயிலிலிருந்து(9 பேட்டிகள் கொண்ட தொடர்வண்டி ) பார்க் டவுன் இறக்கும் மக்களின் எண்ணிக்கை (PEAK HOUR – 6 PM to 9:30 PM ) 1000 முதல் 1200 க்குள்ளாக இருக்கலாம்.
# சென்னை புறநகர் ரயில் நிலையத்திலிருந்து அரக்கோணம் மார்க்கமாக செல்லும் சில விரைவு வண்டிகளை பிடிக்கும் முனைப்பில் இருக்கும் மக்களின் அவசரத்தை நம்மால் புரிந்து கொள்ளமுடிகிறது, இதனூடே கும்முடிபூண்டி மார்க்கமாக செல்லும் வண்டிகளும் சேர்க்கலாம் ஏனெனில் குறிப்பிட்ட நேரத்தில் தான் பொன்னேரி/சூலூர்பேட்டை வழியாக செல்லும் வண்டிகள் இயங்கும்.
# ஒரே நேரத்தில் 100 முதல் 150 வரை செல்லும் சுரங்கபாதையில் 500 க்கும் மேற்பட்ட மக்கள் உபயோகித்தால் , நெரிசலில் சிக்கி மூச்சு திணறலும், தள்ளு முள்ளும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
# தேவையில்லாத விபத்துகளை தவிர்ப்பது நம் கடமை.
இந்த சுரங்கப்பாதையை விரிவாக்குவதற்கான முயற்சிகளை ஏற்படுத்தினால் மக்கள் எந்த வித பாதிப்பின்றி பயணிப்பார்கள். இதற்கேற்ப சில வழி வகைகளை தீர்க்கமாக செயலாக்கினால் மக்களுக்கு நன்மை பயக்கும். சென்னை போக்குவரத்து காவல் துறையின் இம்முன்னெடுப்பு பாராட்டுக்குரியது இருப்பினும் இத்தைகைய இன்னல்களையும் மனிதில் கொள்ள வேண்டும்.
சில மைண்ட் வாய்ஸ்கள் :
"பெருமையா நின்னு போக வேண்டியது .. என்ன அவளோ அவசரம் "..
"ஏன் அடுத்த வண்டில போனா ஆகாதா ??"
"ஜனங்களுக்கு பொறுமையே இல்ல சார் .. "
சிரமங்கள சொல்லித்தானே ஆகணும் பாஸ் ..

No comments:

Post a Comment