Translate

Wednesday, May 27, 2015

இளங்கோ எப்போது மலையாளியானான் ??? !!!

இளங்கோ எப்போது மலையாளியானான் !!

 நிசப்தத்தின் உச்சம், வியர்வையின் மிச்சம். கீழே சில நகத் துகள்கள் தரையை நட்சத்திரம் போல் அலங்கரிக்க,

 "யாருப்பா இங்க இளங்கோ ??"
" சார்.." என்று கை மேல உயர்ந்தது.
"நீங்க டாட் நெட் ஆ ஜாவா வா ???"
"டாட் நெட்"
"அந்த ரூம்க்கு போங்க,  சோழா ன்னு எழுதிருக்கும் " என்று அந்த நபர் கூறி நகர்ந்தார்.

இளங்கோவின் கண்கள் பயத்திலிருந்தது அதனுடன் நகக் கண்களும் பதட்டத்திலிருந்தது, கண்ணாடி கதவை திறக்கும் போது வாயைத் திறந்து பதில் சொல்ல வேண்டும் என்பதை மனதில் கொண்டு என்பதாவது இண்டர்வ்யுவிலாவது வேலை கிடைக்க வேண்டும் என்று
"மே ஐ கம் இன் சார்.. ???"
"எஸ் ... ப்ளீஸ்" என்றது ஒரு பெருத்த உருவம்
"சிட் டவுன் !!"
"சார் !! மை ரெசுமே!!" என்று இளங்கோ நீட்ட, கேள்விகள் ஆரம்பித்தது. எல்லாம் படித்தது தான் ஆனால் அந்த நேரத்தில் நினைவிற்கு வரவில்லை வந்ததெல்லாம் படிக்கும் காலத்தில் புரிந்து படித்திருந்தால் சிரத்தையுடன் கவனித்திருந்தால் இந்த நேரத்தில் தலை சொறியாமல் இருந்திருக்கலாம் என்பது மட்டுமே.
"என்ன இளங்கோ எல்லாத்துக்கும் ஒரே வார்த்தைல பதில் சொல்றீங்க , எஸ் ஆர் நோ ன்னு , இந்த மாதிரி ஒரே வார்த்தை மட்டும் பேசினீங்கனா யாருக்கும் உபயோகம் இல்ல. நீங்க தெரியாம MCA படிச்சிடீங்க, உங்களுக்கு சப்ஜெக்ட் நாலெட்ஜ் சுத்தம்மா இல்ல, சாரி டு சே ஆனா இதான் பாக்ட்" என்று அந்த உருவம் இளங்கோவின் மனதைச் சிதைத்து.

    "தேங்க்ஸ் சார் " என இளங்கோ வெளியே நடக்க ஆரம்பித்தான், அந்த நபர் சொன்னது நிதர்சனமான உண்மை என அவனுக்கு தெரியும், ஆனால் தன் தந்தைக்கு தெரியவில்லை இவனுக்கு உகந்த படிப்பில்லை என்று,நடந்துக் கொண்டே இருந்தான் போகும் வழியில் நகராட்சி பூங்கா இருந்தது அதனுள் சென்றான், மூன்று மணி வெயிலின் சூடு அந்த சிமெண்ட் பெஞ்சில் மேல் படுத்தான், அங்குள்ள பச்சை பச்சையான  செடி கொடிகளை பார்த்தே தனுக்கு பத்திரிகையாளன் ஆகா வேண்டும் என்ற கனவும் பச்சைப் பசேலென்று தழைத்ததை அந்த இலைகளில் கண்டான், ஆனால் கணினி படித்துவிட்டு யாராவது பத்திரிகையில் தன்னை சேர்ப்பார்களா என்ற கேள்வியும் மாலை வேளையில் உதித்தது, இந்த வேலையும் போனதா என்று வீட்டில் கேட்ப்பார்களே அதன் கவலையும் சேர்ந்து மிக்சியில் அறையும் சட்னியாய் உழன்று விட்டத்தைப் பார்த்தான்.

