~ ஊக்கப்படுத்தாமல் விடுங்கள்
ஆனால் ஊனப்படுத்தாதீர்கள் ~
எல்லோரும் ஒரு திசையை நோக்கி பயணிக்கையில் சமூகம் அதை ஆதரிப்பின் அது சரியாகுமா ? தனக்கான வாழ்வை சீனா களிமண்ணைப் போல் சமூகத்திற்காக உருமாற்றுவது அத்திசையிலே! பிறந்தோம், 'விந்தை' செய்து பெற்றோம், மலம் கழித்தோம், பணத்தை பார்த்தோம், சேர்ந்தோம் - அத்திசையிலே! வாழ்வதற்கும் பிழைப்பதற்கும் பெரிய வேறுபாடு உண்டு.நீங்கள் அத்திசையில் பயணிப்பதால் மற்றவர்களையும் அவ்வாரே வாருங்கள் என்பது சொல்வது துணை தேடும் செயல். இக்காலக்கட்டத்தில் யார் வேண்டுமானாலும் பி.பீ.ஓ, தகவல் தொழில்நுட்பதிலோ அல்லது செய்முறை பணியிலோ ஜொலிக்கலாம், ஆனால் மிகவும் அரிதாக சிலரை சிறுகதையாசிரியனாய், கட்டுரையாசிரினாய், புகைப்பட கலைஞனாய், வீதி நாடக நடிகனாய், நடிகனாய், இயக்குனராய், ஓவியனாய், கவிஞராய், பாடகனாய், எழுத்தாளராய் ,விளையாட்டு வீரனாய் பார்க்கமுடியும், இவர்களுக்கு பொருளீட்டுவது சிரமம் ஆனால் ஆற்றல் கிழக்கின் வரம், எல்லோருக்கும் வாய்க்காது. இங்கு அனைவருக்கும் அங்கீகாரம் தேவை, இருப்பின் எல்லோரிடமும் பெரிய சிபாரிசும் இல்லை ஊரறிந்த வாரிசும் இல்லை, இவர்களுக்கு வெற்றி தாமதமே தடுமாற்றமல்ல.
இக்கலைஞர்கள் உங்கள் நண்பனாக, உறவாக அல்லது மூன்றாவது மனிதனாக கூட இருக்கலாம் நீங்கள் அவர்களை ஊக்கப்படுத்தாமல் இருந்தால் பரவாயில்லை ஆனால் ஊனப்படுத்தாதீர்கள். வெறும் பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல. சிறந்த படைப்புகளை வாஞ்சையுடன் பாராட்டுங்கள் வஞ்சகமாக வேண்டாம், அத்திசையில் பயணிப்போருக்கு பேராசையிருக்கும் தானும் இக்கலைஞர்களாக இருக்கலாம் அதன் முடிவில் இருப்பது பொறாமை மட்டுமே!
சிறிய கர ஒலி சிலரின் வாழ்வின் ஒளியாக மாறும், இவர்களின் அவனி தனி முடிந்தவரை மனமார பாராட்டுங்கள் அல்லது ஒதுங்கி இருங்கள், முக்கியமாக பெற்றோர்கள் தன பிள்ளையின் திறமையை கை உயர்த்தி பிடித்தால் மட்டுமே போதும்.கலையின் வேட்கை எப்பொழுதும் மற்றவர்களுக்கு வேடிக்கையே..
ஆனால் ஊனப்படுத்தாதீர்கள் ~
எல்லோரும் ஒரு திசையை நோக்கி பயணிக்கையில் சமூகம் அதை ஆதரிப்பின் அது சரியாகுமா ? தனக்கான வாழ்வை சீனா களிமண்ணைப் போல் சமூகத்திற்காக உருமாற்றுவது அத்திசையிலே! பிறந்தோம், 'விந்தை' செய்து பெற்றோம், மலம் கழித்தோம், பணத்தை பார்த்தோம், சேர்ந்தோம் - அத்திசையிலே! வாழ்வதற்கும் பிழைப்பதற்கும் பெரிய வேறுபாடு உண்டு.நீங்கள் அத்திசையில் பயணிப்பதால் மற்றவர்களையும் அவ்வாரே வாருங்கள் என்பது சொல்வது துணை தேடும் செயல். இக்காலக்கட்டத்தில் யார் வேண்டுமானாலும் பி.பீ.ஓ, தகவல் தொழில்நுட்பதிலோ அல்லது செய்முறை பணியிலோ ஜொலிக்கலாம், ஆனால் மிகவும் அரிதாக சிலரை சிறுகதையாசிரியனாய், கட்டுரையாசிரினாய், புகைப்பட கலைஞனாய், வீதி நாடக நடிகனாய், நடிகனாய், இயக்குனராய், ஓவியனாய், கவிஞராய், பாடகனாய், எழுத்தாளராய் ,விளையாட்டு வீரனாய் பார்க்கமுடியும், இவர்களுக்கு பொருளீட்டுவது சிரமம் ஆனால் ஆற்றல் கிழக்கின் வரம், எல்லோருக்கும் வாய்க்காது. இங்கு அனைவருக்கும் அங்கீகாரம் தேவை, இருப்பின் எல்லோரிடமும் பெரிய சிபாரிசும் இல்லை ஊரறிந்த வாரிசும் இல்லை, இவர்களுக்கு வெற்றி தாமதமே தடுமாற்றமல்ல.
இக்கலைஞர்கள் உங்கள் நண்பனாக, உறவாக அல்லது மூன்றாவது மனிதனாக கூட இருக்கலாம் நீங்கள் அவர்களை ஊக்கப்படுத்தாமல் இருந்தால் பரவாயில்லை ஆனால் ஊனப்படுத்தாதீர்கள். வெறும் பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல. சிறந்த படைப்புகளை வாஞ்சையுடன் பாராட்டுங்கள் வஞ்சகமாக வேண்டாம், அத்திசையில் பயணிப்போருக்கு பேராசையிருக்கும் தானும் இக்கலைஞர்களாக இருக்கலாம் அதன் முடிவில் இருப்பது பொறாமை மட்டுமே!
சிறிய கர ஒலி சிலரின் வாழ்வின் ஒளியாக மாறும், இவர்களின் அவனி தனி முடிந்தவரை மனமார பாராட்டுங்கள் அல்லது ஒதுங்கி இருங்கள், முக்கியமாக பெற்றோர்கள் தன பிள்ளையின் திறமையை கை உயர்த்தி பிடித்தால் மட்டுமே போதும்.கலையின் வேட்கை எப்பொழுதும் மற்றவர்களுக்கு வேடிக்கையே..
ஊக்குவிக்க ஆளிருந்தால்
ஊக்கு விற்கும் ஆள் கூடத்
தேக்கு விற்பான்
- வாலி
ஊக்கு விற்கும் ஆள் கூடத்
தேக்கு விற்பான்
- வாலி
No comments:
Post a Comment