Translate

Tuesday, June 28, 2016

அனாதைமை


ராகு காலத்தின் கழிவடையில்
நல்ல நேரத்தின் நுழைவில்,
தேடித் தேடி
இரண்டு ரூபாய் வித்தியாசத்தில்
உச்ச பட்ச மரியாதையுடன்
அமர மனைக்கட்டை,
அருகே அருகம்புல் ,
வண்ணக் குடை,
எருக்கம் பூ மாலையென
வீடுவரை ஊர்வலம்;
நடு வீட்டில் ஒய்யாரமாய்
விளக்கின் ஒளியில்,
மணியின் ஒலியில்,
முன்னே பண்டங்கள் காற்றோடுவதற்கு முன்
பின்னே வரும் காக்கை கவ்விய பின்,
அசராமல் இருப்பார்;
உலர்ந்த அகர்பத்தி சாம்பல்கள்
மணம் சூழ மூன்று நாட்கள்,
மகிழ்ச்சியின் உச்சியில்
மற்றும் ஓர் ஊர்வலம் இறுதியாக,
கரையப் போகும் பேரானந்தம்
கிணற்றிலோ,
ஆற்றில்லோ,
கடலிலோ ..
ஆனால் இவர்களுக்கு
இரண்டு ரூபாய் வித்தியாசமோ ,
அச்சின் பிசகோ,
இந்த அனாதைமை பிள்ளையார்கள்
பிளாட்பாரத்தை அலங்கரிக்கும்
மழை வர வேண்டி ...

No comments:

Post a Comment