அப்படத்தின் காதலை இணைக்கும் பாலம் Somerset Maugham novel, இயக்குனரோ அல்லது உதவி இயக்குனரின் இலக்கிய ஆளுமை என்பதில் அதிலே புலப்படும்.இந்த படம் ஓர் உண்மை கதை என்பதை ஒவ்வொரு காட்சி படிமம் உறுதி செய்யும். காதல் தோல்வியின் உணர்வின் பிரதிபலிப்பு உடைந்த கண்ணாடி மனதின் துகள்கள் சொல்லும், அவ்வுணர்விற்கு விதவை கோலத்தின் வண்ணம் பூசாமல், பூ வைத்து அழகு பார்த்திருப்பார் இயக்குனர், தமிழ் திரையுலகில் மிக முக்கியமானவர். இந்த படம் தோல்வியை தழுவியது, நேர்த்தியாக திரைக்கதை அமைக்கவில்லை, ஒரே பாணி தான் என்று பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும், அப்படம் ஓர் உணர்வின் குவியலே! இன்று தொழில்நுட்பம் நம் உறுவுகளை நொடிப் பொழுதில் அருகே அழைத்து சென்றாலும் அவர்களின் மனதை புரிந்துணரும் நேரம் தூரமே!! ஒரு இன்லண்ட் கடிதம் அல்லது போஸ்ட் கார்டு உறவுகளை அர்த்தப்படுத்தும், அப்படியொரு முக்கியமான கருவியாக கடிதங்கள் இப்படத்தில் முக்கிய பங்கு வகிக்கும், இந்தக் காலத்தில் இப்படியொரு கதையை சிந்திக்க துளி கூட வாய்ப்பில்லை அதனால் தான் பீரியட் படங்கள் வருகிறோதோ. வெற்றிமாறன், மிஷ்கின் இப்படத்தின் உதவி இயக்குனர்கள், படத்திலும் சில காட்சிகளில் தோன்றுவார்கள். எவ்வளவு முறை பார்த்தாலும் AR இன் இசை புதிதுப் போல தோன்றும், வாலியின் வரிகள் வலியின் தீரா தைலம். இப்படத்தை கட்டமைத்தவர் கதிர் சார். கவிதை எழுத இயற்கையும் சூழலும் தேவையில்லை மனதிற்கு பிடித்த படைப்புகளைப் பார்த்தாலும் தான்..
"காதல் வைரஸ்" பரவாத மனசில்லை ..
No comments:
Post a Comment