    சட்டென்று ஒரு குடிகாரன் இளங்கோவைத் தட்டி, தள்ளாடிக் கொண்டே "டேய் .. இந்த என் பெஞ்சு ஏந்திரி.." என்றான்.
இளங்கோ எந்த பதில் சொல்லாமல் எழுந்தான் எதுவும் பேசாமல் நகர ஆரம்பித்தான்.
அந்த குடிகாரன் என்ன நினைத்தானோ திடீரென "டேய் .. தம்பி! இங்க வா !!" என்றான்
அருகில் வந்தான் இளங்கோ.

        "என் போதைக்கு நீ குடிக்க முடியுமா ?? இல்ல உன் பசிக்கு நான் துன்ன முடியுமா?? உன் வாழ்க்கைய வாழு போ ... தூர போ ..." என்றான் குடிகாரன்.
பூங்காவிலிருந்து வெளியேறினான் இளங்கோ, நடக்கும் வழியெங்கும் அந்த குடிக்கரனின் சொற்கள், "வாழு போ" எவ்வளவு உண்மை. தீர்த்தத்தை குடித்தால் கூட ஒருவன் இந்த அளவுக்கு எதார்த்தத்தை சொல்ல முடியுமா ஆனால் டாஸ் மாக் நேக்கா சொன்னது, அந்த நொடியிலிருந்து ஒரு பெரிய தெளிவு கிடைத்தது. சில மணி நேரம் முன் ஒருவர் என்னை பின் தள்ளினார் இன்னொருவர் படிக்கட்டுகள் அருகே தான் இருக்கிறது என்று உரைத்தார். வீட்டில் எல்லாம் தூங்கியவுடன் செல்லலாம் காலையில் என் முடிவை சொல்லலாம் என தாமதமான மின் தொடரில் ஏறினான்.
      ஒரு சில சொற்கள் நம்மை எழ வைக்கிறது என்பதை அசைப் போட்டு யாருமில்லாத ஜன்னல் ஓரத்தில் தலையை சாய்த்து எதிர் காற்றை நோக்கினான்.தான் இறங்க வேண்டிய ரயில் நிலையம் வந்தது அதில் சொற்ப மக்களே இறங்கினர், ரயில் சென்றப் பின் இரும்புப் பாதையைக் கடந்தனர், இறுதி பெட்டியில் ஏறியதால் இவன் பின்னே நடந்து வந்திருந்தான் இவன் முன்னே ஒருவர் நடந்துக் கொண்டிருந்தார்.  இரும்புப் பாதையை அவர் கடக்க முற்பட்டார் அப்போது மறு புறம் வேகமாக ஒலியில்லாமல்  ரயில் வந்துக் கொண்டிருந்தது அதை இளங்கோ பார்த்தான் அவரும் பார்ப்பார் என்று எண்ணினான் ஆனால் அவர் எதோ ஒரு நினைப்பில் முன்னோக்கி சென்றார்.

   "அண்ணாணா .... பாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....அண்ணாணா ட்ரைன்ன்ன்"  ஒரே அலறல் இளங்கோவிடமிருந்து.
அந்த சொற்கள் அவரை திரும்பி பார்க்க வைத்தது, சட்டென்று பின் வாங்கினார், ரயில் கடந்தது வேகமாக. மெதுவாக வந்தான் இளங்கோ.
"அண்ணே ... என்ன.. ணே இனி பாத்து வாங்க.."
"அனுஜா ....நண்ணி... சாரி !! தேங்க்ஸ்"
"மலையாளம் புரில பரவா ல உங்க கண்ணுல புரியுது"
"ட்ரைன்  வந்நது ஸ்ரேடிச்சில்லா ..."
"சரி .. விடுங்க ..பாத்து போங்க அண்ணே !!"
"என்ட குட்டிகள் இந்த பிஸ்கெட்டை கழிக்கும் ... வளர நண்ணி" கண் கலங்க சொல்லி நகர ஆரம்பித்தார் திடீரென்று நின்று
"நீ என்ட அச்ச்சனப் போலே ....." என்று அழுதார்.

சில சொற்கள் நம்மை பின்னும் தள்ளும், முன்னும் தள்ளும் மனிதனாகவும் மாற்றும் இன்னும் சில நேரத்தில் மலையாளியாக்கும்.

இளங்கோ மலையாளியானான் !!!!

No comments:

Post a Comment