Translate

Wednesday, November 21, 2018

நெருக்கமான பத்து திரைப்படங்கள்

        மிக நெருக்கமான பத்து திரைப்படங்கள் இருப்பின் பதிவிடுக எனும் சவாலை நண்பர் விட்டிருந்தார், இதை சவாலென வகைமைப் படுத்தாமல் நான் தனிப்பட்ட முறையில் பாதித்த ரசித்த படங்களை குறிப்பிடுகிறேன். இதில் அனைத்து படங்களும் ஒரே வரிசையே ..
*சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயாகந்தனின் எழுத்தில் பீம் சிங் இயக்கிய திரைப்படம் (1977). மாற்று சினிமாவுக்கான பெரும் முயற்சி.
*கில்லா (killa) 2015ஆம் ஆண்டு வெளியான மராட்டிய திரைப்படம், பதின் வயதின் தனிமையை வலியை கண்ணீரற்று சொல்லும் படம், படத்தின் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் அவினாஷ் அருண், மாசான்(Masan) படத்திற்கும் இவரே ஒளிப்பதிவு.
*போஸ்ட் மாஸ்டர், சம்பந்தி(sampanti), மோனிஹரா (monihara)..1960 களில் வங்காள மொழியில் வெளிவந்தது, மூன்றுமே தாகூரின் சிறுகதைகள், இதை சத்தியஜீத் ரே இதயத்திலிருந்து படமாகியிருப்பார்.
*திதி (thithi)- 2016 ஆம் ஆண்டு வெளியான கன்னட மொழி திரைப்படம். ராம் ரெட்டி இயக்கித்தில் ஒரு வாழ்வியல் அனுபவம். அந்த கதை மாந்தர்களை அருகே பார்த்த உணர்வு வரும்.
*நச்சோம்-ஐய-கும்பஸார் (Nachom-ia Kumpasar) 2015ஆம் ஆண்டு வெளியான கொங்கனி திரைப்படம், உலகதரத்தில் எடுக்கப்பட்ட மியூசிக்கல் டிராமா.. பரோட்டி இயக்கியது. அவசியம் பார்க்க கற்க வேண்டிய திரைப்படம்.
*அன்னையும் ரசூலும் (annaiyum rasoolum ) 2013 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாளப் படம், ராஜிவ் இயக்கியது, நடிப்பதற்கு கை தட்டலாம் நடிக்காமல் இயல்பாய் இருத்தமைக்கு கொண்டாடலாம், பாஹத் பாசில் நடிப்பின் நாடியை தொட்டு பார்க்காமலே புரியும் மகா கலைஞன். ஆண்ட்ரியாவும் இணையாக வாழ்ந்திருப்பார். (பாசிலின் ஐயோபின்டே புஸ்தகம், தொண்டிமுதல் த்ரிஷ்யம் இன்னும் பல படகளில் அசாத்திய நடிப்பை காணலாம்)
*அங்காமலே டையரீஸ் (angamalay diaries) 2017 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாளத் திரைப்படம், லிஜோ எனும் மாபெரும் திரைமொழியில் காட்சியினூடே நம்மை வியக்க வைக்கும் ஒரு படைப்பு.
*வீடு - 1988 ஆம் ஆண்டு வெளியான ஒரு மென்மையான பூ ... பாலு சார் இயக்கத்தில் ஒவ்வொரு வீட்டின் கதைவை தட்டி உணர்வை தூண்டும் ஓர் உன்னதமான திரை கவிதை.. எம்.ஏ. சொக்கலிங்க பாகவதரின் சின்ன பார்வை போதும் நம்மை அழ வைக்க..
*உதிரிப்பூக்கள் - மகேந்திரன் சார் இயக்கத்தில் "சிற்றனை " சிறுகதையை திரைப்படமாக தீட்டும் தூரிகை மகேந்திரன் சாரிடம் மட்டுமே இருக்கிறது. புதுமைப்பித்தன் இருந்திருந்தால் இந்த படைப்பை சிலாகித்திருப்பார். தமிழ் சினிமாவின் முக்கிய விலாசம் இந்த படம். 'நண்டு' படத்தை விட்டு நம்மால் நகர இயலாது. மகேந்திரன் சாரின் மற்றொரு பூ...
* சபாபதி (1941) - ஏ.வி.எம்மால் இயக்கப்பட்ட முதல் முழு நீள நகைச்சுவை திரைப்படம். இன்றளவும் திகட்டாத படம், டி.ஆர்.ராமச்சந்திரன் தமிழின் பஸ்டர் கீடன்.. மறுமுனையில் ரத்தனம் போற்ற படாத கலைஞன்.. அவசியம் பார்க்க வேண்டிய படம்...
கேட்டமைக்கு மிக்க நன்றி ராகவ்..

No comments:

Post a Comment